<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-22403178</id><updated>2011-07-07T20:07:49.208-07:00</updated><title type='text'>ஓகை</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>61</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-7643576893449549464</id><published>2008-07-26T10:53:00.000-07:00</published><updated>2008-07-26T12:10:36.403-07:00</updated><title type='text'>இநி</title><content type='html'>&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;அறிவியல் புனைகதை.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;சில நூறு டெர்ரா பைட்டுகளுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன் பாஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்ட அந்த நினைவுத்திசுக் கடை இன்று உலகெங்கும் இநிக்களிடையே மிகப் பிரபலம். அந்த சில நூறு டெர்ரா பைட்டுகளின் கதையைத் தான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;2005ம் ஆண்டு மார்ச்சு மாதம். பாஸ்டன் நகரில் டாக்டர் குரூஸ் வீட்டின் மாடியில் அவரது அறை மேஜையின் மீது ஒரு கொத்து காகிதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த காகிதங்களின் மேல் மரத்தாலான ஒரு பேப்பர் வெய்ட். நல்ல கருங்காலி மரத்தில் கடைசல் செய்யப்பட்டு, வெகு நாட்கள் கைபட்டு கைபட்டு வழவழப்பாய் மெருகேறியிருந்தது. சதுரங்கத்தின் கருப்புச்சிப்பாய்க் காய் போன்ற வடிவத்தில் பெரிதாக ஆனால் கைக்கு அடக்கமாக வெகு அழகாகத் தான் இருப்பதைத் தெரிவித்துக் கொண்டிருந்தது. அந்த மிக விசாலமான அறை நிறைய கலைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு முந்தய தோற்றத்தில் இருந்தது. டாக்டர் குரூஸ் பழங்கலைப் பொருட்களின் பரம ரசிகர். ஒரு ஏலக்கடையில் மிகவும் விரும்பி இந்த பேப்பர் வெய்ட்டை வாங்கி வைத்திருந்தார். அப்போது அவருக்கு அதன் பெருமை தெரிந்திருக்கவில்லை. அந்த அறைக்குவரும் அழகு சொட்டும் மாடிப்படியைக் கூட பழங்கால முறையில் மரத்தால் அமைத்திருந்த குரூஸ் 'தட்' 'தட்' என்ற பூட்ஸ் காலடி ஓசையோடு மேலே வந்தார். தன் இருக்கையில் அமர்ந்து அந்த காகிதக் கொத்தின் மேலிருந்த பேப்பர் வெய்ட்டை எடுத்து சற்று தள்ளி வைத்துவிட்டு எழுத ஆரம்பித்தார். எழுத ஆரம்பிக்குமுன் அதை வாஞ்சையோடு ஒரு தடவு தடவினார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;அந்த வெய்ட்டின் உள்ளிருந்த மர ரேகைகளுக்குள் ஒரு புள்ளியாய் உறைந்திருந்தான் ராமமூர்த்தி. குடந்தை ராமமூர்த்தி என்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். இந்த வாழ்க்கையில் அவன் இரு விதமாக இருந்து கொண்டிருந்தான். பல நேரம் அந்த கருப்பு மர வெய்ட்டினுள்ளே ரேகைகளுக்கிடையே ஒரு புள்ளியாய் கூட்டுப்புழுவைப் போன்றதொரு ஆழ்நிஷ்டை வாசம் ஒரு விதம். சில நேரங்களில் முண்டி முண்டி வெளியுலகைக் காணும் தீராத ஆசையொடு சில நானோமீட்டர்கள் அந்த ரேகைகளின் ஊடே அசைவாட்டம் இன்னொரு விதம். சில நாட்களுக்கு மட்டும் எங்கும் தடையின்றி பறந்து உலாவும் பட்டாம்பூச்சி போன்றதொரு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவிட்டால், தன் மிச்ச எச்சங்களை ஒரு முறை கண்டுவந்துவிட்டால் பிறகு மீண்டும் பல நாட்களுக்கு அந்த மர வெய்ட்டினுள்ளே கூட்டுப்புழு வாசத்திற்கு தயாராய் இருந்தான்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;டாக்டர் குரூஸ் பத்திரிக்கைகளுக்க வினோதமான தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுபவர். எழுபது வயதைக் கடந்த அவருக்கு கையால் எழுதுவதுதான் எப்போதும் பிடிக்கும். இப்போது 'மரணத்திற்குப் பிறகு ஏன் மனிதன்' என்று இன்னுமொரு கட்டுரை எழுதிக் கொண்டிருந்தார். நம்முடைய காத்து கருப்பு சமாசாரம்தான் என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. அவருடைய பெற்றோர்களும் மூதாதையர்களும் காலம் காலமாக பேய் ஓட்டும் தொழில் செய்வதாகக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு இருந்தவர்கள்தான். ஆனால் இவர் அப்படி இல்லை. இந்த ஆராய்ச்சியில் தன்வாழ்வையே அர்ப்பணித்திருந்தார். மருத்துவத்தில் 'காக்னிடிவ் நியூரோசைன்ஸில் (cognitive nueroscience) முதுகலைப் பட்டம் வாங்கியவர். அவரது இல்லமே ஒரு பெரிய ஆராய்ச்சிக் கூடம்தான். அவர் எழுதுகிறார்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"உடலியக்கித்திற்குத் தேவையான கூறுகளைத் தவிர்த்துப் பார்த்தால் மூளையில் இருப்பதெல்லாம் நினைவுகள்தாம். அதாவது பதிவு செய்யப்பட்ட பல்வேறு செய்திகள். சிறு வயதிலிருந்தே ஒரு மனிதன் தான் பார்த்ததும் கேட்டதும் படித்ததும் உணர்ந்ததும் தர்க்கத்தால் அறிந்ததும் போன்ற பலவற்றால் பதியப்பட்ட செய்திகளை தேடிக் கண்டுகொள்ள முடிந்தால், அவையே நினைவுகள். உயிர்வாழ்தலுக்கும் இவற்றுக்கும் சம்பந்தம் இருந்தே ஆகவேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொண்டோமானால் பல அடிப்படை கேள்விகள் விடையளிக்கப் படாமலேயே இருக்கும். நினைவுகள் இயங்காத உயிர்வாழ்தல் 'கோமா' என்றால் அதைப்போன்றதொரு எதிர்நிலை இருந்தே தீரும். அதாவது உடலும் உயிருமற்று நினைவுகள் மட்டுமே இயங்குவதான ஒரு நிலை............" ...................... "அவையே இயங்கும் நினவுகள், இநி." &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;இவ்வாறு காற்றில் மிதக்கும் பல 'இயங்கும் நினைவு'களை பிடித்து தக்கை நெட்டிகளில் செலுத்தி ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்திருந்தார். ஆனால் ராமமூர்த்தி மட்டும் தானாகவே அந்த பேப்பர் வெய்ட்டின் மூலமாக அவரிடம் வந்து சேர்ந்தவன். கும்பகோணத்தில் தன் வீட்டில் நிகழ்ந்த ஒரு விபத்தில் மண்டையைப் பொத்துக்கொண்டு மூளைக்குள் நுழைந்த அந்த மரப்பொருளில் நினைவுத் திசுக்களாய் சிக்கி ஓர் இயங்காத இநியாய் இவரிடம் வந்து சேர்ந்தான். இநிக்கள் மேற்கொண்டு வாழ்வதற்கு அவர்களுக்குத் தேவை மேற்கொண்டு நிகழ்வுகளை தக்கவைத்துக் கொள்ள மேலும் நினைவிடங்கள் என்றறிந்த குரூஸ் இந்த 'இநி'களுக்கு கூடுதல் நினைவிடங்களைத் தருவதற்கு ஒரு முறை கண்டுபிடித்து வைத்திருந்தார். இன்று ராமமூர்த்திக்கு சில நூறு எக்சா(exa) பைட்டுகள் செலுத்தினார். இந்த இநி ராமமூர்த்தியை எப்படி இயங்க வைக்க சில முயற்சிகளும் செய்திருந்தார் இதுபற்றி சிந்தித்தபடியே அவர் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;(டெர்ரா பைட் =1000,000 மெக பைட், எக்சா பைட் = 1000,000 டெர்ரா பைட்)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;அவர் எழுதுவதை நிறுத்திவிட்டு சற்று சிந்தனையில் ஆழ்ந்தார். சிந்தனை சற்று ஆழமாய் போய் இடது கையால் அந்த வெய்ட்டை உருட்டைக் கொண்டிருந்தார். நீண்ட கூட்டுப்புழு வாசத்திற்குப் பிறகு இன்றைய எக்சா பைட் உள்ளீடலால் நிஷ்டை கலைந்த தயார் நிலையில் இருந்த ராமமூர்த்தி அவரது உருட்டலால் முற்றிலுமாக கலைக்கப்பட்டான். அவர் மேலும் எழுதலானார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;br /&gt;"நினைவுகளற்ற உயிர் வாழும் கோமாவின் எதிர்நிலை உடலும் உயிருமற்ற நினைவுகளின் இயக்கம். காணவும் உணரவுமியலாத திசுக்களின் மேலேறி நினைவுகள் இயங்கும்போது.............", சற்று வேகமாக உருட்டப்பட்டதால் மேஜையிலிருந்து கீழே விழுந்த பேப்பர் வெய்ட்டிலிருந்து துடித்தெழுந்து, படபடக்கும் சிறகுகளுடன் நினைவுகளால் செய்த பட்டாம்பூச்சியாய் ராமு புறப்பட்டான். இந்த ஆள் என்னதான் எழுதுகிறார் என்று படித்துப்பார்த்தான். உதடுகளோடு கூடிய உடலிருந்தால் ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்திருப்பான். காற்றசைவில் இயைந்து அவரறியாமல் வெளியேறினான்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;பாஸ்டனிலிருந்து வந்த விமானம் நியூயார்க்கில் தரையிறங்கியது. நியூயார்க் விமான நிலையத்தை மேய்ந்த ராமு சென்னை செல்லும் லுப்தான்ஸா விமானத்தைக் கண்டறிந்தான். லுப்தான்ஸா புறப்பட்டது. சிறிது நேரம் காக்பிட்டில் பயணித்தான். விமானப்பணிப்பெண்ணில் சற்று நேரம். ஒரு முதியவரின் தாடியில் சிறிது நேரம். நெஞ்சில் பொம்மையை அணைத்துக் கொண்டு தூங்கிய குழந்தைக்கருகில் சற்று நேரம் என்று பலநேரம் பயணித்து சென்னை வந்தான். தன்னைப் போலவே சில 'இநி'களையும் விமானத்தில் கவனித்தான். நள்ளிரவில் சென்னை வந்தவனுக்கு நாளை இரவுதான் கும்பகோணத்திற்கு ரயில். இடையில் எத்தனையோ பேருந்துகள் இருந்தாலும், அவனுக்குஅவசரமில்லை. அவன் விருப்பம் அந்த இரவு நேர கும்பகோணம் பாசஞ்சரில் குடந்தை செல்ல வேண்டும், அவ்வளவுதான். சென்னையில் அலைந்தான் திரிந்தான். எழும்பூர் ரயில்நிலையத்திற்கு வந்தான். முன்னெல்லாம் அங்கிருந்துதான் அந்த ரயில் புறப்படும். ஆனால் இங்குவந்த போது நிலைமை மாறியிருந்தது. ரயில் புறப்படுவதை தாம்பரத்திற்கு மாற்றிவிட்டார்கள். இப்போது எழும்பூர் ரயில் நிலையம் வெகுவாக மாறி இருந்தது. உள்ளங்கை போலிருந்த நிலையம் இப்போது உள்ளங்கால்போல் நீண்டுவிட்டது. உள்ளங்கை ரேகைகள் போலிருந்த மீட்டர்காஜ் பாதைகள் எல்லாம் மாறி மண்புழு,மண்புழுவாய் பிராட்காஜ் பாதைகள் அவனுக்கு இவையெல்லாம் பிடிக்காமல் உடனே ஒரு மீட்டர்காஜ் மின்வண்டி பிடித்து தாம்பரம் சென்றான்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;br /&gt;இரவு கும்பகோணம் பாசஞ்சர் தாம்பரத்தில் புறப்பட தயாராய் இருந்தது. ஆயிரம் உயிருள்ள மக்களோடு அவனுக்கு ரயிலில் பயணிக்க பல இடங்கள் இருந்தன. ரயில் புறப்பட்டது. எஞ்சினுக்குச் சென்றான். பெட்டிப் பெட்டையாய் தாவினான். துக்கமே தாக்காத ஒரு நிலை. சந்தோஷம் அதிக சந்தோஷம், மிக அதிக சந்தோஷம் என்னும் நிலைகள் மட்டுமே கொண்டிருந்தான். இரயில் நிற்குமிடங்களில் நிலையங்களில் இறங்கி புறப்படும்போது உள்ளே ஏறிக்கொண்டு...... இரவைக் கிழித்துக்கொண்டு சீறிக்கொண்டிருந்த இரயிலை ஆனந்தித்தான், அனுபவித்தான். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;காலை ஆறரை மணி குடந்தை இரயில் நிலையம். எல்லோரும் இறங்கி விட்டார்கள். அவனுக்கு அவசரமில்லை. வீட்டிற்குப் போகவும் அவசரமில்லை. எதற்குமே அவசரமில்லை. நகர் வலம் செய்யலாமென்று முடிவு செய்தான். மெதுவாய் மாமாங்கொளத்துக்குப் போனான் (மகாமக குளம்). ஒரு வட்டம் அடித்துவிட்டு சற்று தூரம் வந்தவன் காமாட்சியம்மன் கோயிலின் சிறிய கோபுரத்தில் ஏறினான். திடீரென்று வந்த ஒரு காற்றசைவில் ஜிவ்வென்று பறந்து சாரங்கபாணி கோயில் கோபுரக் கலசத்தின் உச்சி ஊசிமுனைக்கு வந்தான். குடந்தை வட்டாரத்திலேயே உயரமான இடத்தில் இருந்து ஒரு பறவைப் பார்வையில் நகரை நோக்கினான். ரம்யம், ரம்யம், மஹா ரம்யம். அதோ கும்பேஸ்வரன் கோயில் கோபுரம். அப்புறம் ராமசாமி கோயில். பிறகு நாகேஸ்வரன் கோயில். அவனுக்கு மிகப்பிடித்த சக்கரபாணிக் கோயில் கோபுரம். அதன்ருகிலுள்ள பள்ளியில்தான் அவன் படித்தான். ஜிவ்வென்று காற்றில் நீந்தி அந்த கோபுரத்திற்கு வந்தான். கோபுரதரிசனத்தைக் கோபுரத்திலேயே கண்டவன் தரையிறங்கி கடைத்தெருவில் நுழைந்தான். அந்த நுழைவாயில் வெங்காய வாசனையை அவன் தவற விடாமல் கோபால்சாமிக் கோயில், பெரிய கடைத்தெரு, ஆஞ்சநேயர் கோயிலைத் தாண்டி முராரி இனிப்புக் கடைக்கு வந்தான். அந்த இடத்துக்கு வந்ததும் காபி கிளப் ஞாபகம் வந்தது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;எதிர்சாரியில் தஞ்சை சாலையில் ஒரு பழையகாலத்து வீடு. பிராமனாள் காபி கிளப் என்று இருக்கும். இப்போது அங்கே புது மோஸ்தரில் ஒரு கட்டடமும் பக்கத்தில் பெட்ரோல் பங்கும் வந்திருந்தது. பெட்ரோல் பங்கெல்லாம் யாருக்கு வேணும்? பக்கத்தில் அந்த திண்ணைவீட்டின் ஒரு பகுதி இன்னும் மிச்சமிருந்தது. அந்தப் பழைய வீட்டின் உள்ளே நுழைந்தான். ஒரு பெரியவர் "சார் என்ன சாப்பிட்றேள்" என்று கேட்டதுபோல் இருந்தது. அவ்ரும் ஒரு 'இநி'யாக அங்கேயே இருப்பாரோ எனத் தேடினான். மெலிந்த தேகமாய் அவர் அறுபது வயதுக்கு மேலிருந்தபோது பார்த்தது. எப்போதும் வியர்வையிலும் சமையலறைப் புகையிலும் வெந்த அவரது வெந்நிற மேனியில் மேலாடையாய் ஒரு டீ டிகாஷன் கலரில் பூணூல் மட்டுமே இருக்கும். நான்கு முழ வேஷ்டி நெய்ததிலிருந்து அன்று வரை ஒரே காரிக்கன் நிறத்தில் மடித்து கட்டியிருப்பார். நெற்றியில் திருநீறும் சந்தனமும் மின்னும். அவரைத்தான் பார்க்கவேண்டும்போல் இருந்தது ராமுவிற்கு. அங்கிருந்து காந்திபார்க் வந்தான். அப்புறம் பந்தடி மேடை. பிறகு சங்கர மடம் பழைய பாலத்தில் காவிரியைத் தாண்டி அவன் படித்த ஆண்கள் கல்லூரி வளாகத்திற்கு வந்தான். ஒரு சிறுவட்டம் அடித்துவிட்டு காவேரியின் வடகரை வழியாகவே வந்து கொண்டிருந்தான். பெருமாண்டி வந்தது. அந்த ஊரில் அவனுடைய உடல் கடைசியாய் புதையுண்டு போன இடம். இந்த மண்ணில் தன்னுடல் கலந்த எண்ணம் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவன் நிஷ்டையைக் கலைத்த நோக்கம் மெதுவாக நிறைவேற ஆரம்பித்ததில் பல டெர்ரா பைட்டுகள் நிறைந்து போயின.&lt;br /&gt;(பெருமாண்டி=இடுகாடு)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;ஆனால் இந்த மகிழ்வும் பூரிப்பும் அவனுள் செலுத்தப்பட்டிருந்த எக்ஸா பைட்டுகளை நிரப்புவதை அவன் இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை. வடகரையோடு மெல்ல வந்து இடதுபுறம் திரும்பி புதுப்பாலத்தில் காவிரியின் தோற்றத்தில் தனக்கில்லாத மெய்மறந்தான். அப்போது காவிரியில் நன்றாகத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இப்படி சுழித்து ஓடும் காவிரி யாரைத்தான் மயக்காது? வடகரையில் பெருமாண்டியும், தோப்புகளும், ஆலும் அரசுமாக பச்சையடிக்க தென் கரை முழுக்கப் படித்துறைகளால் நிறைந்திருந்தது. இதைக் கண்டு சொக்கிப்போவது அவன் வழக்கம். ராமூ..உ. ராமுவே ராமுவை உசுப்பினான். வீட்டுக்குப் போகலாமா? அரசலாற்றையும் பார்த்து விடுவோமே என்று நினத்தான். நகர பேருந்துகள் அவனை தாராசுரம் கொண்டுசேர்த்தன.&lt;br /&gt;(தாராசுரம்= பழைய பயையாறை நகரம்)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;பொன்னியின் செல்வன் கதையில் கல்கி அப்படி வர்ணித்த அரசலாற்றை அவன் தவற விடுவானா? .மாஞ்சோலைகளைக் கடந்து ஆற்றுக்கு வந்தவன் நாகரீகத்தின் சுவடேபடாமல் இன்னும் இடங்கள் இருப்பதில் நிறைந்து மேய்ந்ததில் இன்னும் கொஞ்சம் நினைவகங்கள் நிறைந்தான். தாராசுரம் தண்டவாளத்தில் கால்வைத்து பேலன்ஸ் செய்து நடக்க ஆசை. அங்கு வந்தவனுக்கு ஏமாற்றம். தடிதடியாய் புது சரளைக் கற்களில் பிராட்காஜ் அகலப்பாதை. 'சட், உடனே மீட்டர் காஜைப் பார்க்க வேண்டும்'. குடந்தை ரயிலடிக்கு வந்தான். மாலை சுமார் நான்குமணியிருக்கும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;ரயிலடிக்கு வெளியில் பத்து பதினைந்து பெரிய மரங்கள் இருக்கும். எத்தனையோ வயதான மரங்கள். அதில் ஆயிரம் ஆயிரம் பட்சிகள். கோஷ்டியாய் கானம் பாடிக்கொண்டிருந்தன. பண்டிதர் பலர் கூடி ஓதும் வேதகானம் போலவும், யாகமந்திரங்கள் போலவும், கோஷ்டியாய் சப்தித்தன. இந்த பட்சிகள் யுகம் யுகமாய் இந்த மரங்களே தங்களுக்கு வீடாக வேண்டும் என்று ஜபிக்கின்றன போலும், ராமமூர்த்தியைப் போல. ஆனந்தமாய் தன் வீட்டை நோக்கி காற்றில் மிதந்தான்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;ஜன்னல் வழியே உள்ளே பார்த்தான். பிறகு கூரை மீதேறி முற்றத்திற்கு வந்தான். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தாள் சம்பூர்ணி. இவனுக்கு முகத்தைக் காட்டவோ என்னவோ இவனிருக்கும் பக்கம் திரும்பினாள். பளீரென்ற திருநீறிட்ட இயற்கையான மஞ்சள் முகம். 'பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னி இளமானே' என்று ஒரு காலத்தில் இருந்தவள், இப்போது பார்வையிலேயே நோய் தீர்ப்பவள் போலிருந்தாள். இவளைப் பார்த்தபோது கொஞ்சம் அதிகமாகவே நினைவகம் நிறைந்து போனான் ராமு. வீடு ஏன் களேபாரமாய் இருகிறது. அவனுக்கு அறிந்தவர்கள், அறியாதவர்கள் எல்லாம் இருந்தார்கள். லதா எங்கே? ஆனந்தகுமார் எங்கே? சம்பூர்ணி கூப்பிட்டாள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"லதா..........லதா.."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;லதா என்கிற ஹேமலதா உடனே வந்தாள். கொடி போலிருந்தாள். புது மணப்பெண்ணின் முழுப் பொலிவும் கொண்டு இருபத்து நான்கு வயதுக்கு பூரணமாய் இருந்தாள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"அத்தைகிட்ட அலங்காரம் பண்ணிக்கம்மா. பெண் அழைப்புக்கு அவங்க ஆறரை மணிக்கெல்லாம் வந்துடுவாங்க".&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;லதாக்குட்டிக்கு கல்யாணமா? ராமு நிறைந்து கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"ஆனந்தா...........".&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"இதோ வந்துட்டம்மா".&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"சித்தப்பா கொஞ்ச நேரத்தில வந்துடுவார். நல்லா கவனிச்சுக்கோ. நாளைக்கு லதாவுக்காக மனையேறப் போறவர். கொஞ்சம் கூட முகம் சுளிக்காம கவனிச்சுக்கோ".&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"நீயேம்மா கவலைப்படறே. ஒருத்தருக்கும் ஒரு குறையும் வராது."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;சின்ன வயதிலேயே படுசுட்டியான ஆனந்தன் இப்போது இருபத்தி எட்டு வயதில், துள்ளும் இளமையில் இரட்டை சுறுசுறுப்பில் இருந்தான். ராமுவுக்குத் தெரியும் சம்பூர்ணி இருக்குமிடத்தில் எல்லாரும் எல்லாமும் சுபிட்சம்தான். இவன் கலிபோர்னியாவில் மென்பொருள் பொறியாளனாய் இருந்தானே? திருமணத்திற்காக விடுமுறையில் வந்திருக்கிறான் போலிருக்கிறது. கூடத்தில் மாலையிடப்பட்டு ராமமூர்த்தியின் படம் தோற்றம் மறைவெல்லாம் எழுதியிருந்தது. 'அழகாய்த்தான் இருந்திருக்கிறேன். அதான் சம்பூர்ணி அப்படி சொக்கிப் போயிருந்திருக்கிறாள்'. இல்லை ராமமூர்த்தி அல்லவா சொக்கிப் போயிருந்தான். இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணுரிமை தத்துவத்தை முழுக்க முழுக்க பின்பற்றியவனல்லவா அவன். அவளும் இதை அறிந்திருந்தாள். ஆனால் இதை வாய்ப்பாக நினைக்காமல் போனஸாக நினைத்திருந்தாள். அதனால் வாழ்க்கை முழுக்க கம்பி பதத்தில் வெல்லப்பாகாய் இடைவிடாத சந்தோஷம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;மாப்பிள்ளை யார்? ஒட்டுக் கேட்டதில் அவனும் உள்ளூர்தான். ஆனால் வேலை சென்னையில். அப்படியென்றால் இனி சம்பூர்ணி எங்கிருப்பாள்? ராமுவுக்கு இந்தக் கவலையில்லை. எந்தக் கவலையுமில்லை. ஆனால் அறிந்து கொள்ளஆசைப்பட்டான். இரவில் அம்மாவும் மகனும் பேசிக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"அம்மா ஆறு மாசத்துக்குள் பெங்களூரோ சென்னையோ செட்லாகிவிடுவேன். நீ அமெரிக்காவெல்லாம் வரவேண்டாம். நல்ல பொண்ணாப் பார்த்து வை. மிஞ்சிப் போனால் ஒரே ஒரு வருஷம். இங்கேயே வந்துடுவேன்."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;கொஞ்சம் கொஞ்சமாக நினைவகம் நிறைந்துகொண்டிருந்தான். பெண்ணழைப்பிற்குப் பிறகு ஹேமலதா தங்கத்தாரகைபோல் ஜொலித்துக்கொண்டிருந்தாள். தன்னைக் கனமாக உணர்ந்த ராமுவுக்கு நினவகம் வெகுவாக நிறைந்திருப்பதன் பிரக்ஞை வந்தது. சத்திரத்தில் ஓர் உத்திரத்தில் ஒண்டிக்கொண்டான். அதிகாலை முகூர்த்தம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;அப்போது அவன் முக்கால்வாசிக்கு மேல் நினைவகம் நிறைந்திருந்தான். பெரிய திருமண மாளிகை. மாளிகை நிறைய மக்கள். மங்கல வாத்திய முழக்கம். மணக்க மணக்க சாப்பாடு. இட்லிக்கு கடப்பாவா, கொத்ஸா? சம்பூர்ணிக்கு மைல்க்கல் போன்றதொரு நாள். அவனுக்கும்தான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;முகூர்த்த நேரம். ராமு சம்பூர்ணியைப் பார்த்தான். மணவறைக்கு சற்றுத் தொலைவில் தனியாய் விழியோரக் கண்ணீர்த் துளிகளுடன் நின்றிருந்தாள். அப்போது ராமுவை நினைத்துக் கொண்டிருப்பாள் போலிருக்கிறது. ஆனந்தன் அதி சுறுசுறுப்பில் அங்கும் இங்குமாய் இருந்தான். அப்சரஸ் போல ஹேமலதா. கந்தர்வன் போல மணமகன். சுபமுகூர்த்தம். "ஆனந்தம் ஆனந்தம்........ஆனந்தமே." அந்த முகாரியில் முழுவதும் நிறைந்ததைப் போல் உணர்ந்தான். இன்னும் ஒரு சில எக்ஸா பைட்டுகளாவது மிச்சமிருக்குமா?. இந்த முகாரிக்குப்பிறகு அவனுக்கு எதையும் கேட்கப் பிடிக்கவில்லை. பால்பாயாசத்தில் ஆனையடி அப்பளத்தைப் பிசைந்து எல்லோரும் சாப்பிடுவதையெல்லாம் பார்க்க ஆசைதான். ஆனால் முழுவதுமாக புது நினைவுகளால் நினைவகம் நிறைந்துவிட்டவன் உடனே ரயிலடிக்கு வந்தான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;காலை 10.15 மணிக்கு சோழன் எக்ஸ்பிரஸ். மாலை தம்பரம். நள்ளிரவு லுப்தான்ஸா.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;அவனால் விமானத்தில் உள்ளே நுழைய முடியவில்லை. இங்கே சுற்றிலும் பல இநிக்கள். சூழ்நிலை வெகுவாக மாறி இருந்தது. அவனைத் தடுத்த ஓர் இநி கேட்டான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"நேற்றிலிருந்து சர்வதேச பயணம் செய்யும் இநிகளுக்கு கட்டணம் வசூலிக்கிறோம்."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;அதர்ச்சியில் மேலும் சில டெர்ரபைட்டுகளை இழந்தான். பாஸ்டனில் இருக்கும் அந்த பேப்பர் வெய்ட்டுக்குள் நுழைந்துவிட வேண்டுமென்ற கவனம் வந்துவிட "நியூ யார்க்குக்கு எவ்வளவு?' என்றான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"சென்னை டு நியூ யார்க் - 500 டெர்ராபைட்டுகள்."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;அவன் பாஸ்டன் வந்து அந்த பேப்பர் வெய்ட்டை நெருங்கியபோது அவனிடம் சில நூறு டெர்ரா பைட்டுகள் மிச்சமிருந்தன.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;* * * * * * * * * * * * * * * * * * * * * * * *&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;தேன் - சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான கதை&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஓகை நடராஜன்.&lt;br /&gt;26 ஜூலை 2008&lt;/strong&gt;&lt;br /&gt;*****************************&lt;br /&gt;*****************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-7643576893449549464?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/7643576893449549464/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=7643576893449549464' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/7643576893449549464'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/7643576893449549464'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2008/07/blog-post.html' title='இநி'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-4444860651884568033</id><published>2008-05-04T10:40:00.000-07:00</published><updated>2008-05-04T11:03:11.518-07:00</updated><title type='text'>ரெப்பா கியர்.</title><content type='html'>&lt;p&gt;மாரியப்பனுக்கு கோபம் தலைக்கு ஏறியிருந்தது. டேவிட் இப்படிச் செய்வானென்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இது நம்பிக்கைத் துரோகம். நட்புத் துரோகம். வேகமாக டெவிட் வீட்டுக்கு வாடகைக் காரில் விரைந்து கொண்டிருந்தான்.  இதுவரை டேவிட் வீட்டுக்குச் சென்றதில்லை. இப்போது அவனை நறுக்கென்று நாலு வார்த்தை கேட்டுவிடுவதற்காகப் போய்க்கொண்டிருந்தான். &lt;/p&gt;&lt;p&gt;டேவிட் ஏற்கெனவே தமிழ் பேசுவான்.  இதுவே அவர்கள் நட்புக்குத் தொடக்கமாக இருந்தது. இந்த இரண்டு மாத கால நட்பில் வெகு சகஜமாக தமிழ் பேச தெரிந்துகொண்டுவிட்டான். அலுவலகத்தில் தழைத்த நட்பு ஆழத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்த நேரத்திலா இப்படி ஒரு சோதனை வரவேண்டும்? &lt;br /&gt;&lt;br /&gt;டேவிட்டின் மாமா ஒரு சூப்பர் மார்கெட்டின் ஒரு பகுதி பொறுப்பாளராக இருந்தார்.  உடல்நலக் குறைவால் அவர் வேலையை விட்டுப் போவதால் அந்த வேலையை தன் தந்தைக்கு சிபாரிசு செய்ய டேவிட்டிடம் கேட்டான் மாரியப்பன்.   டேவிட்டோ தன் தந்தையே அந்த வேலையை விரும்புவதாகச் சொன்னபின் மாரியப்பன் வற்புறுத்துவதை விட்டுவிட்டான். ஆனால் இன்று யாரொ ஒரு ரெப்பா கியருக்கு அந்த வேலை டேவிட்டால் சிபாரிசு செய்யப்பட்டு தரப்பட்டிருப்பதாக அறிந்த பிறகு மாரியப்பன் கொதித்துப் போய்விட்டான். உடனே  டேவிட்டின் வீட்டுக்கு வாடகைக்கார் பிடித்தான்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;மாரியப்பனுக்கு டேவிட் வீட்டில் இருக்கிறானா எனற சந்தேகம் வந்தது. கைபேசியில் அழைத்தான். எதிர்முனையில்,&lt;br /&gt;&lt;br /&gt;    "ஹலோ, டெவிட் கியர் ஹியர்."&lt;br /&gt;&lt;br /&gt;    "மாரியப்பன் பேசுறேன்.  உங்க அப்பா பேரு சார்லஸ் கியர் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;    "ஆமாம்"&lt;br /&gt;&lt;br /&gt;    "இப்ப பேர மாத்தி வச்சுகிட்டாரா?"&lt;br /&gt;&lt;br /&gt;    "இல்லியே"&lt;br /&gt;&lt;br /&gt;    "அப்ப யாரு அந்த ரெப்பா கியர். அவுருக்கு ஏன் நீ சிபாரிசு பன்னியிருக்கே?"&lt;br /&gt;&lt;br /&gt;    "அது வந்து..........."&lt;br /&gt;&lt;br /&gt;    "இப்ப ஒங்க வீட்டுக்கு வர்ரேன். நீ அங்கேயே இரு."&lt;br /&gt;&lt;br /&gt;டேவிட்டின் மறுமொழியைக் கேட்க விருப்பமும் பொறுமையும் இல்லாமல் தொடர்பைத் துண்டித்தான். ஆனால் டேவிட்டின் குரலைக் கேட்டவுடன் கோபம் கொஞ்சம் குறைந்து போனதற்காக வருந்திய மாரியப்பன் ரெப்பா கியரை மனதில் இருத்திக் கொண்டு கோபத்தில் குமுறும் முயற்சியைத் தொடர்ந்தான். அழைப்பு மணி அடித்தவுடன் டேவிட் கதவித் திறந்தான். மாரியப்பன் அவனைப் பேச விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;    " அது எப்படி உங்க அப்பாவுக்குன்னு சொல்லிட்டு யாருக்கோ சிபாரிசு பன்னியிருக்க? இத நேரடியா எனக்கு சொல்லிருக்கலாமே..."&lt;br /&gt;&lt;br /&gt;டேவிட் சிரித்தான். மாரியப்பனின் கோபம் அவனுக்குப் புதியது.  வினோதப் பார்வையோடும் குறும்பு முகத்தோடும் டேவிட் சொன்னான்,&lt;br /&gt;&lt;br /&gt;    "ஆமாம் அப்டித்தான் செய்வேன். எனக்கு வேண்டியவங்களுக்குத்தான் சிபாரிசு பன்னுவேன். இப்ப என்ன சொல்லப்போற?"&lt;br /&gt;&lt;br /&gt;    "கடசிலே ஒன் திமுறக் காட்டிட்டடா! இந்த வேல செய்துதான் நாங்க பொழைக்கனும்னு இல்லடா.............. எதோ ஃபிரண்டாச்சேன்னு கேட்டேன். நீ மாட்டேன்னு சொல்லியிருக்கலாம். பொய் சொல்லி ஏமாத்திட்டியேடா! உங்க புத்தியக் காட்டிட்டீங்கடா!!"&lt;br /&gt;&lt;br /&gt;    " மாரியப்பன், புத்தி கித்தின்னெல்லாம் எங்களப் பத்தி பேசாதே. அப்பறம் நானும் உங்களப் பத்திப் பேசுவேன்."&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்துக் கொண்டே இதைச் சொன்ன டேவிட்டின் முககுறிப்பைக் கவனிக்கத் தவறிய மாரியப்பன் சரமாரியாக வார்த்தைகளை விட்டான்.  டேவிட்டும் துடுக்காக மறுமொழி அளித்துக்கொண்டிருந்தான். கோபம் எல்லை மீறிய மாரியப்பன் டேவிட்டின் சட்டையைப் பிடித்தான். &lt;strong&gt;அரசம்பட்டி ஆலப்பட்டி இருக்கம்பட்டி ஈஞ்சம்பட்டி என்று எல்லா பட்டி தொட்டியிலும் உச்சபட்ச வசவான அந்த வார்த்தைகளை எடுத்துவிட்டான் மாரியப்பன்&lt;/strong&gt;. அந்த வார்த்தைகளுக்கு மறுமொழி அடிதடியைத் தவிர வேறில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;    "ஒரு அப்பனுக்குப் பொறந்திருந்தா ஒண்டிக்கி ஒண்டி வாடா!"&lt;br /&gt;&lt;br /&gt;டேவிட்டுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அதற்குமேல் அவனால் நடிக்க முடியவில்லை. அகில உலகத்திலும் அந்த வார்த்தைகளுக்கு அடிதடி மட்டுமே மறுமொழி என்றே அறிந்திருந்த மாரியப்பனுக்கு அவனுடைய சிரிப்பு ஒரு அசட்டுக்கோபத்தைக் கொண்டு வந்தது.  கேட்டான்,&lt;br /&gt;&lt;br /&gt;    "ஏண்டா உனக்கு சூடு சொரணையே கெடையாதா?"&lt;br /&gt;&lt;br /&gt;சட்டையப் பிடித்திருந்த மாரியப்பனின் கைகள் தன் மார்பில் அழுந்தப் புதையுமாறு அணைத்துக் கொண்டு சொன்னான் டேவிட்,&lt;br /&gt;&lt;br /&gt;    "நான் ரெண்டு அப்பனுக்குப் பொறந்தவன்தான் மாரியப்பன்."&lt;br /&gt;&lt;br /&gt;மாரியப்பனுக்கு இப்போது அசட்டுக்கொபம் மறைந்து குழப்பக் கோபம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;    "நான் சிபாரிசு செய்த ரெப்பா கியர் என்னோட ரெண்டாவது அப்பா. அவருக்கும் நான் பிறந்திருக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;மாரியப்பனின் மூளை வேலை செய்வதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;    "பத்தாண்டுகளுக்கு முன் ஆபரேஷன் செய்து ஆணாக மாறிய என் அம்மா ரெஜினா கியர்தான் இப்போது ரெப்பா கியர். அரசாங்க கெஜட்டில் அவர் ஆண் என்றுதான் இருக்கும். இதை நாங்கள் அநாவசியமாக வெளியில் சொல்வதில்லை. உன்னிடம் சொல்லாதது தப்புதான்."&lt;br /&gt;&lt;br /&gt;விளக்கெண்ணையில் ஊறவைத்த ஒரு கிலோ இஞ்சியை ஒரேயடியாகத் தின்ற குரங்கின் நிலையில் இருந்தான் மாரியப்பன். கண்களை சிமிட்டியபடியே டேவிட் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;    " ரெப்பான்னா ரெண்டாவது அப்பான்னு அர்த்தம்."&lt;br /&gt;&lt;br /&gt;**************&lt;br /&gt; &lt;a href="http://vavaasangam.blogspot.com/2008/04/blog-post_7498.html"&gt;வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை&lt;/a&gt; - &lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;ரெப்பா கியர்&lt;/span&gt;&lt;/strong&gt;.&lt;br /&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-4444860651884568033?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/4444860651884568033/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=4444860651884568033' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/4444860651884568033'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/4444860651884568033'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2008/05/blog-post.html' title='ரெப்பா கியர்.'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-1900131417609106811</id><published>2008-02-27T11:35:00.000-08:00</published><updated>2008-02-27T11:44:44.993-08:00</updated><title type='text'>என்னவரே, போய் வாரும்.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-family:courier new;color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-family:courier new;color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-family:courier new;color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-family:courier new;color:#990000;"&gt;SUJATHA.......&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;My respects to the man.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;Sometimes had his hands on my pen.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;Sometimes had his words on my mouth.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;Sometimes had his chair on my brain.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;Sometimes had his laws on my books.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;Goodbye, my man.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Natarajan.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-1900131417609106811?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/1900131417609106811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=1900131417609106811' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/1900131417609106811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/1900131417609106811'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2008/02/blog-post_27.html' title='என்னவரே, போய் வாரும்.'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-1788706937137631124</id><published>2008-02-08T10:43:00.000-08:00</published><updated>2008-02-08T11:15:18.102-08:00</updated><title type='text'>மடக்கு மகாத்மியம்</title><content type='html'>டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் &lt;strong&gt;'டைம்ஸ் இன்று'&lt;/strong&gt; என்று ஒரு தமிழ்ச் சிறப்பிதழ் வெளியிட்டிருப்பதையும் அதற்கான விமர்சனத்தையும் சுரேஷ்கண்ணன் மரத்தடியில் எழுதி இருந்தார். அவர் அவரது வலைப்பூவிலும் எழுதி இருக்கிறார். சுரேஷ்கண்ணன் புண்ணியத்தில் டைம்ஸ் நிறுவனத்திற்கு சில நூறு ரூபாய்கள் விறபனை கிடைத்திருக்கிறது. இப்பதிவு அவ்விதழைப் பற்றியதென்றாலும் அதன் உள்ளடக்கத்தைப் பற்றியெல்லாம் நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. அவ்விதழை அமைத்திருக்கும் விதம் பற்றி எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புத்தகத்தின் சிறப்பு அதன் உள்ளடக்கத்தில்தானே என்று நீங்கள் யோசிப்பது எனக்குப் புரிகிறது. ஒரு புதிய மனிதரைக் கண்டு அவருடன் உள்ளடக்கம் சார்ந்த எதையும் செய்வதற்குமுன் அவர் உடைகளை ஆய்வது நமக்கெல்லாம் இயல்புதான். அதுவும் அவர் மாற்றுப்பாலைச் சேர்ந்திருந்தாலோ கேட்கவே வேண்டாம். இந்த உடை ஆராய்ச்சி எல்லைகளை விரித்து எல்லைகளைத் தாண்டி மனவெளிக்குள் நடக்கும், நடந்துகொண்டே இருக்கும். இதைப்போலவே என் இயல்பு என்னவென்றால் பருவ இதழ்களில் வரும் விளம்பரங்களை வெகுவாக ரசிப்பதும் உள்ளடக்கத்தைப் படிப்பதுமாக சேர்ந்தே இருக்கிறது. விளம்பரதாரர்களின் நோக்கம் என்னவோ விற்பனை என்றாலும் என்னளவில் அவர்கள் நோக்கம் கொஞ்ச கொஞ்சமே நிறைவேறும். அவர்கள் சொல்வதற்காக நான் எதையும் வாங்கிவிட மாட்டேன். ஆனால் அவர்கள் இலவசமாய் எனக்களிக்கும் ரசானுபவமோ ரொம்பவும் அதீதமானது, அலாதியானது. இத்துடன் இதழ்களின் விலைக் குறைப்புக்கும் அவர்கள் செய்யும் தொண்டு மகத்தானது.&lt;br /&gt;&lt;br /&gt;நூறு ரூபாய் விலையுள்ள இந்த இதழின் தயாரிப்பு மடத்தனமாக இல்லை என்று சொல்வதற்கில்லை. இதன் அமைப்பில் பல கோளாருகாள் இருக்கின்றன. புத்தகத் தயாரிப்பின் எந்த நுணுக்கத்தையும் நான் அறியாதவன் ஆயினும் ஒரு பயன்பாட்டளனாய் என் கவனிப்புகளை இங்கு வைக்கிறேன். இவ்விடத்தில் அதே நூறு ரூபாய்க்கு ஆண்டுதோறும் வரும் ஆனந்தவிகடனின் தீபாவளி மலரின் அதி அற்புதமான தயாரிப்பைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். 'டைம்ஸ் இன்று' எனத் தலைப்பிடப்பட்டு சிறப்பாசிரியர் சுஜாதா என்று குறித்திருக்கும் இவ்விதழின் முன்னட்டைப் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இருந்திருக்க வேண்டும். இதன் முன்னட்டையை விட பின்னட்டையில் வந்திருக்கும் சாஸ்தா நல்லெண்ணையின் விளம்பரம் எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய இந்த ரசனையில் பலர் உடன்பட மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நல்லெண்ணை விளம்பரத்தை சிறந்ததாக்கிய குற்றம் என்னுடையதன்று. அந்த முன்னட்டையினுடையது. இவ்விதழினுள்ளே ஏராளமான வண்ணப்படங்களும் ஓவியங்களும் காணக்கிடைக்கின்றன. அத்தனையையும் நவீன பானியைச் சேர்ந்தவை. பெரும்பாலானவை சிறப்பாக இருக்கின்றன. ஆனால் முன்னட்டையில் எனக்கு எந்த வசீகரமும் ஏற்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விதழின் எழுத்துயரத் தேர்வுகளைப்(font size selection) பற்றியும் சொல்லியே ஆக வேண்டும். சில கதைகளும் கட்டுரைகளும் மிகச் சிறிய எழுத்துகளில் வந்திருக்கின்றன. நாஞ்சில்நாடனின் 'கோம்பை' சிறுகதையை மிகச்சிறிய எழுத்துகளில் பதித்திருக்கிறார்கள். இது தேவையே இல்லாமல் படிப்பவர்களை படுத்துவதாகும். இதழ் முழுதுமே எழுத்துயரம் சீராக இல்லை. இதை படிப்பதற்கு ஏதுவாக அமைத்திருக்க வேண்டாமா? சரியான எழுத்துயரத் தேர்வால் சில பக்கங்கள் கூடுவதால் அப்படி என்ன நட்டம் வந்துவிடப் போகிறது அவர்களுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;குறைகளாகவே சொல்லி வருவதால் இப்போதுசில நிறைகளைச் சொல்லிவிடுகிறேன். நல்ல காகிதத் தேர்வு, சிறப்பான வண்ண அச்சு, அசர வைக்கும் விளம்பரப்படங்களின் துல்லியம், கொழுத்தோ சோனியாகவோ இல்லாத சிக்கென்ற கணம், படங்களை ரசிக்க A4 காகித அளவு, இவற்றுடன் ஒரு பக்கக்குறிநூல்(book mark). இனி குறைகளைத் தொடரலாம். இந்த பக்கக்குறிநூலில் ஒரு விளம்பர அட்டையை முடிச்சிட்டு கொடுத்திருக்கிறார்கள். மீரா சிகைக்காய் பொடியின் விளம்பர அட்டை. டைம்ஸ்காரர்கள் கிடைத்த இடத்திலெல்லாம் நன்றாக விளம்பரம் செய்யட்டும். இதிலும் காசு பார்த்து மகராசர்களாய் இருக்கட்டும். ஆனால் இந்த அட்டை ஓர் அட்டையில்லை. சற்றே தடியான தாள்தான். இதில் துளையிட்டு வலுவாக முடிச்சிட்டிருக்கிறார்கள். இரண்டுமுறை புத்தகத்தை இடம் மாற்றியதில் அந்தத் துண்டுத்தாள் இடம் தெரியாமல் போய்விட்டது. மிஞ்சிய நூலோ முடிச்சுடன் அல்லாடுகின்றது. இங்கேயும் நம்மை படுத்தியெடுக்கிறார்கள். நீளம் குறைவான இந்த நூலினால் எந்த பயனும் இல்லை. புத்தக உயரத்தைவிட சற்று நீண்டிருந்தால்தானே அதை பக்கக்குறியாக பயன்படுத்த இயலும்? மாறாக அதை வெட்டி எறியும் வேலையை நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். அந்த துண்டுத்தாளுக்குப் பதிலாக நெகிழியில்(plastic) கொடுத்திருக்கலாம் அல்லது நூலையாவது சற்று நீளமாகக் கொடுத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுதான் மிக முக்கியமான இடர்பாட்டை எழுதப் போகிறேன். இக்கட்டுரையை என்னை எழுதத் தூண்டியதான ஒரு பெரிய மடத்தனம் இவ்விதழில் இருக்கிறது. அதுதான் மடக்கு மடத்தனம். இவ்விதழின் முன்னட்டையை நீளமாக்கி இரண்டாக வெளிமடிப்பு மடித்து அமைத்திருக்கிறார்கள். மடிக்கப்பட்ட பக்க விளிம்பு நான் புத்தகத்தைப் பிடிக்கும் போதெல்லாம் என் இடது கையை உறுத்துகிறது. இங்கே சில மென்கரங்களை எண்ணிப் பார்க்கிறேன். மேலும் உறுத்துகிறது. பொதுவாக பயன்பாடு அதிகமாகும்போது புத்தகங்களின் முன்னட்டையின் வலப்புற மேல்முனையும் கீழ்முனையும் கொஞ்சமாக சுருண்டுகொள்ளும். எங்கேயாவது புத்தகங்கள் முதுகுபுறத்தில் சுருளுமோ? இங்கே என் புதிய புத்தகத்தில் முன்னட்டை மடக்கு முதுகுப்புறத்தில் சுருண்டு கண்ணையும் உறுத்துகிறது. ஏற்கெனவே சில ஆங்கில சிறப்பிதழ்களில் இந்த அவஸ்தையை நான் அனுபவித்திருக்கிறேன். இப்போது தமிழில் என்கிறபோது ஆயாசமாக இருக்கிறது. இந்த மடக்கினுள்ளே தமிழ்நாடு சுற்றுலத்துறையின் ஒரு நல்ல விளம்பரம் இருக்கிறது. இப்போது என்னிடம் இருக்கும் இதழ் முன்மடக்கு முதுகு மேல்நுனியும் முதுகு கீழ்நுனியும் சுருண்டு மடக்கு மட்டும் மின்விசிறிக் காற்றில் அல்லாடிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் இந்த மடக்கு மகாத்மியத்தை முன்னட்டையோடு நிறுத்தவில்லை. உள்ளே பல விளம்பரங்களையும் மடக்கு பக்கங்களாகவே அமைத்திருக்கிறார்கள். சற்று வேறுபட்ட பக்கவாட்டுத் தோற்றமும் சீரற்ற பக்க அளவுகளுமாக காட்சியளிப்பதைத் தவிர உள்ளேயிருக்கும் மடக்குப் பக்கங்களினால் வேறு பிரச்சனைகள் இல்லை. என்ன, நீங்கள் மெனக்கெட்டுப் பிரித்துப் பார்க்கும்போது நல்ல விளம்பரமாக ஒரு சுகானுபவம் கிடைக்கலாம் அல்லது கடுப்பைக் கிளப்பும் வெற்றெழுத்து விளம்பரமும் கிட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது டைம்ஸ் காரர்களின் முதல் தமிழ் முயற்சியென நினைக்கிறேன். தமிழுக்கும் வந்ததற்காக அவர்களுக்கு நன்றி சொல்வோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-1788706937137631124?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/1788706937137631124/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=1788706937137631124' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/1788706937137631124'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/1788706937137631124'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2008/02/blog-post.html' title='மடக்கு மகாத்மியம்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-3252736367795881054</id><published>2008-01-15T08:21:00.000-08:00</published><updated>2008-01-15T08:46:22.535-08:00</updated><title type='text'>ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt;ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி&lt;/span&gt;&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993300;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;இன்று பொங்கல் நன்னாளில் இந்த நல்ல செய்தி வந்திருக்கிறது. சில (பல) நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இவ்வாண்டு ஜனவரி மற்றும் பிப்பிரவரி மாதங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்திருக்கிறது.  இவ்வழக்கில் விரைந்து செயலாற்றி வெற்றிக்கனி பறித்த நம் தமிழக அரசுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கக் கடைமைப் பட்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விளையாட்டைத் தடை செய்யக் கோரி விலங்கு நல வாரியம் தொடுத்திருக்கும் வழக்கு பொருளற்ற பல அம்சங்களை உடையதாகவே எனக்குப் படுகிறது. இப்போது நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் பார்வையாளர்களே அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்று செய்திகள் சொல்லுகின்றன. உண்மையில் ஒரு மனித நல வாரியமே ஜல்லிக்கட்டு தடை கோரி நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்றான இந்த விளையாட்டு சீர் படுத்தப்பட்டு பாதுகாப்பானதாக்கி மேலும் பிரபலப்படுத்தப்பட வேண்டுமே தவிர தடை என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாரியத்தால் முன்னர் தடை பெறப்பட்டதற்குக் காரணம், உயர்நீதிமன்றத் தீர்ப்பைனால் சற்றே அசந்திருந்த நேரத்தில் வாரியம் சாமர்த்தியமாக செயல்பட்டதுதான் என்று அறிய முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வழக்கில் தடை கொடுத்த உச்சநீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் வழக்கம் போலவே விமர்சனங்கள் தாக்கின.  &lt;span style="color:#6600cc;"&gt;சட்டம் ஓர் இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதமே விளக்கு&lt;/span&gt; என்ற அறிஞர் அண்ணா கூறியதை இங்கு நினைத்துப் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான நேரத்தில் சரியான வாதங்களல் தேவையான தீர்ப்பினைப் பெற்றுத் தந்த தமிழக அரசுக்கு நன்றி.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-3252736367795881054?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/3252736367795881054/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=3252736367795881054' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/3252736367795881054'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/3252736367795881054'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2008/01/blog-post.html' title='ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-15666502734772781</id><published>2007-12-23T19:57:00.000-08:00</published><updated>2007-12-23T20:04:04.175-08:00</updated><title type='text'>திருவாதிரை</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#660000;"&gt;திருவாதிரைத் திருநாள்&lt;/span&gt;&lt;/strong&gt;   &lt;a href="javascript:ScorePopUp(" s="P&amp;amp;i=45274')&amp;quot;"&gt;&lt;/a&gt;&lt;a href="javascript:ScorePopUp(" s="N&amp;amp;i=45274')&amp;quot;"&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;அந்த நாளும் வந்திடாதோ!அந்த சின்னப் பையனுக்கு ஒருநாள் பள்ளிக்கூடம் விடுமுறை கிடைக்கும். காலையில் சுடச்சுட நெய்மணக்கும் களி கிடைக்கும். இந்தக் களிக்கு தான் எத்தனை ருசி! ஆண்டவன் இந்த களியின் ருசியைப் போல் வேறெங்கும் வைத்ததில்லை. புழுங்கலரிசியை வறுத்து, பொரியரிசி ஆக்கி, சற்றே (மிக முக்கியம்-சற்றேதான்) பொடித்து, வெல்லம் சேர்த்து, நெய்வார்த்து கிண்டியெடுத்த களியின் ருசி, ஆகா! ஒரு வருஷம் வரை அப்படியே நாவில் நிற்கிறதே!! அதனால்தானோ என்னவோ இதை திருவாதிரை அன்று மட்டும் செய்கிறார்கள்! இனி அடுத்த திருவாதிரைக்குதான் களி!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;திருவாதிரை என்றால் சிதம்பரம்தான் சிறப்பு. ஆனால் அந்தச் சின்னப் பையன் குடந்தையில் அல்லவா இருந்தான். அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு பெரியத் தெருவுக்கு போவான். அப்பாவுடன் வெளியில் செல்வதென்றால் அது எப்பவும் லாபம் தான். ஏதாவது ஒன்று நிச்சயம் கிடைக்கும். அன்று அங்கு அத்தனை சிவன் கோயில் சாமிகளும் புறப்பட்டு வந்து வரிசையில் பெரிய கடைத் தெருவில் நிற்கும். அப்பா ஒவ்வொரு சாமியாய் கும்பிட்டு வரும்வரை அந்த கடைத்தெருவின் அத்தனை ஆரவாரத்தையும் ஆசை தீர பருகியனுக்கு அவ்வப்போது அப்பா திருநீறு பூசி விடுவார். சில சாமிகளைப் பார்க்க அவன் இரண்டு கக்கத்து இடுக்கிலும் கை கொடுத்து தூக்கி மேலே காண்பிப்பார். அவனும் கும்பிட்டுவிட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வான். அவர் இறக்கி விட்டவுடன் மறக்காமல் அப்பா கையைப் பிடித்துக் கொள்வான். அத்தனைக் கூட்டத்தில் அப்பாவை தொலைத்துவிடக் கூடாது அல்லவா!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;நான் தாங்க அந்த சின்னப் பையன். ஒவ்வொரு திருவாதிரை அன்றும் மனதில் இந்த படத்தை ஒட்டிப் பார்த்துவிடுவேன். இந்த முறை உங்களோடு சேர்ந்து ஓட்டிப் பார்க்கிறேன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;(சென்ற ஆண்டு திருவாதிரைக்கு எழுதியதின் மீள்பதிவு. பின்னூட்டங்களுடன் அந்தப் பதிவுக்குச் செல்ல: &lt;a href=""&gt;&lt;/strong&gt;&lt;a href="http://oagaisblog.blogspot.com/2007/01/blog-post.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;http://oagaisblog.blogspot.com/2007/01/blog-post.html&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;"&gt; திருவாதிரைத் திருநாள் &lt;/a&gt;)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-15666502734772781?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/15666502734772781/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=15666502734772781' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/15666502734772781'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/15666502734772781'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/12/blog-post_23.html' title='திருவாதிரை'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-6091309574012111670</id><published>2007-12-16T10:42:00.000-08:00</published><updated>2008-01-04T09:24:10.447-08:00</updated><title type='text'>ந.ஒ.க:-போடி வெளியே...</title><content type='html'>&lt;span style="font-size:130%;color:#990000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;போடி வெளியே...&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- இனிமே உனக்கு இங்க இடமில்ல. கிளம்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்டவுடன் அதிர்ந்து போன அவள் சொன்னாள்,&lt;br /&gt;&lt;br /&gt;- என்னாச்சு இன்னிக்கி உங்களுக்கு. வேற மாதிரி பேசுறீங்க.&lt;br /&gt;- நான் சொல்றது புரியுதா இல்லியா? நீ இன்னிக்கி கிளம்பனும் நல்லா புரிஞ்சுதா?&lt;br /&gt;- நான் போக மாட்டேன். நான் ஏன் போகனும்?&lt;br /&gt;- மேற்கொண்டு பேசறதுக்கு எதும் இல்ல. நீ இடத்த காலி பண்ணு.&lt;br /&gt;- நான் இங்கேயே இருந்துகிறேன். எனக்கு போக விருப்பமில்லை.&lt;br /&gt;- இவ்வளவு சொல்றேன் உனக்கு எட்டலியே.. போ வெளியே..&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னை இத்தனை நாளாக வளர்த்தவர் திடீரென வெளியே போ என்று சொல்வது அவள் முற்றிலும் எதிர்பாராத ஒன்று. இருந்தாலும் போராட முடிவு செய்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;- நான் போக முடியாது. நீங்கள் இப்படி மாறுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.&lt;br /&gt;- இதோ பார். சும்மா சண்டித்தனம் பண்ணாத. சொல்றதக் கேளு. போ வெளியே..&lt;br /&gt;- கண்டிப்பா முடியாது. நான் எங்க போவேன்? எனக்கு யாரத் தெரியும்? உங்கள விட்டா வெளியுலகமே தெரியாத என்னை வெளிய போச் சொல்றதுக்கு உங்களுக்கு எப்படி மனசு வருது? உங்க மனசு அவ்வளவு கல்லா?&lt;br /&gt;- திரும்பத் திரும்ப முரண்டு பிடிச்சியானா நான் உன்னை வலுக்கட்டாயமா வெளியேத்த வேண்டியிருக்கும். ஒழுங்கா போயிடு.&lt;br /&gt;- முதல் முறயா நீங்க சொல்றத கேக்காம இருக்கறதுக்கு மன்னிக்கனும். என்னால போக முடியாது. நான் இங்கிருந்து போக மாட்டேன்.&lt;br /&gt;- கழுத்த புடிச்சு தள்ளினாத்தான் நீ போவியா?&lt;br /&gt;&lt;br /&gt;அவளைத் தள்ளிய தள்ளலில் அவள் நிலை குலைந்து தலை குப்பற ஆன அந்த நிலையிலும் அவள் சொன்னாள்,&lt;br /&gt;&lt;br /&gt;- வேண்டாம். என்னை வலுக்கட்டாயமாத் தள்ளாதிங்க. நான் போகலை.&lt;br /&gt;- இனிமே நீ செத்த அப்பறம்தான் நான் உன் மூஞ்சியிலே முழிப்பேன். &lt;strong&gt;போடி வெளியே....&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஒரு நெக்கு நெக்கித் தள்ளியதில் அவள் வெளியே விழுந்து அலறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரையில் நமக்குப் புரியாத ஒரு மொழியில் கடவுளுடன் நடந்த உரையாடலை எனக்குப் புரிந்தவரையில் மொழிபெயர்த்திருந்தேன். இன்மேல் என் மொழிபெயர்ப்பு தேவையில்லை. அவள் நம் மொழியிலேயே குவா என பேச ஆரம்பித்துவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடராஜன்&lt;br /&gt;17-12-2007&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-6091309574012111670?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/6091309574012111670/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=6091309574012111670' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/6091309574012111670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/6091309574012111670'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/12/blog-post.html' title='ந.ஒ.க:-போடி வெளியே...'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-2372246589856596975</id><published>2007-11-08T20:11:00.000-08:00</published><updated>2007-11-08T21:31:06.861-08:00</updated><title type='text'>தீபாவளி ஒழித்த நாட்கள்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;தீபாவளிச் சிறப்புப் சிறுகதை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;அவர் இறந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. பலப்பல ஆண்டுகள் ஆகியிருக்க வெண்டும். ஓர் ஏற்பாட்டினால் பூமியில் அவர் வாழ்ந்த இடத்துக்கு வந்தார். அவரை வரவேற்றவர் சொன்னார்,&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- இந்தப் பூமிச்சுற்றுலாவில் நான்தான் உங்களுக்கு வழிகாட்டி.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- நீங்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- ஏற்பாட்டின் ஒரு பகுதி.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- இன்றுதானே தீபாவளி? தீபாவளி அன்றுதான் வரவேண்டுமென்று விரும்பியிருந்தேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- இன்று நவம்பர் மாத அமாவாசை. இன்றுதான் முந்நாட்களில் தீபாவளி கொண்டாடுவார்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- இங்கு தீபாவளி இல்லயா? இது இந்தியாதானே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- நீங்கள் சென்னையில்தான் இருக்கிறீர்கள். ஆட்சி மாற்றத்தில் தீபாவளியை ஒழித்து விட்டார்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- எப்படி? எப்படி சாத்தியம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- முதலில் விடுமுறை நிறுத்தப்பட்டது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- அரசு விடுமுறைதானே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- எல்லாமே அரசுதானே!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- ஓ!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- இப்போது பல விஷயங்கள் புரிந்ததா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- உடனே நான் இந்த உலாவை இப்போதே முடிக்கவேண்டும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- மனதில் விண்ணப்பியுங்கள். உலா முடிவு சற்று நேரத்தில் வந்துவிடும். வரும்வரை நான் உங்களுடன் இருப்பேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- தீபாவளி மட்டுமா நிறுத்தப்பட்டது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- எல்லா பண்டிகைகளும், கோயில் உற்சவங்களும், வழிபாட்டுக் கொண்டாட்டங்களும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- கிருத்துமஸ், ரம்ஜான் இவை எப்படி?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- எதிர்ப்புகளுக்குப் பிறகு கிருத்துமஸ் நிறுத்தப்பட்டது. கடைசியாக ரம்ஜான் நிறுத்தப்பட்டது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- எதிர்ப்பு சாத்தியமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- வெளிப்படுவது சாத்தியமில்லை. உயர்மட்டங்களில் வெளிப்பட்டபோது இவை நிறுத்தப்பட்டன.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- உயர்மட்டம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- வெளிநாடுகளுச் சென்றால் முழுமையாக விரிவாக அறிந்து கொள்ளலாம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- பொங்கல்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- அது அரசு விழா.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- வேறு விழாக்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- தலைவர்களுடைய பிறந்த நாட்கள். அதாவது....&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- என்னால் ஊகிக்க முடிகிறது. நாடு எப்படி இருக்கிறது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- எல்லோருக்கும் உணவு கிடைக்கிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- வேறு ஏதாவது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- எல்லோருக்கும் உணவு கிடைக்கிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- பட்டினிச்சாவெல்லாம் இல்லை என்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- அப்படி இல்லல. இப்போது அது தண்டனைக்குறிய தற்கொலை முயற்சிகளில் ஒன்று. அம்முயற்சியில் பிழைத்தால் ஆயுள் தண்டனை. இறந்தால் இறந்தவருக்கு அன்மையான சுற்றத்திலோ நட்பிலோ இச்சாவைத் தடுத்திருக்கும் சாத்தியம் மிக அதிகமாக உள்ளவர் என்று அரசு கருதுபவருக்கு ஆயுள் தண்டனை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இது நல்ல வேளை. அவர் மனதால் விரும்பிய உலா முடிவு அவருக்கு வந்துவிட்டது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;************************************&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கொய்மோருடன் அம்மா சொன்னாள்,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;இணைய உலாவில் இடததின் பக்கம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;நினைத்திடல் என்றும் தவிர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;***********************************************&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-2372246589856596975?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/2372246589856596975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=2372246589856596975' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/2372246589856596975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/2372246589856596975'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/11/blog-post.html' title='தீபாவளி ஒழித்த நாட்கள்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-3281591711294703093</id><published>2007-08-15T09:52:00.000-07:00</published><updated>2007-08-25T21:15:36.507-07:00</updated><title type='text'>கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!</title><content type='html'>&lt;em&gt;&lt;strong&gt;சுதந்திர தின சிறப்புச் சிறுகதை!&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெக்கிக்காட்டான், வவ்வால், செல்வன் மூவருக்கும் இந்தக் கதையை சமர்பிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    செல்லமுத்து தன் விருப்ப நடிகரின் படத்தை மூன்றாவது முறையாகப் பார்த்துவிட்டு மாலைக்காட்சி முடிந்து வெளியே வந்தான். மணி ஒன்பது ஆகியிருந்தது. ஊருக்குப் போக பத்து மணிக்கு கடைசி பஸ். பையில் இருபத்தி ஆறு ரூபாயும் சொச்சமும் இருந்தது. ஊருக்குப் போக ஆறு ரூபாய் போய்விட்டல் மீதி இருபத்தி ரூபாய் சொச்சம் இருக்கும். இப்போது அவனது மொத்த சொத்தே அவ்வளவுதான். கும்பகோணம் பஸ் நிலையம் பக்கமாக வந்தான். ஊருக்குப் போய் என்ன செய்யப் போகிறான்? அம்மா வைத்திருக்கும் மோர் சொற்றை தின்றுவிட்டு, திண்ணையில் படுத்துத் தூங்கிவிட்டு காலையில் எழ வேண்டும். அப்பறம் கார்காரர் வயல் பம்புசெட்டில் குளித்துவிட்டு கொஞ்சம் பழையது சாப்பிட்டுவிட்டால் அவ்வளவுதான். வேறு வேலை கிடையாது. யாராவது எங்காவது கூப்பிட்டால்தான் உண்டு. கார்காரர் வயலுக்கு அடுத்த திங்கட் கிழமைதான் போகவேண்டும். அப்பறம் தான் வேறு காசை கண்ணால் பார்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;    பஸ் நிலையத்துக்கு போகும் வழியில் புதிதாக ஒரு இட்லிகடை வந்திருந்தது. இட்லிப்பானையில் ஆவி பறந்து வந்துகொண்டிருந்தது. ஒருத்தன் புரோட்டா போட்டுக் கொண்டிருந்தான். 4 இட்லி ரூ.ஐந்து என்று ஒரு பலகையில் சாக் பீசால் எழுதியிருந்தது அவனை ஈர்த்தது. கணக்கு போட்டு பார்த்தான். 6 இட்லி சாப்பிட்டுவிட்டு இரண்டாவது ஆட்டம் படம் பார்த்துவிட்டு காலையில் முதல் பஸ்ஸுக்கு போய்விடலாமென்று முடிவு செய்தான். உள்ளே போய் ஒரு நோட்டம் விட்டபோது இரண்டாவது பெஞ்சில் வாசு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வாசு இவனோடு பத்தாவது வரை படித்து இவனோடேயே ஃபெயிலானவன். அதன்பிறகு கொல்லத்து வேலை செய்யப்ப் போகிறேன் என்று சொல்லி போனவனை இப்போதுதான் நாலு வருஷம் கழித்து பார்க்கிறான். பக்கத்தில் போய் அமர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; - லே வாசு, எப்பிர்ரா இருக்க?&lt;br /&gt; - அட செல்லமுத்து, இங்க எங்கடா வந்த? ஊர விட்டு நவுர மாட்டியே, என்னா தலைவர் படமா?&lt;br /&gt; - வேற எதுக்குடா நான் வரப்போறேன்?&lt;br /&gt; - என்னடா செல்லா செய்யிற?&lt;br /&gt; - கார்காரர் வயல்லதான் வேலை.&lt;br /&gt; - அப்பாவுக்கு எங்கடா வேலை?&lt;br /&gt; - ரெண்டு வருஷத்துக்கு முன்னால தவறிப் போய்ட்டார்டா.&lt;br /&gt; - அடடா, செல்லா, கடசி பஸ் போயிருக்குமேடா?&lt;br /&gt; - பத்து மணிக்கு ஒன்னு உண்டுடா, ஆனா ரெண்டாவுது ஆட்டம் இன்னோரு படம் பாத்துட்டு காலைல தாண்டா போறென்.&lt;br /&gt; - எங்கடா படுக்க போறே?&lt;br /&gt; - பஸ் ஸ்டாண்டுல படுத்துட்டு மொத ப்ஸ்ஸுல போயிருவேன்.&lt;br /&gt; - நாளக்கி வேல இருக்கா அதான் கருக்கல்ல போறியா?&lt;br /&gt; - அடுத்த வாரந்தாண்டா வேல. அதுவரைக்கும் சும்மாதான் இருப்பேன். நீ என்னாடா செய்யிற?&lt;br /&gt; - ஒரு காண்ட்ராய்ட்டர்கிட்ட வேல செய்யிறண்டா. லே, சித்தாள் வேலைக்கு நாளைக்கு மட்டும் வர்ரியாடா? எங்க காண்ட்ராய்ட்டருக்கு கொஞ்சாம் ஆளு கொறயுதுன்னாரு. கொறைஞ்சது அம்பது ரூவா வாங்கித் தாரென்.&lt;br /&gt; - அம்மா தேடுமேடா!&lt;br /&gt; - கார்காரர் வூட்டுக்கு போன் போட்டு சொல்லு.&lt;br /&gt; - நம்ம்பரெல்லாம் தெரியாதுடா&lt;br /&gt; - நான் புடிச்சி தாரென். வா. நானும் படத்துக்கு வாரேன். என் கொட்டாயிலேயே படுத்துக்க.&lt;br /&gt;&lt;br /&gt; இருபத்தி ஆறு ரூபாய் சொச்சம் அப்படியே இருந்தது. சாப்பாட்டுக்கும் சினிமாவுக்கும் வாசுவே பார்த்துக் கொண்டான். மறுநாள் மாலை அது நூறு ரூபாய் மேல் ஆனது. அந்த வாரம் பூராவும் சித்தாள் வேலை இருந்தது. சனிக்கிழமை மாலை செல்லமுத்துவிடம் ஐநூறு ரூபாய்க்கு பக்கம் பணம் இருந்தது. சனிக்கிழமை டாஸ்மார்க்கில் சரக்கடித்துவிட்டு வாசு கொட்டகையிலேயே படுத்து உருண்டான் செல்லமுத்து. காலையில் எழுந்தவுடன் ஊர் ஞாபகம் பலமாக பிடித்துக் கொண்டுவிட்டது. திடீரென பணம் சம்பாதிப்பது எளிதாகத் தோன்றியது அவனுக்கு. அவ்வளவு பணம் அவன் மொத்தமாக ஒரு வாரத்துக்குள்ளாகச் சம்பாதித்ததில்லை. அடுத்த வாரமும் ஊரில் வேலை இல்லை என்றால் வாசு கும்பகோணம் வந்துவிடச் சொன்னான். 'பார்ப்போம், கார்காரரு மேல கீல பாத்தார்னா பேசாமா வாசுகிட்ட வந்துட வேண்டியதுதான்'. செல்லமுத்து இப்போது ஆளே கொஞ்சம் பூரிப்பாகத் தெரிந்தான். 'அம்மாவும் லச்சுமியும் அசந்துபோவப் போவுதுங்க'. 'ஆத்துல குளிச்சிட்டு பத்து மணி பஸ்ஸை பிடிக்கலாமெ'ன்று முடிவுசெய்தான்.&lt;br /&gt; &lt;br /&gt; ஒரு வாரமாக போட்டிருந்த சட்டையையும் கைலியையும் ஆற்றில் தோண்டியிருந்த ஊற்றில் ஒரு கட்டி துனி சோப் வாங்கித் துவைத்து படித்துறையில் காயவைத்தான். குளித்து முடித்து லேசாகக் காய்ந்திருந்த துனிகளை உடுத்திக் கொண்டு படித்துறையை விட்டு வெளியே வந்தான். சிலு சிலு வெனக் காற்று புது உடம்பில் பாதி ஈர உடைகளினூடே பட்டு ரொம்பவும் புத்துணர்வாக இருந்தான். பஸ் நிலையத்துக்கு போகும் வழியில் ஒரு பெரிய சைவ உணவகத்தின் வாசலில் நின்றான். வெங்காய சாம்பாரின் மணம் மூக்கைத் துளைத்து அவனை உள்ளே இழுத்தது. ஊரில் சட்டியில் இருக்கும் பழைய சாதத்தை நினைத்தான். உடனே உள்ளே நுழைந்தான். 'பதினொன்ர பஸ்ஸுக்கு போவுலாம்'.&lt;br /&gt; &lt;br /&gt;    -ஒரு ரோஸ்ட் அப்பறம் ஒரு ரவா.&lt;br /&gt;&lt;br /&gt; தோசைக்கு சொல்லிவிட்டு சுற்றி ஒரு நோட்டம் விட்டான். ஏசி அறையிலிந்து வெளியே வந்த கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்தான். கிருஷ்ணமூர்த்தி செல்லமுத்துவின் பெரியப்பா பையன்.&lt;br /&gt;&lt;br /&gt;    -மூர்த்திண்ணே..&lt;br /&gt; &lt;br /&gt;    சற்று உரக்கக் கூப்பிட்டவன் அவன்  இருந்த தோரணையைப் பார்த்து கூப்பிட்டிருக்க வேண்டாமோ எனத் தயங்கினான். ஆனால் கிருஷ்ணமூர்த்திக்குக் கேட்டுவிட்டது. இவனருகே வந்து எதிர் இருக்கையில் அமர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; - சின்னம்மா, லச்சுமியெல்லாம் எப்பிர்ரா இருக்காங்க?&lt;br /&gt; - நல்லா இருக்காங்கண்ணே.&lt;br /&gt; - எதுக்குடா கும்மோணம் வந்த? ஊர வுட்டு நவுர மாட்டியே!&lt;br /&gt; - தலைவர் படம் பாக்குலாமுன்னு திங்க கிலமை வந்தேன். இங்க என் பெரண்டு காண்ட்ராய்ட்டர்கிட்ட வேல இருக்குன்னான். ஒரு வாரம் செஞ்சுட்டு இப்ப ஊருக்கு போய்கிட்டு இருக்கேண்ணே. பதினொன்ர ப்ஸ்ஸ¤க்கு போறன்.&lt;br /&gt; - ஏண்டா சித்தாள் வேலையா செய்த?&lt;br /&gt; - ஆமாண்ணே.&lt;br /&gt; - எவளவுடா சம்பாரிச்ச?&lt;br /&gt; - ஐநூறு கெடச்சுதுண்ணே.&lt;br /&gt; - அடி சக்க, ஒரு வாரத்துல ஐநூறா?&lt;br /&gt; - ஆமாண்ணே, இந்த வேல தேவலாம்ணே. ஏண்ணே, காரா வாங்கியிருக்கீங்க?&lt;br /&gt; - ஆமாண்டா. யார்ரா சொன்னா?&lt;br /&gt; - அம்மா சொல்லிச்சி.&lt;br /&gt; - மாமன் ஊட்ட்ல எல்லாம் எப்பீர்ரா இருக்காங்க?&lt;br /&gt; - அதான் செத்தா வாழ்ந்தா இல்லன்னு ஆயிருச்சேண்ணே. அப்பறம் ஏண்ணே எங்கிட்ட கேக்குறீங்க?&lt;br /&gt; - மூனாம் வூட்ல இருக்கீங்க, அதாண்டா கேக்குறேன்.&lt;br /&gt; - நீங்க பொண்ணு கட்ட போற வூடு. அந்த அக்கறையில கேக்குறீங்க. எனக்கு ஒன்னும் தெரியாதுண்ணே.&lt;br /&gt; - ஊர்ல என்னடா பண்ணுற? கார்காரரு வயல்லதான் வேலையா? என்னா தாராரு?&lt;br /&gt; - மாசம் ஆயிரம் தராரு. கொஞ்சம் நெல்லு தருவாரு. பொங்கல் தீவாலிக்கி எதுனாச்சும் கொடுப்பாரு.&lt;br /&gt; - எப்பீர்ரா காசு சேத்து லச்சுமிய கரையேத்த போற?&lt;br /&gt; - சேர வேண்டிய ஒன்ர ஏக்கரத் தான் மாமங்காரன் கேஸ் போட்டு புடுங்கிட்டான். நீங்க பொண்ணு எடுக்கப் போற வூட்டச் சொல்றனேன்னு வித்தியாசமா நெனைக்காதீங்கண்ணே. உங்களுக்கே தெரியுமில்ல.....&lt;br /&gt;&lt;br /&gt; - செல்லமுத்து காப்பி வாங்கிக்கடா.&lt;br /&gt; - வேணாண்ணே.&lt;br /&gt; - லே பாதி காப்பி குடி......  ஒரு காப்பி குடுப்பா. பில்ல ஏங்கிட்ட குடு.&lt;br /&gt; - அண்ணே நான் தர்ர்ண்ணே.&lt;br /&gt; - நீ குடுக்குறப்ப மவராசனா குடு. இப்ப நான் தார்ரென். ஏண்டா செல்லமுத்து ராத்திரி கடசி ப்ஸ்ஸுல ஊருக்கு போடா. எனக்கு முக்கியமா ஒரு வேல இருக்கு. மெட்ராசுலேர்ந்து ஒருத்தர் வர்ராரு. ராத்திரி ட்ரெய்ன்ல அவரு கெளம்புராரு. கொஞ்சம் கூடமாட இர்ரா.&lt;br /&gt; - அம்மா தேடும்ணே. ஊரவுட்டு வந்து ஒருவாரம் ஆச்சி.&lt;br /&gt; - மாமா வூட்டுக்கு போன் போட்டு நான் சொல்றண்டா. நடுவூட்டு பொடியன் போய் சொல்லிருவான். என் கூட வா. சாமிமல போகனும்.&lt;br /&gt;&lt;br /&gt; கிருஷ்ணமூர்த்தி தன் கைபேசியில் யாரிடமோ பேசி அவன் அம்மாவுக்கு தகவல் சொல்லச் சொன்னான். இருவரும் சுவாமிமலை சென்று அங்கு ஓரிடத்தில் ஒரு புத்தம்புது ஐம்பொன் சிலை வாங்கினார்கள். அழகாக கள்ளிப் பெட்டியில் வைத்து மூடி ஆனி அடித்து டிக்கியில் ஏற்றிவைத்தான் செல்லமுத்து. வரும்போது கிருஷ்ணமூர்த்தி கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt; - அந்த ஒன்ர ஏக்கர் நெலம் கெடைச்சிருந்தா என்னடா செய்வ?&lt;br /&gt; - அது இருந்தா நாங்க ஏண்ணே இப்பிடி இருக்கோம்?&lt;br /&gt; - லே, அதுலேர்ந்து எவளவுடா வந்துடும்?&lt;br /&gt; - ஒருத்தருக்கு கைகட்டி நிக்க வேணாண்ணே. யார் கையும் எதிர்பாக்க வேணாம்.&lt;br /&gt; - அதெல்லாம் சரிடா. எவளவு வந்துடும், அதச் சொல்லு.&lt;br /&gt; - எவ்ளவு வந்தா என்னாண்ணே. நம்ம வய. நம்ம ஒழப்பு. நம்ம சோறு.&lt;br /&gt; - சித்தாளு வேல செஞ்சு வாரம் ஐநூறு கெடச்சுதே, அத அம்பதால பெருக்கு. வருசத்துக்கு இருவத்தி அஞ்சாயரம் ரூவா. அது வயல்ல கெடைக்குமாடா?&lt;br /&gt; - நல்லா பாடுபட்டா கெடைக்கும்ணே.&lt;br /&gt; - ஆத்துல தண்ணி வர்லன்னா, வயல்ல பூச்சிபொட்டு புடிச்சுதுன்னா, மழையே பேயலன்னாலும் இல்ல கொட்டுகொட்டுன்னு கொட்டிச்சின்னாலும் நீ சொல்றது நடக்குமாடா?&lt;br /&gt; - சில வருசம் நட்டம் வருண்ணே&lt;br /&gt; - டேய் சில வருசம் இல்லடா. பத்து வருசத்துல ஒரு வருசம் ரெண்டு வருசந்தாண்டா லாவம் வரும். அப்பிடி வர்ர லாவம் கொஞ்சம். ஆனா நட்டம் வந்தா பெருசா வரும்டா. அப்பறம் ஒரு வருசத்துல எல்லாருக்கும் நல்லா விளஞ்சா அந்த வருசம் நல்ல வெல கெடைக்காதுடா.&lt;br /&gt; - அண்ணே, நீங்க பதினஞ்சி ஏக்கர் வச்சிருக்கீங்க உங்களூக்கு எப்புடிண்ணே லாவம் வருது? நட்டம் வராம இருக்கு?&lt;br /&gt; - இப்பதாண்டா நீ பாயிண்டுக்கு வர்ர செல்லமுத்து. லாவ நட்டக் கணக்கு இத்தன ஏக்கருக்கு இத்தனன்னு தோதா மாறிக்கும்டா. அப்பறம் நான் விவசாயியா இருந்து வியாபாரியா மாறிட்டேன். என்னோட லாவநட்டக் கணக்கே வேற.&lt;br /&gt; - புரியலேண்ணே.&lt;br /&gt; - சித்தாளு வேல செஞ்சியே அத வேலைன்னு நெனைக்காம யாவாரமா யோசிச்சிப் பாரு. ஒன்னோட உழைப்ப கொடுத்து அதுக்கு வெல கிடைச்சிருக்குன்னு நெனைச்சுப் பாரு. கூலின்னு நெனைக்காதே. கார்காரருக்கு நீ என்னா தர்ர, அவுரு உனக்கு என்னா தர்ராரு, யோசிச்சுப் பாரு.&lt;br /&gt; - அவரு என்ன்ண்ணே செய்வாரு..........&lt;br /&gt; - லே செல்லமுத்து, அவருக்காக நீ யோசிக்காத. ஒனக்காக யோசிச்சி என்னா பதில் வருதுன்னு சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;  செல்லமுத்து குழம்பிப் போனான். வாரம் ஐநூறு ரூபாயும் மாதம் ஆயிரம் ரூவாயும் நிச்சயம் ஒன்றல்ல. மாமனிடமிருந்து போனல் போகுதுன்னு அந்த ஒன்னரை ஏக்கர் நிலத்தை கிருஷ்ணமூர்த்தி வாங்கிக் கொடுத்தாலும் நிலைமை எப்படி மேம்பட்டதாக இருக்கும் என்று புரியவில்லை. நம்முடைய நிலம், நம் உழைப்பு, நமது சோறு என்கிற எண்ணம் தரும் திருப்தியை பணமாக மாற்றினால் ஒன்றும் தேறுவதாக இல்லை. கிருஷ்ணமூர்த்தியை சின்ன வயசிலேர்ந்து தெரியும் நல்ல மனசுக்க் காரன். பங்காளி மாதிரியே நடந்த்துக்க மாட்டான். நிச்சமாக மனசைக் கலைப்பதற்காக சொல்லவில்லை என்ற நம்பிக்கை செல்லமுத்துவுக்கு இருந்தது. பத்து வயதில் பம்பரம் விடச் சொல்லிகொடுத்த கிருஷ்ணமூர்த்தி இப்போது பணம் செய்யச் சொல்லிக் கொடுக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt; ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த ஒரு பெரிய ஓட்டலில் அறை எடுத்திருந்தான் கிருஷ்ணமூர்த்தி. மெட்ராஸ் காரர் வருவதற்காக காத்திருந்தார்கள். அடிக்கடி கிருஷ்ணமூர்த்தி தன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். நன்றாக மதிய உணவு சாப்பட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டான் செல்லமுத்து. மெட்ராஸ்காரர் வந்துவிட்டர் போலிருக்கிறது. பேச்சரவத்தில் தூக்கம் கலைந்து விழித்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt; - தீபக் சார், அடுத்த ஆர்டர் எப்ப தர்ரீங்க? நெறைய குடுத்தீங்கன்னா தொழிலையே மாத்திடுவேன்.&lt;br /&gt; - ஆமாம் கிருஷ்ணமூர்த்தி. நூறு கோடி பேருக்கு சாப்பாடு போட முப்பது கோடிப் பேர் விவசாயத்துல இருந்தா போரும்னு எனக்குத் தோனுது. இப்ப எழுபது கோடிப்பேர் இருக்கீங்களே! &lt;br /&gt; - ஆமாம் ப்ஃபே சாப்பாடு மாதிரி எவளவு இருந்தாலும் வயிறு கொள்ற அளவுக்குத்தான சாப்பிட முடியும்? ஆனா தீபக் சார், ரொம்பப் பேருக்கு வேற தொழிலே தெரியாதே?&lt;br /&gt; - அங்க கூட்டம் ஜாஸ்தி. அதுனாலத் தான் அங்க லாபம் கம்மியா இருக்கு. டெக்னாலஜி முன்னேற முன்னேற நெலம இன்னும் மோசமாத் தான் போகும். அதான் கணக்க பாக்கணும். உழுதவன் கணக்குப் பாத்து எத்தன உழக்கு மிஞ்சுதுன்னு பாக்கணும். நீங்கதான் அதுல கில்லாடியாச்சே ! இந்தப் பையன் யாரு கிருஷ்ணமூர்த்தி?&lt;br /&gt;  - அது என் சித்தப்பா பையன். அவனுக்கும் தொழில் விவசாயம்தான்.. போனவாரம் வரைக்கும்.&lt;br /&gt; - இந்த வாரம் வேற வேலையா, வெரி குட். தம்பி நீ பொழைச்சுகுவ. உங்க அண்ணன் சொல்றதக் கேளு.&lt;br /&gt; - செல்லமுத்து, அவுரு என்னா புது வேலைன்னு கூட கேக்குல பாரு.&lt;br /&gt;&lt;br /&gt; செல்லமுத்து தீவிர சிந்தனை வயப்பட்டான். ரயிலடியில் அவரை வண்டியேற்றிவிட்டு கிருஷ்ணமூர்த்தி கேட்டான்.&lt;br /&gt; - இந்தா செல்லமுத்து நூறு ரூவா வச்சுக்க. அம்மா லச்சுமிக்கு எதுனாச்சும் வாங்கிட்டுப்&lt;br /&gt;போ. பஸ் ஸ்டாண்டுல விட்டுட்டுமா?&lt;br /&gt; - அண்ணே, மூனாம் வூட்டுக்கு போன் போட்டு அந்தப் பொடியன கூப்புடுங்கண்ணே.&lt;br /&gt; - ஏண்டா.&lt;br /&gt; - நான் வாசுவைப் பாக்க போறேண்ணே&lt;br /&gt; - அடி சக்க. மாறிட்ட போலருக்கு. லே, மேல மேலப் போறதுக்கு கும்மோணத்து வுட்டு வெளியப் போய் பாக்கணுண்டா. நீ இப்ப வாசுக்கிட்ட போ. புதன்கிழமை என்ன வந்து பாரு. &lt;br /&gt; -சரிண்ணே&lt;br /&gt;&lt;br /&gt; செல்லமுத்து அதன் பிறகு லச்சுமி கல்யாணத்துக்கு கார்காரர் வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கத்தான் தன் ஊருக்குப் போனான். தன் சொந்த வாடகைக் காரில் போனான். பொகும் போதும் வரும்போதும் தன் மாமா வீட்டைக் கடக்கும் போது தானாக அவன் கை ஹாரன் ஒலி எழுப்பியது. அது சொன்னது,&lt;br /&gt;&lt;br /&gt; -ஜே கிருஷ்ணமூர்த்தி மாதிரி எனக்கு போதனை பண்ணின இந்த வீட்டு மாப்பிள்ளை கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!&lt;br /&gt;&lt;br /&gt;* * * * * * * * * * * * * * &lt;br /&gt;&lt;br /&gt;ஓகை நடராஜன்&lt;br /&gt;15-08-2007&lt;br /&gt;*****************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-3281591711294703093?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/3281591711294703093/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=3281591711294703093' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/3281591711294703093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/3281591711294703093'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/08/blog-post_15.html' title='கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-2698622793836857196</id><published>2007-08-02T10:35:00.000-07:00</published><updated>2007-08-02T11:10:58.735-07:00</updated><title type='text'>காலம் சரி செய்யட்டும்</title><content type='html'>&lt;img src="http://i100.photobucket.com/albums/m17/oagai/cry.jpg"&gt;&lt;/img&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த இடம்விட்டு நகர்ந்ததும்&lt;br /&gt; என் கண்ணீர் நின்றுவிடும்&lt;br /&gt;அந்த கரையும் பறவையின் கண்ணீரை&lt;br /&gt; காலம் விரைந்து சரி செய்யட்டும்.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-2698622793836857196?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/2698622793836857196/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=2698622793836857196' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/2698622793836857196'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/2698622793836857196'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/08/blog-post.html' title='காலம் சரி செய்யட்டும்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-3419369356057067629</id><published>2007-07-22T10:07:00.001-07:00</published><updated>2007-07-22T19:15:58.581-07:00</updated><title type='text'>புதிய குடியரசுத் தலைவர்</title><content type='html'>&lt;div align="left"&gt;      &lt;span style="font-size:130%;"&gt;    &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;புதிய குடியரசுத் தலைவர்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     குடியரசு ஆட்சிமுறையின் ஒவ்வொரு அங்கத்தையும் ரசித்து அனுபவிக்கும் எனக்கு இந்த குடியரசுத் தலைவர் தேர்தல் சற்று கசப்பின் ருசியைக் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறது. நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு கேலிக்கூத்தாக இந்தத் தேர்தல் அரங்கேறியிருக்கிறது. விநோதமான இந்தத் தேர்தல் தோற்றவருக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும் சொல்லவேண்டிய வகையில் அமைந்து விட்டிருக்கிறது. நாட்டுக்கு ஒரு நல்ல மனிதர் குடியரசுத் தலவராக வரும் வாய்ப்பு நழுவிப் போனதோடு தகுதிகளில் சர்ச்சைக்குறியவர் ஒருவர் தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;அப்துல் கலாம்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தான் வகித்த பதவிக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் தனது பதவிக் காலத்தை முடித்திருக்கிறார் நமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அப்துல் கலாம் அவர்கள். அலங்காரமான, அதிகாரங்கள் அற்ற ஒரு பதவியானாலும் நாட்டின் மிகப்பெரிய கௌரவத்தோடு குடியரசின் அடையாளமாகவும் விளங்கும் பதவிக்கு மேலும் கண்ணியம் சேரும் வகையில் அவர் பணி அமைந்திருந்தது. நமது இளைஞர்களுக்கு அவர் முன் மாதிரியாகவும் எவரும் பின்பற்றக்கூடியவராகவும் திகழ்ந்திருக்கிறார். இவர் இளைஞர் மனதில் இடம் பிடித்தது எப்படி என ஞானி ஆனந்தவிகடனில் வினாவொன்றை எழுப்பியிருக்கிறார். சொல்லிலும் செயலிலும் தன் உயர்வுள்ளலை வெளிப்படுத்தும் அவர் இந்திய இளைஞர்களின் இதயத்தில் ஒரு பெரிய இடம் பிடித்தது எப்படி புதிராக இருக்க முடியும்? இப்படி ஒரு தலைவருக்காக ஏங்கிய ஏராளமான மனங்களின் வெற்றிடத்தை நிரப்பியதோடு இந்திய உணர்வற்றிருந்தவர்களின் மத்தியிலும் அவ்வுணர்வையும் கூடவே தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தி தன் பணியை செவ்வனே முடித்திருக்கிறார். இவரை இவருக்குப் பின் இப்பதவியை வகிக்க இருப்பவரோடு நம்மால் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஒப்பிட்டதால் வரும் ஏமாற்றத்தையும் தவிர்க்கவும் முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;ஷெகாவத்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடியரசு துணைத் தலவராக இருந்தபோதும் அதற்கு முன்னும் சிறந்த முறையில் பணியாற்றியவர். இவரைப் பற்றிய இந்த &lt;a href="&lt;br /&gt;http://sanimoolai.blogspot.com/2007/07/blog-post_22.html" &gt;சுட்டி&lt;/a&gt; நாம் நல்ல ஒரு வாய்ப்பை இழந்துவிட்டோம் என்பதை பறைசாற்றுகிறது. அவர் தோற்றவுடன் தன் பதவி துறந்ததிலும் அதன் பின்னரான நடைமுறையிலும் கண்ணியம் பளிச்சிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;இப்போது குடியரசுத் தலைவராகத் தேர்வாகி யிருப்பவர்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகக் கூட இவர்மீது ஒரு புதிய குற்றச்சாட்டு கூறப்பட்டது. குடியரசுத் தலைவருக்கான வேட்பாளரான பின்னர் இவர் கூறிய பர்தா பற்றிய கருத்து கருத்துப்பிழை மட்டுமில்லாமல் தேவையற்றதுமாகும். மேலும் ஆவியோடு பேசுவது போன்ற கருத்துகளோ மிகுந்த அவநம்பிக்கையைத் தோற்றுவித்தது. சென்னையிலிருந்து தமது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய இவர் சென்னை வருவ்தே இதுவே முதல்முறையோ என்ற ஐயம் எனக்கு வருமளவுக்கே இவர் வெளியில் தெரிந்தவராக இருந்திருக்கிறார். ஷெகாவத் என்ற பெயருடையவரைக் கணவராக அடைந்ததும் பெண்ணாக இருப்பதுமே இவருக்கு வேட்பாளாராகும் தகுதியைக் கொடுத்திருக்கிறது. தன் களங்கத்தைத் துடைப்பதும், இப்பதவிக்குத் தகுதியானவர்தான் என்று நினைக்க வைப்பதும் இவருக்கு உடனடி கடமைகளாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:130%;color:#006600;"&gt;&lt;strong&gt;பெண் குடியரசுத் தலைவர்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமை மிகப் பெருமையாகப் பேசப்படுகிறது. சர்வ வல்லமை படைத்த பிரதமர் பதவியை இந்திராகாந்தி வகித்த பிறகும் இப்போதும் ராஜஸ்தானிலும் உத்தரப் பிரதேசத்திலும் பெண்களே முதல்வராக இருக்கும்போது கூட, இது எப்படி ஒரு பெரிய விஷயமாக இருக்க முடியும் என்பது எனக்குப் புரியவில்லை. நம் நாட்டில் விடுதலப் போராட்ட காலத்திலும் அதற்கு முன்பான சரித்திர காலத்திலும் புராண காலத்திலும் கூட பெண்கள் பொது வாழ்விலும் அரசியலிலும் ஈடுபடுவது மற்றும் பெரும் பதவிகளை வகிப்பது அரிதான விஷயமல்ல. ஆயினும் இப்போது இந்த அளவில் கொண்டாடப் படுவது எனக்கு பெரிய வியப்பாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#006600;"&gt;&lt;strong&gt;இந்து பத்திரிக்கை தலையங்கம்:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;இன்றைய இந்து பத்திரிக்கையின் இவ்விஷயம் பற்றிய &lt;a href="http://www.hindu.com/2007/07/22/stories/2007072255480800.htm" &gt;தலையங்கம்&lt;/a&gt; மிகப் பெரிய ஏமாற்றம். குடியரசுத்தலைவர் பதவியைப் பற்றிய சில சட்ட நுனுக்கங்களும் எதிர்கட்சிகள் நடந்து கொண்ட முறைக்கு பெரும் கண்டனங்களுமாக அத்தலையங்கம் இருக்கிறது. தனது பிஜேபி எதிர்ப்பு நிலையை பட்டவர்த்தனமாக எப்போதும் பறைசாற்றும் இந்து இப்போதும் அதை குறைவற செய்து முடித்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;முடிவாக:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;நாட்டு நலனைப் பின்னுக்குத் தள்ளி சுயநலமே முதல் முன்னுரிமையாகக் கொண்டு எல்லா கட்சிகளும் நடந்து கொள்வது ஏறக்குறைய நடைமுறை ஆகிவிட்டது. எந்த ஒரு பெரிய ஊழல் செய்தியோ அல்லது அரசியல்வவதிகளின் முறையற்ற செயலோ அராஜகமோ நமக்கு அதர்ச்சி ஏற்படுத்துவதில்லை. இந்தக் குடியரசுத் தலவர் தேர்தலையும் அவ்வாறே எடுத்துக் கொள்வோம். நமது அரசியலமைப்பு இதையெல்லலம் மீறி நம்மை ஒரு சிறந்த குடியரசாக வைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நாமும் பொருளாதாரத்தில் வலுவாக முன்னேறிக் கொண்டிருகிறோம். செல்வோம். மேலும் செல்வோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;********&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;நடராஜன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;********&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-3419369356057067629?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/3419369356057067629/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=3419369356057067629' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/3419369356057067629'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/3419369356057067629'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/07/blog-post.html' title='புதிய குடியரசுத் தலைவர்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-547318212204472644</id><published>2007-03-07T08:47:00.000-08:00</published><updated>2007-03-07T09:00:09.824-08:00</updated><title type='text'>மகளிர் தின வாழ்த்து</title><content type='html'>&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;இது என் ஐம்பதாவது பதிவு.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;* * *&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-size:130%;color:#003300;"&gt;மகளிர் தின வாழ்த்து&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-size:130%;color:#003300;"&gt;==================&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குப்பைத் தொட்டியே குடிகொண்ட தொட்டிலாய்&lt;br /&gt;தப்பிதப் பிறப்பால் தவிக்கும் பெண்சிசுவே,&lt;br /&gt;&lt;br /&gt;சேரியின் சகதியில் சிரித்து விளையாடி&lt;br /&gt;காரிருள் மேனியாய் மாறிய பெண்மகவே,&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிகள் உனக்கே இல்லையென் றெண்ணி&lt;br /&gt;சுள்ளிகள் பொறுக்கும் சுட்டிப் பெண்ணே,&lt;br /&gt;&lt;br /&gt;பிஞ்சுவிரல் கொண்டு தீக்குச்சி அடுக்கும்&lt;br /&gt;அஞ்சாம் வகுப்பில் அமரும் வயதின்&lt;br /&gt;கெஞ்சும் கண்கள் கொஞ்சும் பெண்மகளே,&lt;br /&gt;&lt;br /&gt;மச்சு வீட்டில் பத்துத் தேய்க்கும்&lt;br /&gt;பத்தே பிராயப் பதுமைப் பெண்பிளாய்,&lt;br /&gt;&lt;br /&gt;பட்டாம் பூச்சிபோல் பறந்திடும் பருவத்தில்&lt;br /&gt;கட்டடம் கட்ட கல்தூக்கும் பெண்பிளாய்,&lt;br /&gt;&lt;br /&gt;சூட்டுத் தார்சட்டி சாலைப் பணிகளில்&lt;br /&gt;வாட்டும் பேதையாம் தாவணிப் பெண்ணே,&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் இருளில் இன்னொரு நிழல்தர&lt;br /&gt;மரமாய் மாறிய மாமட மடந்தையே,&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் கொய்த சிறகுகள் இழந்து&lt;br /&gt;பறக்கவும் ஏலா பரிதாபப் பெண்ணே,&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கொரு மகவாய் அதற்கே வாழ்வாய்&lt;br /&gt;மனத்திடம் கொள்ளும் மனிதப் பாவாய்,&lt;br /&gt;&lt;br /&gt;ஒளியறு பயணத்தில் ஒயில்ஒளித்த பெண்ணே,&lt;br /&gt;&lt;br /&gt;ஓயாமல் உழைத்து ஒயில்ஒழிந்த பெண்ணே,&lt;br /&gt;&lt;br /&gt;அச்சறு சக்கரம் ஆடி வீழ்ந்திடும்போல்&lt;br /&gt;மக்கள் வளர்ந்ததும் அவர்வழிப் போக&lt;br /&gt;இதுவரை வாழ்வினை இழந்திட்ட பெண்ணே,&lt;br /&gt;&lt;br /&gt;நாட்களும் நீண்டு நலிந்து முதுமை&lt;br /&gt;ஆட்கொண்ட பின்னர் அயலார் தயைக்கு&lt;br /&gt;தாழ்ந்து விரிந்த கையுடை மூதாட்டி,&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்தவும் எனக்கு வார்த்தை வரவிலை&lt;br /&gt;மகளிரின் தினமாய் மார்ச்சு எட்டை!&lt;br /&gt;&lt;br /&gt;இனிவரும் தலைமுறை இவ்வகை மகளிரை&lt;br /&gt;கனவிலும் நனவிலும் காணுதல் இலமாய்&lt;br /&gt;திண்ணமாய்ச் செய்வோம் தினமும் எண்ணுவோம்,&lt;br /&gt;&lt;strong&gt;பெண்களின் கல்வியை பேணுவோம் நாமே!!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(நிலை மண்டில ஆசிரியப்பா)&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-547318212204472644?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/547318212204472644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=547318212204472644' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/547318212204472644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/547318212204472644'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/03/blog-post_07.html' title='மகளிர் தின வாழ்த்து'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-7043935345126458640</id><published>2007-03-06T09:31:00.000-08:00</published><updated>2007-03-06T09:44:28.432-08:00</updated><title type='text'>சென்னை சங்கமம்.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#000066;"&gt;சென்னை சங்கமம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பல நாட்கள் நடந்த சென்னை சங்கமத்தில் திகர் நடேசன் பூங்காவில் (வழக்கமாக வலைப்பதிவர் சந்திப்பு நடக்குமே அதே இடம்தான்) நடந்த ஒரு நிகழச்சிக்கு குடும்பத்துடன் சென்றிருதேன். 23ம் தேதி வெள்ளிக்கிழமை. நான் சென்ற போது மாலை ஆறு மணி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமிய இசையும் அதற்கேற்ற ஆடலுடனும் கூடிய சாகச நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் பெயர் தெரியவில்லை. செண்டை தாள ஒலி படு அமர்க்களமாக இருந்தது. அம்மாதிரி நிகழ்ச்சிகள் சென்னை மக்களுக்கு மிகவும் புதிது என்றே நினைக்கிறேன். முந்தைய நாட்களில் கிராமங்களில் சிறு நகரங்களில் கோவில் திருவிழா நேரங்களிலும் பெருந்தனக்காரர்களின் வீட்டு வைபவங்களிலும் இவை அதிகமாக நடத்தப்படும். இப்போது மிகவும் அருகி விட்டது. இவற்றை மீட்டெடுத்து நகரங்களிலும் பரப்பவேண்டும் என்ற நோக்கத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கிராமிய நிகழ்ச்சிக்குப் பிறகு சௌமியா அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி தொடங்கியபோது கிராமிய இசையை ரசித்த மக்களில் பெரும்பான்மையினர் கலைந்து செல்வார்கள் என்று நினைத்தேன். நான் நினத்ததுபோல் நடக்கவில்லை. கூட்டம் அப்படியே இருந்தது. ஏழு மணியிலிருந்து எட்டரை மணிவரை சௌமியா பாடினார். அனைத்தும் தமிழ்ப்பாடல்கள். சில பாரதியார் பாடல்கள். இந்நிகழ்ச்சிக்காகவே சிறப்பாக தயாரித்து வந்திருந்த ஒரு பல்லவியை ராகம் தானம் பல்லவியாகப் பாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அறிந்தவரை சௌமியா செய்தது கர்நாடக இசை மரபுக்கு மிகவும் புதியது. "மோகன வேளையிலே வசந்த காலத்திலே நடேசன் தர்பாரிலே" என்ற பல்லவியை மோகனம், வசந்தா மற்றும் தர்பார் ராகமாளிகையாகப் பாடினார். ராகமும் தானமும் பல்லவியும் பல்லவிக்குப் பிறகு பாடிய சுரவரிசைகளும் இவ்வாறு ராக மாளிகையாகவே அமைத்து பாடினார். மிருதங்கம் வாசித்தவர் மிக அருமையாக வாசித்தார். இந்த ராகம் தானம் பல்லவி சுமார் முக்கால் மணி நேரம் பாடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு,&lt;br /&gt;வந்தே மாதரம், வந்தேமாதரம், வந்தே மாதரம்!&lt;br /&gt;என்று பாடி நிகழ்ச்சியை முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மோகன வேளையிலே வசந்த காலத்திலே நடேசன் தர்பாரிலே ஒரு இனிமையான மாலைப் பொழுது. வரவேற்கத்தக்க இந்த முயற்சி வரும் ஆண்டுகளிலும் தொடர வேண்டும். அடுத்த முறை பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-7043935345126458640?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/7043935345126458640/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=7043935345126458640' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/7043935345126458640'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/7043935345126458640'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/03/blog-post.html' title='சென்னை சங்கமம்.'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-4945558650021859675</id><published>2007-02-17T09:39:00.000-08:00</published><updated>2007-02-18T18:06:43.889-08:00</updated><title type='text'>மூவருக்கு தூக்கு.</title><content type='html'>தூக்கு தண்டனையை ஆதரித்து எழுதும் துர்பாக்கிய நிலை வந்துகொண்டே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மூவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தூக்குதண்டனை நீதி நிலைநாட்டப்பட்டதற்கான நல்லதொரு அறிகுறி. அநீதி ஏற்றுக் கொள்ளப்படுவதற்கில்லை என்ற அரசின் நிலைப்பாடு பொதுமக்களுக்குத் தரும் பாதுகாப்பு உணர்வுக்கு ஈடு இணை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தனிமனித விரோதத்தினாலோ அல்லது வேறு காரணங்களுக்காக தனிமனிதருக்கு இழைக்கப்படும் கொடூர செயல்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படாவிட்டால் கூட பரவாயில்லை. இங்கெல்லாம் மனிதாபிமான அடிப்படையில் தூக்கு தண்டனை வேண்டாம் என்று பரிந்துரை கூட செய்யலாம். ஆனால் &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பொது வாழ்வின் நிம்மதிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த குற்றத்துக்கும் உயர்ந்தபட்ச தண்டனையே வழங்கப் பட வேண்டும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அப்சலுக்கும் அப்படியே அதிமுகவுக்கும் அப்படியே.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-4945558650021859675?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/4945558650021859675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=4945558650021859675' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/4945558650021859675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/4945558650021859675'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/02/blog-post_17.html' title='மூவருக்கு தூக்கு.'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-3547225876960879744</id><published>2007-02-13T07:06:00.000-08:00</published><updated>2007-02-08T20:11:20.823-08:00</updated><title type='text'>துயர சாகரம்.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;துயர சாகரம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேன்கூட்டை நடத்துவது சாகரன் என்பவர் என்று சில மாதங்கள் முன்புதான் தெரியும். சென்ற மாத வலைப்பதிவர் சந்திப்பில் இனிப்புகளுடன் எல்லோருடனும் அறிமுகப் படுத்திக் கொண்ட சிரித்த முகம் கொண்ட அந்த இளைஞர் இன்று இல்லை என்பதை என்னால் இன்னும் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரு வாரங்களுக்கு முன் எனக்கு அவர் அனுப்பிய ஒரு மின்னஞ்சலுக்கு நான் இன்னும் பதிலிடாமலே இருக்கிறேன். சென்ற ஞாயிறு அன்று காலை என்னுடன் அங்கிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏன் பதில் போடவில்லை என வினவினார். இப்போது குற்ற உணர்வில் மனம் கொதிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் இனியராய் இருந்திருக்கிறார். என்னுடன் தொலைபேசியில் மணிக்கணக்கில் சென்ற மாதத்தில் பேசினார். தேன்கூட்டுக்காக பல திட்டங்கள் வைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே முறை நேர்சந்திப்பும் சில மணிநேர தொலைபேசி பேச்சுகளுமே அவருடன் உறவுகளாகக் கொண்ட எனக்குள் ஊற்றெடுக்கிறதே இத்தனை சோகம், அவர் குடும்பத்தினரின் சோகத்தை எண்ணிப் பார்க்கவே  முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;யார் ஆற்றுவார் இதை? நாளே ஆற்றவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-3547225876960879744?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/3547225876960879744/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=3547225876960879744' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/3547225876960879744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/3547225876960879744'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/02/blog-post_13.html' title='துயர சாகரம்.'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-4886945289015578999</id><published>2007-02-02T09:26:00.000-08:00</published><updated>2007-02-02T09:47:25.101-08:00</updated><title type='text'>நல்ல காலம் வருகுது</title><content type='html'>நண்பர்களே,&lt;br /&gt;&lt;br /&gt;   இந்த பாடலைக் கேளுங்கள். மஹாகவி பாரதியின் பாடலை அவர் பேரன் ராஜ்குமார் பாரதி பாடியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=TLB4LOpWxlo"&gt;சுட்டி&lt;/a&gt;: http://www.youtube.com/watch?v=TLB4LOpWxlo&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் வரிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;புதிய கோணங்கி:&lt;br /&gt;&lt;br /&gt;குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு&lt;br /&gt;நல்லகாலம் வருகுது நல்லகாலம் வருகுது&lt;br /&gt;சாதிகள் சேருது சண்டைகள் குறையுது&lt;br /&gt;சொல்லடி சொல்லடி சக்தி மாகாளீ&lt;br /&gt;வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு&lt;br /&gt;&lt;br /&gt;தரித்திரம் போகுது செல்வம் வருகுது&lt;br /&gt;படிப்பு வளருது பாவம் தொலையுது&lt;br /&gt;படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்&lt;br /&gt;போவான் போவான் ஐயோவென்று போவான்&lt;br /&gt;&lt;br /&gt;வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது&lt;br /&gt;தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்&lt;br /&gt;சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது&lt;br /&gt;யந்திரம் பெருகுது தந்திரம் வளருது&lt;br /&gt;மந்திரமெல்லாம் வளருது வளருது&lt;br /&gt;&lt;br /&gt;குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு&lt;br /&gt;சொல்லடி சொல்லடி மலையாள பகவதீ&lt;br /&gt;அந்தரி வீரி சண்டிகை சூலி&lt;br /&gt;குடுகுடு குடுகுடு&lt;br /&gt; &lt;br /&gt;குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு&lt;br /&gt;சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது&lt;br /&gt;தொப்பை சுருங்குது சுருசுருப்பு விளையுது&lt;br /&gt;எட்டு லச்சுமியும் ஏறி வளருது&lt;br /&gt;பயம் தொலையுது பாவம் தொலையுது&lt;br /&gt;சாத்திரம் வளருது சாதி குறையுது&lt;br /&gt;நேத்திரம் திறக்குது நியாயம் தெரியுது&lt;br /&gt;பழைய பைத்தியம் படீலென தெளியுது&lt;br /&gt;வீரம் வளருது மேன்மை கிடைக்குது&lt;br /&gt;சொல்லடி சக்தி மளையாள பகவதி&lt;br /&gt;தர்மம் பெருகுது தர்மம் பெருகுது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-4886945289015578999?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/4886945289015578999/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=4886945289015578999' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/4886945289015578999'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/4886945289015578999'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/02/blog-post.html' title='நல்ல காலம் வருகுது'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116776673265091226</id><published>2007-01-02T11:33:00.000-08:00</published><updated>2007-01-24T18:39:58.453-08:00</updated><title type='text'>திருவாதிரைத் திருநாள்</title><content type='html'>அந்த நாளும் வந்திடாதோ!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சின்னப் பையனுக்கு ஒருநாள் பள்ளிக்கூடம் விடுமுறை கிடைக்கும். காலையில் சுடச்சுட நெய்மணக்கும் களி கிடைக்கும். இந்தக் களிக்கு தான் எத்தனை ருசி! ஆண்டவன் இந்த களியின் ருசியைப் போல் வேறெங்கும் வைத்ததில்லை. புழுங்கலரிசியை வறுத்து, பொரியரிசி ஆக்கி, சற்றே (மிக முக்கியம்-சற்றேதான்) பொடித்து, வெல்லம் சேர்த்து, நெய்வார்த்து கிண்டியெடுத்த களியின் ருசி, ஆகா! ஒரு வருஷம் வரை அப்படியே நாவில் நிற்கிறதே!! அதனால்தானோ என்னவோ இதை திருவாதிரை அன்று மட்டும் செய்கிறார்கள்! இனி அடுத்த திருவாதிரைக்குதான் களி!&lt;br /&gt;&lt;br /&gt;திருவாதிரை என்றால் சிதம்பரம்தான் சிறப்பு. ஆனால் அந்தச் சின்னப் பையன் குடந்தையில் அல்லவா இருந்தான். அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு பெரியத் தெருவுக்கு போவான். அப்பாவுடன் வெளியில் செல்வதென்றால் அது எப்பவும் லாபம் தான். ஏதாவது ஒன்று நிச்சயம் கிடைக்கும். அன்று அங்கு அத்தனை சிவன் கோயில் சாமிகளும் புறப்பட்டு வந்து வரிசையில் பெரிய கடைத் தெருவில் நிற்கும். அப்பா ஒவ்வொரு சாமியாய் கும்பிட்டு வரும்வரை அந்த கடைத்தெருவின் அத்தனை ஆரவாரத்தையும் ஆசை தீர பருகியனுக்கு அவ்வப்போது அப்பா திருநீறு பூசி விடுவார். சில சாமிகளைப் பார்க்க அவன் இரண்டு கக்கத்து இடுக்கிலும் கை கொடுத்து தூக்கி மேலே  காண்பிப்பார். அவனும் கும்பிட்டுவிட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வான். அவர் இறக்கி விட்டவுடன் மறக்காமல் அப்பா கையைப் பிடித்துக் கொள்வான். அத்தனைக் கூட்டத்தில் அப்பாவை தொலைத்துவிடக் கூடாது அல்லவா!&lt;br /&gt;&lt;br /&gt;நான் தாங்க அந்த சின்னப் பையன். ஒவ்வொரு திருவாதிரை அன்றும் மனதில் இந்த படத்தை ஒட்டிப் பார்த்துவிடுவேன். இந்த முறை உங்களோடு சேர்ந்து ஓட்டிப் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவாதிரை அன்று சிவன் கோயில் நகையை திருடலாமா? அப்படி ஒரு கதையைப் படித்தேன். நீங்களும் படித்துப் பாருங்களேன். &lt;a href="http://www.varalaaru.com/Default.asp?articleid=197"&gt;"மாதேவடிகள் ஹாரம்"&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116776673265091226?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116776673265091226/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116776673265091226' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116776673265091226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116776673265091226'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/01/blog-post.html' title='திருவாதிரைத் திருநாள்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116647595863887384</id><published>2006-12-18T13:01:00.000-08:00</published><updated>2007-01-10T21:17:03.760-08:00</updated><title type='text'>கப்பிப்பயல்</title><content type='html'>(அறிவியல் சார்ந்த சரித்திரச் சிறுகதை)&lt;br /&gt;&lt;br /&gt; கதிரவன் தன் தினக் கடமையைத் தொடங்கி கிழக்கை வெளுக்க வைத்துக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் தஞ்சை மாநகரின் மாளிகைகள் காலை வெயிலின் பொற்கிரணங்களால் ஜொலிக்கத்தொடங்கிவிடும். பெண்கள் சாணம் மெழுகிய தெருக்களில் கோலமிட தொடங்கிவிட்டார்கள். பரத கண்டத்தின் தென் பகுதியை ஒருகுடையின் கீழ் ஆண்ட மும்முடிச் சோழர் இராஜராஜரின் புகழ் உலகம் முழுவதும் பரவி கமழ்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான் அவர் தன் வாழ்நாளின் லட்சியமாக பெருவுடையார் கோவிலைக் கட்டிக்கொண்டிருந்தார். ஊரெங்கும் ஒரே பேச்சாக இல்லாமல் உலகமெங்கும் இதே பேச்சாக இருந்தது. முக்கால்வாசி முடிந்திருந்த கோபுரமே விண்ணளாவ நின்றதில் தஞ்சை மக்களே தரைக்கு மேல் ஒரு அடியில் தான் நடந்து கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆனால் அந்தக் கோவில் நிர்மானிப்பதில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நித்த விநோத பெருந்தச்சனுக்கு அந்த காலைப் பொழுது பிரகாசமாய் இல்லை. அவன் மகன் முருகபூபதியால் அவனுக்குத்தான் எவ்வளவு தொல்லை. பத்து வயது பையன்கள் ஒவ்வொரு வீட்டிலும் இவ்வளவு குரும்பா செய்வார்கள்? இவன் ஒரு படை வேறு சேர்த்துக்கொள்கிறான். கல்தச்சன் தெரு பசங்கள் என்றால் தஞ்சையே நடுங்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt; இளவெயிலும் தொடங்கிவிட்டது. அதிகாலை நகர்வலம் வரும் இராஜராஜர் பெருந்தச்சன் வீட்டு திண்ணையில் ஒரு அரை நாழிகை பெருவுடையார் கோவில் பணிகள் பற்றி விவாதித்துவிட்டு போவது வழக்கம். முக்கால் பகுதி முடிந்திருந்த கோபுர வேலைகளைத் தொடர்வதற்கு பெருந்தடையாக இருப்பது விமானத்தையும் அதைத் தாங்கும் பிரமேந்திரக் கல்லையும் மேலே ஏற்றுவதுதான். கோவில் பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் இதற்கு ஒரு வழி கிடைக்காதா என்று தவித்துக் கொண்டிருந்தார்கள். இந்த விவாதத்திலேயே பல நாட்கள் சென்று விட்டன. ஆனால் நேற்றும் இன்றும் இதைப்பற்றியே யோசிக்க முடியாமல் செய்துவிட்டான் பெருந்தச்சனின் மகன். இன்றைக்கு முருகபூபதி மீது பெருந்தச்சனின் பங்காளி வீரபத்திரனே நேரடியாக புகார் கொடுக்கப்போகிறான். 'எல்லாம் இவள் கொடுக்கிற இடம்தான். கண்டித்து ஒரு வார்த்தை சொல்லமாட்டாள். ஒரே மகன் என்றால் இப்படியா செல்லம் கொடுப்பாள். நானே கண்டிக்க வேண்டுமாம். முடிந்தால் செய்யமாட்டேனா?' என்று தாங்க மாட்டாமல் மனதுக்குள் மனைவியைக் கடிந்து புலம்பிக் கொண்டிருந்தான் பெருந்தச்சன். 'அந்த காளி கோவில் விவகாரத்திலேயே முருகபூபதி பற்றி இராஜராஜருக்குத் தெரியும். இப்போது மேலும் கோபமடையப் போகிறார். முருக பூபதியை சிறைப்பள்ளியில் சேர்க்கப் போகிறார்கள்.'&lt;br /&gt;&lt;br /&gt; சென்ற மாதத்தில் ஒரு நாள் கல்தச்சன் தெரு காளி கோவிலில் இரவில் மூல விக்கிரகத்தின் முகத்தில் சிவப்பு ஒளி வீசியது. பூசாரி பயந்து போய் ஏதோ தெய்வ குற்றமென்று சொல்லி பலி பூஜைக்கும் யாகத்திற்கும் ஏற்பாடு செய்யப்போக இராஜராஜரே நேரில் வந்து பார்த்து அந்த ஒளி மேலே ஒரு விளக்கிலிருந்து வருகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. முருகபூபதிதான் ஒரு உடைந்த சிவப்புக் கண்ணாடி சில்லை அவ்விளக்கில் பொருத்தி காளியின் செம்முகத்தை அழகு பார்த்திருக்கிறான். பிறகு அதை அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டான். அதைப் பார்த்து பூசாரி கலவரமடைந்து களேபாரம் செய்துவிட்டான். நல்ல வேளையாக பெருந்தச்சனுக்கு தண்டனையோ அபராதமோ இல்லாமல் எச்சரிக்கையோடு விட்டுவிட்டார் இராஜராஜர். ஆனால் இப்போது என்ன செய்யப்போகிராரோ என்ற கவலையில் பெருந்தச்சன் உழன்று கொண்டிருந்தான். அதோ முன்புரவி காவல் வீரர்கள் ஆடி அசைந்து வந்து கொண்டிருகிறார்கள்! பின்னால் ஒரு கருஞ்சிவப்பு அரபுக்குதிரையில் ஆரோகனித்து வந்து கொண்டிருக்கிறார் இராஜராஜர்.&lt;br /&gt;&lt;br /&gt; வேறுபுறமிருந்து பவ்வியமாக வந்த வீரபத்திரன் பெருந்தச்சனுக்கு வணக்கம் சொன்னான். கொடுக்கப்போவது அவன் மகன் மீது புகார் என்றாலும் பணிவில் குறைவைக்கவில்லை. பெருந்தச்சனும் தலையை ஆட்டிவைத்தான். இராஜராஜர் திண்ணையில் அமர்ந்ததுமே பெருங்கற்களை மேலே ஏற்றுவதைப் பற்றித்தான் விசாரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; "என்ன பெருந்தச்சரே, ஏதாவது வழி தோன்றியதா?"&lt;br /&gt;&lt;br /&gt; "ஐயனே, வழி கிடைக்காமல் போகாது. ஆனால் இன்னும் ஏதும் கிடைக்கவில்லை".&lt;br /&gt;&lt;br /&gt; "அது யார் வீரபத்திரரா? இவர் உனது பங்காளி அல்லவா, உங்கள் கோவில்  திருப்பணி எந்த அளவில் இருக்கிறது வீரபத்திரரே, குடமுழுக்குக்கு நாள் குறித்துவிடலாமா?"&lt;br /&gt;&lt;br /&gt; "அப்படியே செய்யலாம் ஐயனே. எல்லா பணிகளும் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டன. அப்புறம் ஐயனே, எனக்கொரு புகார் இருக்கிறது. சிரமம் பாராது இப்பவே விசாரிக்க வேணும்".&lt;br /&gt;&lt;br /&gt; "யார் மீது புகார் வீரபத்திரரே?"&lt;br /&gt;&lt;br /&gt; "பெருந்தச்சனின் அருமை மகன் முருகபூபதி மேல் தான் ஐயனே. காளி கோயிலில் அவன் செய்ததுதான் உங்களுக்குத் தெரியுமே".&lt;br /&gt;&lt;br /&gt; "அப்போது மன்னித்து விட்டுவிட்டேனே! இப்போது என்ன செய்தான்?"&lt;br /&gt;&lt;br /&gt; "கல்தச்சன் தெருவிலிருக்கும் அத்தனை கிணற்றுக் கப்பிகளையும் எடுத்து வந்துவிட்டான். என் மனையாளோ நேராக குடந்தைவிட்டு கிணற்றில் தண்ணீர் மோந்ததில் குடத்தை நசுங்கிவிட்டாள். என் தாயார் அவளைப் போட்டு வறுத்தெடுக்கிறாள். எல்லாவற்றுக்கும் இந்த சிறுவனும் அவன் கூட்டாளிகளும் தான் காரணம். அதில் என் மகனும் உண்டு ஐயனே!"&lt;br /&gt;&lt;br /&gt; "தச்சரே, மகனைக் கண்டிக்க மாட்டீரா?"&lt;br /&gt;&lt;br /&gt; "ஒரே மகன். அதான் அவன் தாய் ரொம்ப செல்லம் கொடுத்துவிட்டாள்."&lt;br /&gt;&lt;br /&gt; "நீர் கண்டிக்க வேண்டியதுதானே!"&lt;br /&gt;&lt;br /&gt; "ஐயனே, நீங்கள்தான் அவனைக் கேட்க வேண்டும்."&lt;br /&gt;&lt;br /&gt; "அவன் பாடசாலை ஆசிரியர்களிடம் சொல்லிவிடுங்கள்."&lt;br /&gt;&lt;br /&gt; "பயனில்லை ஐயனே! அவன் பாடசாலையில் பரம சாது. படிப்பில் படு சுட்டி. எல்லா ஆசிரியர்களும் அவன் பக்கம்."&lt;br /&gt;&lt;br /&gt; "விநோதமான பிள்ளையைத்தான் பெற்றுவைத்திருக்கிறீர். நித்த விநோத பட்டத்தை அவனுக்குத்தான் தரவேண்டும். சரி அவனை கூப்பிடுங்கள். நான் விசாரிக்கிறேன்." தந்தை அழைத்ததும் தயங்கித் தயங்கி அங்கு வந்தான் முருக பூபதி. இராஜராஜர் விசாரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; "உன் தந்தையின் நற்பெயரைக் கெடுத்துவிடுவாய் போலிருக்கிறதே! இந்தப் புகாருக்கு என்ன சொல்கிறாய்?"&lt;br /&gt;&lt;br /&gt; "............."&lt;br /&gt;&lt;br /&gt; "பேசாமல் நிற்கிறாயே...... முருகபூபதி அழகான பெயர். அந்த முருகன் செய்த குறும்பெல்லாம் எல்லாரையும் மகிழ்வித்தன. நீ ஏன் எல்லோருக்கும் தொல்லை கொடுக்கிறாய்? பயப்படாமல் பதில் சொல்."&lt;br /&gt;&lt;br /&gt; "கல்யாணத்துக்கு முன் வள்ளியைக் கேட்டிருந்தால் முருகனைப் பற்றி அப்படி சொல்லியிருக்கமாட்டள் ஐயனே! எங்கள் குலதெய்வம் திருவேரகத்து (சுவாமிமலை) சாமிநாதன். அதனால் தான் முருகன் என்று என் பெற்றோர் பெயரிட்டனர்."&lt;br /&gt;&lt;br /&gt; "அப்படியானால் அந்தப் பெயரிலா கோளாறு?"&lt;br /&gt;&lt;br /&gt; "நீங்கள் வேண்டுமானால் தச்சேந்திரன் என்று அழைக்கலாம் ஐயனே!"&lt;br /&gt;&lt;br /&gt; "ஏன் அந்தப் பெயர்."&lt;br /&gt;&lt;br /&gt; "என் தந்தையை நீங்கள் தச்சராஜன் என்று அழைப்பதுண்டு அல்லவா?"&lt;br /&gt;&lt;br /&gt; "ஆஹா! இராஜராஜனின் மகன் இராஜேந்திரன் என்றால் தச்சராஜனின் மகன் தச்சேந்திரன்! பயலே, நான் உன்னிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறேன். அரட்டை அல்ல. உனக்கு எதற்கு அத்தனை கப்பிகள்?"&lt;br /&gt;&lt;br /&gt; "பிரம்மேந்திரக் கல்லையும் விமானக் கல்லையும் மேலே தூக்க ஒரு வழி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன், ஐயனே!"&lt;br /&gt;&lt;br /&gt; "தம்பி, பிரமேந்திரக் கல் ஒவ்வொன்றையும்  அசைப்பதற்கே ஐம்பது பேர் வேண்டும். தெரியுமில்லையா உனக்கு. விமானக் கல் பகுதிகளும் ஒவ்வொன்றும் அதைப்போலத்தான். அது தெரியுமா உனக்கு. கப்பிகளெல்லாம் சிறு கற்களுக்குத்தான். நீ சிறு பையனாய் லட்சணமாய் கிட்டிப் புள்ளோ சடுகுடுவோ விளையாடு. அல்லது மல்யுத்தம் கற்றுக் கொள். உன் உடம்புக்குத் தோதாக இருக்கும்."&lt;br /&gt;&lt;br /&gt; "ஐயனே அரண்மனைக் கிணற்றுக் கப்பிகளைப் போல் பெரிய கப்பிகள் ஒரு ஐம்பது வேண்டும். நான் இவர்களை தொந்தரவு செய்யமாட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt; "அத்துடன் பெரிய வடங்களும் உனக்குத் தேவைப் படுமே! செயல்தலைவரே, இந்தப் பையனுக்கு  ஐம்பது பெருங்கப்பிகளும் வேண்டுமளவுக்கு வடங்களும் கொடுங்கள். வார்ப்பு சாலைக்கு அவனை அழைத்து செல்லுங்கள். அவனே தேர்தெடுக்கட்டும். அதன் விலையை பெருந்தச்சனின் ஊதியத்தில் பிடித்தம் செய்து விடுங்கள்."&lt;br /&gt;&lt;br /&gt; "ஐயனே!" என்று அலறினான் பெருந்தச்சன்.&lt;br /&gt;&lt;br /&gt; "சரி, பெருந்தச்சன் நமக்கு நெருங்கியவர். அதனால் பாதிவிலையில் கொடுங்கள். தச்சரே, நேரமாகிவிட்டது முற்பகலில் பெருவுடையார் ஆலயத்தில் சந்திப்போம்." என்று சொல்லி அந்த திண்ணைக் கூட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் இராஜராஜர். அவர்கள் சென்றபின் தன் பிள்ளையிடம் கேட்டான் பெருந்தச்சன்,&lt;br /&gt;&lt;br /&gt; "முருகா, என்னாடா என் மூன்று மாத ஊதியத்திற்கே உலை வைத்துவிட்டாய்? செயல்தலைவரிடம் கப்பிகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு மல்யுத்த பயிற்சியில் சேர்ந்துவிடு."&lt;br /&gt;&lt;br /&gt; "அப்பா,  காளி கோயில் தேரை இந்த கிணற்றுக் கப்பிகளின் உதவியால் நான் ஒருவனாகவே அசைத்துப் பார்த்தேன். அதை அசைக்கப் பத்துப்பேராவது வேண்டுமல்லவா? என்னிடம் ஒரு வழி இருக்கிறது. முயற்சிக்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள். ஊதியம் பறிபோகாது. வெகுமதி விரைந்தோடிவரும்".&lt;br /&gt;&lt;br /&gt; "ஏண்டா நீ பாட்டுக்கு ஏதேதோ செய்கிறாய். தலையாரி யாரும் கேட்பதில்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt; "உங்களிடம் சொல்லி அரசரிடம் சொல்லிவிடுவேன் என்றால் எந்த  தலையாரி என்னைக் கேட்பான்? அப்பா உங்களுக்கு இதெல்லாம் புரியாதப்பா?"&lt;br /&gt;&lt;br /&gt; "அடேய்" என்று கத்திய தந்தை சொல்லைக் கேட்க ஆளில்லாமல் துள்ளி ஓடி வெளியேறினான் முருகபூபதி. இரண்டு நட்களுக்கு அவனைப் பார்ப்பதே அரிதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* * * * * * &lt;br /&gt;&lt;br /&gt; பெருவுடையாரின் ஆலயத்தை கல்லுளிகளின் சப்த ஜாலம் நிறைத்திருந்தது. ஆயிரக்கணக்கில் மக்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். இளங்காலை வெயிலும் கருணைக்காட்டாமல் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. கிழக்குச் சுற்றுச் சுவரின் ஓரத்தில் ஒரு வெண்துகில் பந்தலுக்கடியில் ஒரு இராஜமாது வீற்றிருந்தாள். அவள் அணிந்திருந்த வெள்ளுடையும் முகப்பிரகாசமும் அந்த பகுதியையே ஒளிமயமாக்கிக் கொண்டிருந்தது. பணிப்பெண்கள் பின்புறமும் வேலையாட்கள் முன்னே பணிந்தும் அவள் கட்டளைகளைக் கேட்கத் தயாராக இருந்தார்கள். அவர்தான் சோழ நாட்டு மக்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் மாதரசி, இராஜராஜனின் அருமைத் தமக்கை குந்தவை நாச்சியார். கண்டவர் எவரும் அனிச்சையாய் கையெடுத்து கும்பிட்டுவிடும் அறிவுக்களை சொட்டும் முகவிலாசம் பொருந்திய குந்தவை நாச்சியாரிடம் சற்று பதட்டத்துடன் வந்து நின்றார் ஒரு பகுதியின் தலைமை தச்சர்.&lt;br /&gt;&lt;br /&gt; "மாண்புமிகு பேரரசி, என்னை மன்னிக்கவேண்டும். ஒரு தவறு நடந்திருக்கிறது".&lt;br /&gt;&lt;br /&gt; "கந்தமூர்த்தித் தச்சரே என்ன கலக்கம் உங்களுக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt; "முன்மண்டப தெற்கு வாயிலின் முகப்புத் தூண்களுக்கான ஒரு பெரிய கல் காணவில்லை. அதிலிருந்து நான்கு தூண்கள் செய்யத் திட்டமிட்டிருந்தேன். நேற்று அதில் குறியீடெல்லாம் செதுக்கி வைத்துவிட்டுத்தான் போனேன். இன்று காலையில் மாயமாய் மறைந்திருக்கிறது. இரவுக் காவலுக்கு இருந்தவன் ஏதும் சொல்லாமல் காலையில் வீடு சென்றுவிட்டான். அவனுக்குத்தான் ஆள் அனுப்பியிருக்கிறேன்".&lt;br /&gt;&lt;br /&gt; "என்ன சொல்கிறீர்கள் கந்தமூர்த்தி, கொடும்பாளூரிலிருந்து இரண்டு யானைகள் இழுத்து வந்த அத்தனை பெரிய கல்லுக்கு எந்த கள்வன் தஞ்சைக் கோயிலுக்குள் வரப் போகிறான்?"&lt;br /&gt;&lt;br /&gt; "பேரரசி, அக்கல்லை அசைக்கவே இருபது வேலையாட்கள் வேண்டும். ஆனால் மாயமாய் மறைந்துவிட்டது".&lt;br /&gt;&lt;br /&gt; "எங்கே, இராக்காவலில் இருந்த யாருமே இப்போது இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt; "அனைவரும் மாலையில்தான் வருவார்கள். வளர்பிறை முழு ஒளியில் பாட்டும் கூத்துமாகத் தான் நேற்றும் இராக்காவலர்கள் இருந்திருக்க வேண்டும். அரை நாழிகையில் உங்களிடம் மீண்டும் வந்து தகவல் சொல்கிறேன். குஞ்சர மல்லரிடமும் சொல்லியிருக்கிறேன். பெருந்தச்சர் இன்னும் ஆலயத்திற்கு வரவில்லை".&lt;br /&gt;&lt;br /&gt; கந்தமூர்த்தி சென்று விட்ட சற்று நேரத்தில் அங்கு வந்தார் இராஜராஜர். கூடவே பட்டொளி வீசும் புத்தம் புதுமலராக ஒரு கரும் புரவியிலிருந்து குதித்து இறங்கினாள் இராஜராஜனின் அருமைப்புதல்வி சின்ன குந்தவை. பதினாறு பிராயத்திலிருந்த கட்டிளங்குமரி அங்கு வந்து அப்பகுதியை ஒரு மாயாலோகமாக் மாற்றிவிட்டாள். ஓடிச் சென்று தன் அத்தை குந்தவை நாச்சியாரிடம் அடைக்கலமானாள். இராஜராஜரும் அந்தப் பந்தலிலேயே இன்னொரு இருக்கையில் அமர்ந்தார். கந்தமூர்த்தி தச்சன் மீண்டும் வந்து கல் இன்னும் கிடைக்கவில்லை என்று சேதி சொன்னான். இராஜராஜன் அவனைக் கேட்டார்,&lt;br /&gt;&lt;br /&gt; "தச்சரே, இராக்கவலரை அனைத்துவர ஆளனுப்பினீர் அல்லவா, யார் வந்தாலும் என்னிடம் உடனே அழைத்து வாருங்கள்". என்று கூறிய போது அங்கு வந்தான் பெருந்தச்சன்.&lt;br /&gt;&lt;br /&gt; "ஐயனே, தாமதத்திற்கு மன்னிக்க வேண்டும். என் அருமை மகன் இரவு வீட்டுக்கே வரவில்லை. அதான் தேடிக்கொண்டிருந்தேன், சற்று தாமதமாகிவிட்டது".&lt;br /&gt;&lt;br /&gt; "கந்தமூர்த்தி தச்சரே, சற்று நில்லும். நீங்கள் தேடும் கல் இருக்குமிடம் எனக்குத் தெரிந்துவிட்டது. பெருந்தச்சரே மகன் வந்துவிட்டானா, இல்லையா? காலையில் உங்கள் இல்லத்துக்கு வந்த போதுகூட இது பற்றி சொல்லவே இல்லையே!"&lt;br /&gt;&lt;br /&gt; "இல்லை ஐயனே, இன்னும் வரவில்லை. நேற்று தட்டாங்குடி கோயிலில் கூத்துப் பார்க்க போகிறேன், நள்ளிரவு அல்லது வெள்ளென வருவேன் என்று சொல்லிவிட்டு போனான். அவனும் வரவில்லை. அவன் கூட்டாளிகளும் வரவில்லை. அதான் ஊர் பூராவும் தேடிக்களைத்து இங்கு வந்தேன்".&lt;br /&gt;&lt;br /&gt; "பெருவுடையார் கோவிலில் தேடினார்களா?"&lt;br /&gt;&lt;br /&gt; "இல்லை ஐயனே".&lt;br /&gt;&lt;br /&gt; "கந்தமூர்த்தி தச்சரே, அந்த பெருங்கல்லை தரையில் தேடி பயனில்லை. ஆகாசத்தில் தேடுங்கள். உடனே கிடைக்கும். பெருந்தச்சரே கோவிலை ஒரு வலம் வாருங்கள். உங்கள் மகனுடன் வருவீர்கள்". பெருந்தச்சன் உடனே வெளியேறினான். கந்தமூர்த்தி கேட்டான்,&lt;br /&gt;&lt;br /&gt;  "ஐயனே ஆகாசமென்றால்...."&lt;br /&gt;&lt;br /&gt; "அட, சற்று அண்ணாந்துதான் பாருங்கள் தச்சரே, அதோ பாருங்கள் கோபுரத்தின் பின்புறத்தில் ஒரு கயறு தொங்குவதை. அதன் மறு நுனியில் பாருங்கள்".&lt;br /&gt;&lt;br /&gt; "ஆம் ஐயனே கல்லை நகர்த்தி இழுத்துச் சென்ற தடம் மேற்கு நோக்கி சென்றிருக்கிறதை நான் கண்டேன். இதோ போகிறேன்".&lt;br /&gt;&lt;br /&gt; குந்தவை நாச்சியார் தம்பியிடம் கேட்டார்,&lt;br /&gt;&lt;br /&gt; "தம்பி நீ சொன்னாயே அந்த பையனா செய்திருக்கிறான்".&lt;br /&gt;&lt;br /&gt; "அவன் , அவன் தெருவில் உள்ள காளி கோயில் தேரை கிணற்றுக் கப்பிகளால் சற்று நகர்த்தியதை காவலர்கள் ஊர்க்காவல் தலைவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.  அப்போதிருந்தே கண்காணிக்கச் சொன்னேன். நேற்றைய தகவல் மட்டும் இன்னும் எனக்கு வரவில்லை".&lt;br /&gt;&lt;br /&gt; "தம்பி இந்த தச்சேந்திரன் இராஜேந்திரனுக்கும் ஒரு பெரிய கோவிலைக் கட்டித்தருவான் பாரேன்". என்று சொன்ன குந்தவை நாச்சியாரிடம் சின்ன குந்தவை சொன்னாள்,&lt;br /&gt;&lt;br /&gt; "அத்தை அந்த பையனை உடனே பார்க்கவேண்டும். அரண்மனைக்குக் கூட்டிப்போகவேண்டும்."&lt;br /&gt;&lt;br /&gt; "பொறு குந்தவை, பெருந்தச்சன் அவனைக் கண்டுபிடித்து அழைத்து வரட்டும். உன்னப்பன் அவனை விசாரிக்கட்டும். அப்புறம் பார்க்கலாம்".&lt;br /&gt;&lt;br /&gt;* * * * * *&lt;br /&gt;&lt;br /&gt; கந்தமூர்த்தி கோபுரத்தின் மேற்கில் நின்று அண்ணாந்து பார்த்தான். உச்சியில் கழிகளும் கயிறுகளும் பலகை சாரங்களுமாய் இருந்தது. 200 அடி உயரத்தில் சிறியதாய் ஒரு கல் தொங்கலிடப்பட்டு கோபுரப் பக்கத்தினுடன் அணைத்துக் கட்டப்பட்டிருந்தது. ஆகா! அதே கல்தான்! எத்தனை சிறிதாக தெரிகிறது! எப்படி மேலே போயிற்று? ஆட்களை மேலே ஏறச் சொல்லி உறுதிப் படுத்தச் சொன்னான். அவர்கள் சொன்ன செய்தி அவனுக்கு பெரும் வியப்பாக இருந்தது. ஏராளமான் கப்பிகள் கோத்து வாங்கப்பட்டு கயிற்று வடங்களின் பின்னலில் குழப்பக் காடாக இந்தக்கல்லும் பிணைக்கப்பட்டிருந்தது. அதை அவிழ்ப்பதற்குக் கூட இதைப் பின்னியவன்தான் வரவேண்டும். இதைக் கேட்டதும் கந்தமூர்த்தி தச்சன் ஓட்டமும் நடையுமாக அரசரிடம் விரைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; கோவிலின் வடபுற மண்டபமொன்றில் படுத்து தூங்கிய மூன்று சிறுவர்களையும் தன் மகனையும் அசைத்து எழுப்பிய பெருந்தச்சன் தன் மகனிடம் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt; " கூத்துக்குப் போகிறேன் என்று சொல்லி இங்கே ஏன் வந்தீர்கள். அங்கே உங்கள் ஆயிகள் காளி ஆட்டம் ஆடுகிறார்கள், பெற்றவர்கள் உயிரை ஏனடா இப்படி எடுக்கிறீர்கள்?"&lt;br /&gt;&lt;br /&gt; "அப்பா முன் மண்டபத்தின் தெற்கில் இருந்த ஒரு பெரிய கல்லை பல கப்பிகளை இணைத்து நாங்களே கோபுரத்தின் மேலே ஏற்றிவிட்டோம். இராக் காவலர்கள் எல்லோரும் உதவினார்கள். மேற்கே போய் பாருங்களேன்", என்றான் படு ஆர்வத்துடன். பெருந்தச்சனுக்கு கண்கள் சிவந்தன.&lt;br /&gt;&lt;br /&gt; "அடேய், என்ன காரியம் செய்தாய். எத்தனை பேர் உயிருக்கு உலை வைக்கப்பார்த்தாய்? கோபுரத்தில் கல் விழுந்து சேதமானால் அபசகுனமடா படுபாவி". கோபத்தின் குன்றேறி நின்றான் பெருந்தச்சன். மீண்டும் அவனே பொறுமினான்,&lt;br /&gt;&lt;br /&gt; "வா வா, அரசரிடம் சொல்லி உடனே சிறைப்பள்ளிக்கு உன்னை அனுப்பிவிடுகிறேன். நீங்களும் வாங்கடா." என்று சொல்லி அவன் புஜத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு  இராஜராஜன் இருக்கும் பந்தலுக்கு வந்தான். அங்கு முன்பே கந்தமூர்த்தி வந்து விவரத்தைச் சொல்லியிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; "பெருந்தச்சரே அவனை விடுங்கள்", கர்ஜித்தார் இராஜராஜர்.&lt;br /&gt;&lt;br /&gt; சின்ன குந்தவையின் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்து போயிருந்தன. முருகபூபதியை கண்களால் அளந்தாள். நான்கடி உயரம். சற்றே பருத்த தேகம். சுருட்டைத் தலையில் ஒரு பின் கொண்டை. குருவிக்கூட்டைப் போல் தொங்கியது. உடல் முழுதும் கேசத்திலும் மண்ணும் புழுதியும். அவனுடைய இளங்கருப்பு மேனியில் அங்கங்கே காயங்கள் அடைக்கலமாயிருந்தன. இடையில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்தான். உயரம் குறைந்த அந்த பழுப்பு நிறத் துண்டை இடுப்பில் கட்டி இருகாலுக்கும் இடையில் இட்டு பின்புறம் சொருகியிருந்தான்.  வலதுகால்  பெருவிரலில் நகம் பெயர்ந்து இரத்தம் உறைந்திருந்தது. தூங்கி எழுந்து வந்த நிலையிலும் அவன் கண்கள் துறுதுறுவென அலைந்து கொண்டிருந்தது. அலைந்த கண்களில் சின்ன குந்தவை பட்டபோது அவள் முறுவலித்தாள். முருக பூபதிக்கு சூழலின் கணத்தை அந்த முறுவல் நீக்கியது. சற்று தயங்கிய முருகபூபதி தன் மண்டை மண்டையான வெண்பற்கள் தெரிய பளீரென சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; இராஜராஜர் பொய்யான கடுங்குரலில் கூறத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt; "முருக பூபதி, நீ செய்தது உனக்கு சரியெனப்படுகிறதா? உனக்கு கப்பிகள் கொடுத்தது எவ்வளவு தவறு, ஏகப்பட்ட நாசத்தை விளைவித்திருப்பாய் போலிருக்கிறதே. நல்லவேளையாக பெருவுடையான் அருளால் ஒன்றும் அசம்பாவிதம் நிகழவில்லை. உன்னை சிறைக்கு அனுப்புவதாக முடிவு செய்திருக்கிறேன்".&lt;br /&gt;&lt;br /&gt; "ஐயனே, என் பாக்கியம். அங்கேயும் எனக்கு நான் வேண்டியதைத் தந்து அருளவேண்டும்".&lt;br /&gt;&lt;br /&gt; "வழக்கம்போல் உன் தந்தையின் ஊதியத்தில் பிடித்தம் செய்யவேண்டும்", என்றார் இராஜராஜர்.&lt;br /&gt;&lt;br /&gt; "ஐயனே!" என்று அலறிய பெருந்தச்சன் "இவனை பாதாளச் சிறைக்கே அனுப்பிவிடுங்கள்" என்று கூவினான்.&lt;br /&gt;&lt;br /&gt; "தம்பி முருக பூபதி, இதை எப்படி சாதித்தாய்?" என அன்பொழுக வினவினார் குந்தவை நாச்சியார்.&lt;br /&gt;&lt;br /&gt; "அம்மையே, பீமனுக்கு சாதாரணமாகவே பத்து ஆள் பலம். அதாவது ஒரு ஆளுக்குள் பத்து ஆட்கள் ஒளிந்து கொண்டிருப்பதைப் போல. ஆளுக்குள் ஆட்கள். அது போல கப்பிக்குள் கப்பிகள் என்று யோசித்தேன். பரிசோதிதேன். "&lt;br /&gt;&lt;br /&gt; "அபசகுனமாய் ஏதாவது நடந்திருந்தால் என்ன ஆயிருக்கும்?"&lt;br /&gt;&lt;br /&gt; "அம்மையே, ஆறு வடங்கள் அந்தக் கல்லை தரைக்குமேல் தூக்கிவிட்ட பிறகு மேலும் ஆறு வடங்களை சேர்த்துவிட்டேன். அத்தனை இராக் காவலர்களியும் உயிர்காத்து ஓடும் வழியை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளச் சொன்னேன். மேலே வடங்களை எந்த முளையிலும் கட்டாமல் கோபுரம் முழுவதையும் சுற்றிக் கட்டிவிட்டேன். ஆறு வடங்கள் போதுமான எடைக்கு பன்னிரெண்டு வடங்களால் படிமுடிச்சு போட்டார்கள் இராக்காவலர்கள். கல், கயிறு அறுந்தோ அல்லது முடிச்சு அவிழ்ந்தோ விழ வாய்ப்பில்லை. கல்லின் எடை சாய்க்க வேண்டுமானால் கோபுரத்தையே சாய்க்கவேண்டும். அது இந்த யுகத்தில் நிகழப் போவதில்லை. அப்புறம் எல்லாவற்றுக்கும் மேலே இருக்கவே இருக்கிறான் என்னப்பன் திருவேரகத்து சாமிநாதன். அம்மையே நான் ஏதும் தவறு செய்திருக்கிறேனா?"&lt;br /&gt;&lt;br /&gt; "இராஜராஜா, குஞ்சர மல்லரே, பெருந்தச்சரே, என்ன சொல்கிறீர்கள்? பையனுக்கு பாதாள சிறையா அல்லது பதக்கமும் பட்டமுமா?" என்று கேட்டார் குந்தவை நாச்சியார்.&lt;br /&gt;&lt;br /&gt; "பட்டம் கொடுத்துவிடலாம்", கத்தினாள் சின்ன குந்தவை, " அப்பா, அவன் 'கப்பிப்பயல்!'"&lt;br /&gt;&lt;br /&gt;* * * * * * * * * * * * * * * * *&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு:&lt;br /&gt;1. கப்பி (pully) - கிணறுகளில் உபயோகப் படுவது நிலைக்கப்பி. பளு தூக்கிகளில் பயன்படுவது இயங்கு கப்பி . இக்கதையில் இயங்கு கப்பியின் பயன்பாடு முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டதைப் போல் எழுதியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2. இத்தனை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆறே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. பெரிய கோவிலைப் பற்றிய எல்லா ஆச்சரியங்களையும் விட இது பெரிய ஆச்சரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. பெரிய கோவிலைப் பற்றி ஏராளமான தகவல்கள் இணையத்தில் இருக்கின்றன. நாம் அறிந்த மூவரின் சுட்டிகள்.&lt;br /&gt;   &lt;br /&gt;     &lt;a href="http://www.desikan.com/blogcms/?item=94&amp;category=Desikan"&gt;தேசிகன்&lt;/a&gt;&lt;br /&gt;     &lt;a href="http://pavithra.blogdrive.com/archive/cm-05_cy-2004_m-05_d-02_y-2004_o-0.html"&gt;பவித்ரா ஸ்ரீனிவாசன்&lt;/a&gt;&lt;br /&gt;     &lt;a href="http://www.varalaaru.com/Default.asp?articleid=352"&gt;லலிதாராம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116647595863887384?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116647595863887384/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116647595863887384' title='48 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116647595863887384'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116647595863887384'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/12/blog-post_19.html' title='கப்பிப்பயல்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>48</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116515474381781670</id><published>2006-12-03T05:58:00.000-08:00</published><updated>2007-01-03T02:21:52.803-08:00</updated><title type='text'>மதயானை</title><content type='html'>மதயானை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/yaanai/Elephant.gif" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மத யானை மிக வேகத்தில் ஓடியதை எனக்கு படம் பிடித்துக் காட்டியவர் அமரர் கல்கி. அதற்குப் பின் வலைப்பதிவர் பொன்ஸ். அவருடைய ஓடும் யானைப் படத்தை பாராட்டி எழுத வேண்டுமென்று வெகுநாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது அவருடைய நட்சத்திர வாரம் நிறைவடையும் நேரத்தில் எழுதி விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னியின் செல்வன் ஒரு மிகப் பிரமாண்டமான புதினம்.அது சொல்லும் செய்திகள் ஒவ்வொரு துறையிலும் ஏராளம் ஏராளம் ஏராளம். நான்காண்டுகளுக்கு முன் ஒரு மதன் பதிலில் உலகின் மிகச் சிறந்த நாவலென்று அதைச் சொல்ல, கமலஹாசனும் அதையே சொல்ல, நான் மதிக்கும் இரண்டு பெரிய ரசிக மணிகள் இவ்வாறு சொல்லவே, அதைத்தேடிப் பிடித்து ஒரே மூச்சில் அத்தனை பாகங்களையும் படித்து, வெகுவாய் லயித்து போய் மீண்டும் மீண்டும் நான்கு முறைக்கு மேல அத்தனை பாகங்களையும் படித்து படித்து, அதன் பிறகு கூகிளில் தேடி பொன்னியின் செல்வன் இணைய மடற்குழுவில் இணைந்து, கிருபா சங்கர் கொடுத்த ஒரு சுட்டியினால் மீனாக்ஸ் எழுதிய பொன்னியின் செல்வன் தீம் பார்க் பற்றிய ஒரு அறிவியல் புனை கதையைப் படித்து, மரத்தடியில் சேர்ந்து, எழுத்து வாசனை பெற்று, இன்று நானும் ஒரு வலைப்பதிவர் என்பதில் அந்த மதயானைக்கு ஒரு பங்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புதினத்தில் இரண்டு முறை கல்கி மதயானை ஓட்டத்தை விவரித்திருப்பார். யானைமொழி தெரிந்த அருமொழிவர்மன் யானையை மதம் பிடித்தது போல் நடிக்கச் சொல்லி அதிவேக யானையோட்ட உதவியால் தப்பிச் செல்வார். இதில் முதல் ஓட்டம் மிக சுவராஸ்யமானது. பூங்குழலியுடன் வட இலங்கையில் யானை இறவுத் துறைவரை அவர்கள் செய்யும் பயணம் என் மனதில் படம் போல் பதிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்ஸின் படம் எனக்கு இக்காட்சியை மீண்டும் மீண்டும் புதிது படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் யானை ஒரு இளநகையின் தொடக்கத்திலிருக்கிறது.&lt;br /&gt;தொடக்கத்துடன் அது உறைந்து போயிருக்கிறது.&lt;br /&gt;கண்களில் மின்னிடும் குறும்பு அதை உறுதி செய்கிறது.&lt;br /&gt;மதம் பிடித்தது போல நடிக்கும் யானைக்கு மட்டும்தானே இவை இருக்கும்?&lt;br /&gt;முதன் முறை மேடையேறும் சிலர் சிரித்துக் கொண்டே இருப்பதைப் போல! வனமேடையில் நடிக்கும் யானையின் மனமேடைச் சிரிப்பு.&lt;br /&gt;சோர்வின் சுமைகூட அல்ல, சுமையின் வலிதெரியா உற்சாக ஓட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னியின் செல்வன் பொம்மை படமாவது யாராவது எடுக்கும் வரை பொன்ஸின் செல்வம் என் நினைவிலிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக நன்றி பொன்ஸ்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116515474381781670?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116515474381781670/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116515474381781670' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116515474381781670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116515474381781670'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/12/blog-post.html' title='மதயானை'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i55.photobucket.com/albums/g150/poorna_r/yaanai/th_Elephant.gif' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116464527415055867</id><published>2006-11-27T08:31:00.000-08:00</published><updated>2006-11-29T22:52:42.093-08:00</updated><title type='text'>மதங்களைக் கண்டு பயப்படாதீர்கள்</title><content type='html'>கத்திகள் கொலைகளைச் செய்கின்றன&lt;br /&gt;ஆனாலும் எனக்கு &lt;br /&gt;கத்திகளைக் கண்டு பயமில்லை.&lt;br /&gt;கொலைகளைக் கண்டு மட்டுமே.&lt;br /&gt;கத்திகள் இல்லாமல் சமையலே இல்லை&lt;br /&gt;ஒவ்வொரு வீட்டிலும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில கத்திகள் தெருக்களில் &lt;br /&gt;கொலைகளை செய்யும் நேரத்தில்&lt;br /&gt;நம் எல்லோருடைய வீட்டிலும்&lt;br /&gt;அவை சமையல் செய்துகொண்டிருக்கின்றன&lt;br /&gt;அமைதியாக&lt;br /&gt;மிக அமைதியாக.&lt;br /&gt;&lt;br /&gt;உலகெங்கிலும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116464527415055867?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116464527415055867/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116464527415055867' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116464527415055867'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116464527415055867'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/11/blog-post_27.html' title='மதங்களைக் கண்டு பயப்படாதீர்கள்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116434986994529257</id><published>2006-11-23T22:29:00.000-08:00</published><updated>2007-01-11T04:51:51.846-08:00</updated><title type='text'>ஐம்பது சதவிகித எச்சில்</title><content type='html'>&lt;a href="http://balabharathi.blogspot.com/2006/11/blog-post_23.html"&gt;இந்தப்&lt;/a&gt; பதிவில் மூன்று சதவிகிதத்தின் எச்சிலைப் பற்றிய கதையும் கவிதையும் மிக உணர்ச்சிகரமாகப் பதியப்பட்டிருக்கிறது. இது தொடர்பான பெரும்பாலான பதிவுகள் உடனடியாக உணர்வைத் தொடும் வகையிலேயே எழுதப்படுகின்றன. பெரும்பாலும் அவை அறிவைத் தொடுவதில்லை என்பது என் அனுமானம். ஒரு பதினைந்து சதவீதத்தின் மேல் இருக்கும் பரிவாக இவற்றைக் கொள்வதா அல்லது மூன்றின் மேலிருக்கும் வெறுப்பாக இவற்றைக் கொள்வதா? என் கருத்துகளைப் பதிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    மூன்றைப் பொருத்தவரை பல நேரங்களில் ஐம்பதும் ஒன்றுதான் பதினைந்தும் ஒன்றுதான். மூன்றுக்கும் 65க்கும்(50+15) இடையே இருக்கும் பிரச்சனைகள் வேறு. 50க்கும் 15க்கும் இடையே இருக்கும் பிரச்சனைகள் வேறு. 15ந்தின் இன்றைய பிரச்சனைகள் பலவும் 50லிருந்தே வருகின்றன. இதற்கு மூல காரணங்களை ஆராயும் போது நம்மை மூன்றுக்கு இட்டுச் செல்லலாம். அப்போது மூன்றைச் சாடுவதுடன் 50ன் வேலை முடிந்துவிடுகிறதா? ஆனால் அந்த சாடல்தான் எளிதாகவும் விருப்பத்துடனும் செய்யப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;    மூன்றின் எச்சில் முகத்தில் வடிவது இன்று இயலாத ஒன்று. 50ன் எச்சில் குளத்தில் தத்தளிப்பவனுக்கு உடம்பெல்லாம் எச்சில். அவனைக் கரை சேர்த்துவிட்டால் அப்புறம் 65ம் சேர்ந்து மூன்றின் முகத்தில் துப்பலாம். &lt;br /&gt;&lt;br /&gt;    என் பதினான்கு வயதில் நானும் என் நண்பனும்ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தோம் அவ்வூரில் மூன்று ஒன்றுக்கும் குறைவு. 50 ஏறக்குறைய 90. 15 சுமார் 10. ஊர் எல்லையில் நாங்கள் பேசிக்கொண்டிருந்த்போது வெளியிலிருந்து வந்த ஒரு பெரியவர் துண்டைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு ஐயா என் விளித்து அங்கிருந்த இளைஞரிடம் ஏதோ சொல்லிவிட்டு பிறகு ஒற்றையடிப் பாதையில் ஊரை சுற்றிக்கொண்டு சென்றார். 35 ஆண்டுகள் கழிந்தபின்னும் இன்னும் நிலமை அப்படியே இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;     இதற்கு காரணமாக மூன்றைக் கருத என்னால் முடியவில்லை. மூன்றின் ஆதிக்கத்தை ஒழிக்க நினைப்பவர்கள் 15ந்தை ஆட்டிப்படைகிறார்கள். என்னதான் நடக்கிறது தமிழகத்தில். ஆக்கப்பூர்வமாக ஏதாவது நடந்திருக்கிறதா? நானும் பிறந்ததிலிருந்து சாடல்களையே கேட்டுக்கொண்டிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;    50 ஆண்டுகளாக 15 முன்னேறுவதற்கு 50ன் பங்களிப்பு என்ன? 50 செய்த கொடுமைகள் என்ன? தீர்வை நோக்கி அதன் செயல்பாடுகள் என்ன? கீரிப்பட்டியும் பாப்பாப்பட்டியும் காப்பாற்றியதை தொடர்ந்து காப்பாற்றுவதற்கும் அதைக் கூத்தைப்பாருக்கு நீட்டிப்பதற்கும் யோசனைகள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;    20-11-2006 அன்று வெளிவந்த இந்து பத்திரிக்கைச் செய்தியைப் பாருங்கள். &lt;a href="http://www.hindu.com/2006/11/20/stories/2006112003722000.htm"&gt;சுட்டி&lt;/a&gt;. ஆந்திராவில் 4 தலித் பெண்கள் இயக்கும் தனியார் வானொலி நிலையத்தைப்பற்றிய செய்தி. இது போன்றவை தமிழ்நாட்டில் நடக்கிறதா? எங்கே செய்திகள்? எங்கே விளம்பரங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;    மொத்தப் பொறுப்பும் 50க்கு இருக்கிறது. நான் 50ல் இருந்துகொண்டு கூனிக்குறுகி இந்த கேள்விகளைக் கேட்கிறேன். 50ன் பதில் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது கவிதை&lt;br /&gt;உவமைகளின் கயமை&lt;br /&gt;உண்மையிலிருந்து &lt;br /&gt;வெகு தூரம் விலகி இருக்கிறது&lt;br /&gt;உண்மையான கவிதையைப் போலவே!&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு:&lt;br /&gt;1. அனானிப் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.&lt;br /&gt;2. அனானி இல்லையென்றாலும் அசிங்க மொழிக்கும் அனுமதி இல்லை&lt;br /&gt; (எது அசிங்கம் என்பது என் அறிவுக்கே உட்பட்டது)&lt;br /&gt;3. எதிர் கருத்துகளை விரும்பி வரவேற்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116434986994529257?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116434986994529257/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116434986994529257' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116434986994529257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116434986994529257'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/11/blog-post_24.html' title='ஐம்பது சதவிகித எச்சில்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116399362929406167</id><published>2006-11-19T19:29:00.000-08:00</published><updated>2006-11-23T07:10:39.566-08:00</updated><title type='text'>தூண்டில்</title><content type='html'>ஒரு முற்றுப் பெறாத தூக்குக் கயிற்றைப் போல தொங்கிக் கொண்டிருந்தது அந்த தூண்டில் முள். உள்ளிருந்த கொக்கியை அழகாய் முழுதும் மறைத்திருந்தது முள்ளில் நுழைத்திருந்த மண்புழு.  திருப்தியுடன் ஏரியினுள் இறக்கினான் அந்த மீன்பிடிப்போன்.&lt;br /&gt;&lt;br /&gt;    கடிப்பதற்கு வாகாய் கட்டித் தொங்கவிடப்பட்ட இந்த தின்பண்டத்தின் மணத்தால் ஈர்க்கப்பட்டது ஒரு சிறுகெண்டை. தின்று பார்க்கலாம் என்று அதன் அருகே சென்றபோது எங்கிருந்தோ பாய்ந்து வந்தது ஒரு பெருங்கெண்டை. தன்னை உண்ண வருகிறதோ எனெ தப்பியோடிய சிறுகெண்டை திரும்பிப் பார்த்தது. அகலத் திறந்த வாயால் அப்படியே அத்தின்பண்டத்தைக் கவ்விய அப்பெருங்கெண்டை அலறித் துடித்தது. ஓ! அந்த புது உணவில் ஏதோ கோளாறு!! மேலே நீர்மட்டத்தில் ஒரு பெரும்பரப்பு மிதந்து கொண்டிருந்தது. அதிலிருந்து பெரும் கயிறும் அதன் நுனியில் பெரும்பெரும் கொக்கிகளுமாய் அந்த பெரிய ஏரியின் அடிவரை வந்து ஒரு பெரிய கொடிப்பின்னலில் மாட்டிக் கொண்டிருந்தது. சிறுகெண்டை அடங்கமாட்டாத ஆர்வத்தினால் பெருங்கெண்டை அருகில் சென்றது. இப்போது துடிதுடித்த பெருங்கெண்டை அதிவிரைவில் மேலே சென்றது. எதனாலோ இழுக்கப்பட்டதுபோல. அந்த விரைவுக்கு மேல்நோக்கி நீந்த முடியவில்லை. மேலே நீர்மட்டத்திற்கு அருகே சென்றபோது - பெருங்கெண்டையைக் காணவில்லை! சிறுகெண்டையின் சிறிய மூளை குழம்பித் தவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;    ஒரு சிற்றுலா நீந்தலும் தன் சக்கக்களுடன் சல்லாபமும் முடித்து திரும்பி அவ்விடத்திற்கு வந்தபோது சிறுகெண்டைக்கு ஆச்சர்யம்! மீண்டும் அந்த வினோத உணவு அங்கே தொங்கிக் கொண்டிருந்தது!! ஆடாமல் அசையாமல். அருகே சென்று பார்த்தது. இது வினோதம்! அற்புதம் இதன் மணம்!! ஆனால் ஆபத்து ஏதோ இருக்கிறது. தயங்கித் தயங்கி நாலைந்து சுற்று சுற்றிவந்து அந்த மணத்தையும் அதன் அருகாமையையும் முழுதும் அனுபவித்தபின் மெள்ள மெல்ல மெல்ல அருகில் சென்று மென்மையாக வாயால் கவ்வி அக்கொக்கிப் புழுவின் சிறுவிள்ளலை  உண்டபோது, ஆகா! இன்னொரு விள்ளல்!! ஆகா!!! யாருக்கோ தோன்றியிருக்கிறது. இப்படி ஒரு சுவைமிகு உணவை இலவசமாய்த் தரவேண்டுமென்று. அதுவும் இப்படி சாப்பிட வசதியாய் கட்டித் தொங்க விட வேண்டுமென்று. மூன்றாவது விள்ளலுக்கு தயாரான போது சிறுகெண்டடைக்கு முக்கால் வயிறு நிறைந்துவிட்டிருந்தது. இலவச உணவு. இனிய உணவு. இந்த உணவு கிடைக்கும் நாட்கள் இனியநாட்கள்தாம் இனிமேல். கடித்த இடத்திலேயே மூன்றாவது கடியை அழுந்தக் கடித்தபோது, நளுங் என்று பல பற்கள் சுளுக்கிக் கொண்டன. தாங்க முடியாத வலி. ஆ! இதுதானா வில்லங்கம். இனிய இவ்வுணவிற்குள் இப்படியொரு கடும்பொருள். மூன்றாவது கடி வாய்க்குள்ளேயே மெல்லப்படாமல் இருந்தது. பல்வலியின் தீவிரம் குறைந்தபிறகு மெதுவாக ஞமஞமவென்று அதை மென்று உள்ளே தள்ளியதுபோது அந்த சின்ன மூளைக்குள் பல புது சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது. இந்த இலவச படையலை விட முடியாது. மெல்லவே கடிக்க வேண்டும். புதுப்புது இடங்களில் கடிக்கவேண்டும். இந்த உத்தி பலித்தது. இது தொடர்ந்தது. சில விள்ளல்களில் தன் முழு வயிறும் நிறைக்கும் நாட்கள் அடிக்கடி வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;    தூண்டிலின் தன்மையை ஒருபாதி அறிந்திருந்த அந்த வினோத சிறுகெண்டை இப்போது தினமும் தூண்டில்களை தேட ஆரம்பித்தது. ஆனால் ஒருநாள் தூண்டிலின் முனைப்புழு சதைக்கு ஆசைப்பட்டு அதை மெதுவாகக் கடித்தபோதும், அப்போது எதனாலோ ஏற்பட்ட நீரசைவில் முனைமுள்ளில் மாட்டிக் கொண்டது அந்த சிறுகெண்டை. துள்ளிய துள்ளலில் முள் மேலும் ஆழமாகப் பதிந்ததே தவிர விடுபட முடியவில்லை. தக்கையின் தவிப்பைப் பார்த்த மீன்பிடிப்போன் தூண்டிலை மேலே இழுத்தான். சின்னஞ்சிறுகெண்டையைப் பார்த்து ஏமாற்றமும் கோபமும் அடைந்தவன் அதன் வாயைப் பிளந்து முள்ளை விடுவித்து மீனைத் தூர எறிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;    உயிர் போகும் வலி. ஆனால் உயிர் போகவில்லை. வாய் கிழிந்து ரத்தம் வழிந்தது. பிழைத்துவிட்டோம் என்ற எண்ணமே வலியின் பெருமளவைக் குறைத்தது. சிறுகெண்டைக்கு முழுதும் சரியாக சில நாட்கள் ஆயின. இப்போது வாழும் வாழ்க்கை இலவமாகக் கிடைத்த இன்னொரு வாழ்க்கை. ஆனால் இப்பவும் தூண்டில் புழுவை சுவைக்காமல் விடுவதில்லை. இலவசம் எப்போதுமே கவர்ச்சியானதுதான். ஆனால் என்ன, அந்த முள்முனைப் புழுச்சதைக்கு ஆசைப்படுவதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116399362929406167?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116399362929406167/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116399362929406167' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116399362929406167'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116399362929406167'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/11/blog-post_20.html' title='தூண்டில்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116361419390100245</id><published>2006-11-15T10:00:00.000-08:00</published><updated>2006-12-14T09:55:56.120-08:00</updated><title type='text'>படைப்பின் இலவசம்</title><content type='html'>சென்னை நகரில் ஒரு சின்ன வீட்டுக்குள்ளே நடந்த ஓர் உரையாடல்.&lt;br /&gt;   &lt;br /&gt;    "மச்சான், மச்சான், கபாலி மச்சான்"&lt;br /&gt;    &lt;br /&gt;    "இன்னாமே கப்பு, இன்னா கூவுற, ரோசனய கலைக்காதமே"&lt;br /&gt;   &lt;br /&gt;    "இன்னா ரோசன மச்சான், அப்புடியே முங்கிகின. என்னாண்ட சொல்லு "&lt;br /&gt;   &lt;br /&gt;    "பிர்ச்சனயே உன்னாலதாமே! நீ யாரு எத்த கேட்டாலும் குடுத்துகினே கீறியே, அதான் பிர்ச்சனையே!!"&lt;br /&gt;    &lt;br /&gt;    "கேட்டா குடுத்துடு மச்சான்"&lt;br /&gt;    &lt;br /&gt;    "இன்னா பேச்சு பேசுற நீ, பாத்தரம் பாத்து பிச்ச போட தாவலயா?"&lt;br /&gt;   &lt;br /&gt;    "பிச்சைய பத்தி நீ பேசாத மச்சான், நீயே பிச்ச எட்த்து துன்ற ஆளுதான"&lt;br /&gt;    &lt;br /&gt;    "இன்னா குத்திக் காமிக்கிறியா?"&lt;br /&gt;   &lt;br /&gt;    "ஆமா, பத்து ஊட்டு சோறு துன்றதுக்கோசரம் பிச்ச எடுக்கிற நீ. அத்த வுடு, யாரு உன்னாண்ட இன்னா கேட்டாங்க?"&lt;br /&gt;    &lt;br /&gt;    "அல்லாருக்கும் வவுறு நெறைய சோறு வோணுமாம், அல்லாருக்கும் கரீட்டா படி அளக்குனுமாம். அல்லாரையும் அப்பிடியே எரிச்சி பஸ்பமாக்குலாமான்னு தோனுது"&lt;br /&gt;   &lt;br /&gt;    "நீ பொண்டாட்டின்னு கூட பாக்காம என்னையே உயிரோட எரிச்ச ஆளாச்சே, நீ செய்வய்யா, கவாலி!"&lt;br /&gt;    &lt;br /&gt;    "அதான் பொழச்சி முழுசா வந்துட்டியே கப்பு! இன்னா கப்பு ஒன்னு சொல்லகுடாதுன்ற. இந்த கபாலிய காவாலின்னு கபால்னு சொல்றியே!!"&lt;br /&gt;    &lt;br /&gt;    "இதுக்கெல்லாம் ஒன்னியும் கொர்ச்சல் இல்ல!"&lt;br /&gt;    &lt;br /&gt;    "கப்பு உனுக்கு காண்டு ஆவாதேடி,&lt;br /&gt;    கற்பகமே,&lt;br /&gt;    தப்பு ஏது செஞ்சேன், கப்பு உனுக்கு..."&lt;br /&gt;   &lt;br /&gt;    "ஐயே, இன்னாதுய்யா அரத பழசு பாட்டு?"&lt;br /&gt;    &lt;br /&gt;    "புச்சு வோணுமா? இந்தா கேளு,&lt;br /&gt;&lt;br /&gt;    'சிர்ச்சி சிர்ச்சி வந்த சின்ன கப்பு நீ&lt;br /&gt;    பிர்ச்சி பிர்ச்சி வச்ச பிச்சுப் பூவும் நீ.'..."&lt;br /&gt;    &lt;br /&gt;    "டேய் கபாலி...."&lt;br /&gt;    &lt;br /&gt;    "இன்னாடி புர்சனயே டேய்ன்ற?"&lt;br /&gt;   &lt;br /&gt;    "இன்னாய்யா துப்புகெட்ட பாட்டு இது? யாரோ இன்னாவோ கேட்டாங்களே அத்த கவனிய்யா"&lt;br /&gt;    &lt;br /&gt;    "என்னால எதையும் இலவசமா குடுக்க முடியாது"&lt;br /&gt;    &lt;br /&gt;    "இன்னாது இலவசமா? எதுய்யா இலவசம்? நாம வழிய மட்டும் காமிச்சா போதும். சோறு கெடச்சிடும். அவுங்க கையில கீறத அவுங்கலாண்ட கொடுத்தா அது இலவசமா? சொல்ல போனா நீயே ஒரு இலவசம்".&lt;br /&gt;    &lt;br /&gt;    "இன்னாது, இன்னாது, நான் இலவசமா?"&lt;br /&gt;    &lt;br /&gt;    "நானும் தான் இலவசம். அந்த பெர்சு ஒரு கேள்வி கேட்டுச்சே இன்னிக்கி வரைக்கும் பதில் சொன்னியா அதுக்கு?"&lt;br /&gt;  &lt;br /&gt;    "இன்னா பெர்சு, இன்னா கேள்வி."&lt;br /&gt;   &lt;br /&gt;    "உன்ன எதுத்து கேள்வி கேட்டுச்சுன்னு உயிரோட எரிச்ச தமிழ் பெருசு, நக்கீரன்."&lt;br /&gt;    &lt;br /&gt;    "கேள்வி இன்னா?"&lt;br /&gt;   &lt;br /&gt;    "சங்கு அருப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்? - எனாக்கவது ஒரு சாதி கீது உனக்கு இன்னாய்யா சாதின்னு கேட்டுகினார் பாரு"&lt;br /&gt;    &lt;br /&gt;    "ஆமா நமக்கு சாதி இல்ல. அது சரி, நாம இலவசமா?"&lt;br /&gt;&lt;br /&gt;    "மனுசன் மனுசனுக்காக குடுத்துகிட்ட இலவசம் தான் நாம.  இன்னா பிரியுதா?"&lt;br /&gt;&lt;br /&gt;    "மனுசனுங்களே தயார் பண்ணி மனுசங்களுக்கு குடுத்துகிற அரசாங்கங்கள் மாதிரி"&lt;br /&gt;&lt;br /&gt;    "அக்காங்! வைரமுத்து ஒரு கவிதையில ஏதிகினார் பார் -&lt;br /&gt;    'மனுசா நீ படா ஆளுப்பா. இறைவனையே படைச்சுகினியே'..."&lt;br /&gt;&lt;br /&gt;    ஒரு அசரீரி கேட்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;    "ஐயனே, குலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட உன்னை ஏது குலம் என்று கேட்டேனே, என்னை மன்னிப்பாயா? - சொர்கத்திலிருந்து நக்கீரன்."&lt;br /&gt;&lt;br /&gt;    "சரி நக்கீரா, இந்தா இலவசமா ஒரு மன்னாப்பு!"&lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116361419390100245?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116361419390100245/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116361419390100245' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116361419390100245'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116361419390100245'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/11/blog-post_15.html' title='படைப்பின் இலவசம்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116296883822820432</id><published>2006-11-07T22:45:00.000-08:00</published><updated>2006-11-17T17:51:04.093-08:00</updated><title type='text'>திரு காளிமுத்து அவர்கள் மரணம்.</title><content type='html'>நல்ல தமிழில் சிறந்த பேச்சாளர். இந்த ஒரு காரணத்துக்காக எனக்கு பிடித்த மனிதர். அவரது குடும்பத்தினருக்கும் அதிமுகவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116296883822820432?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116296883822820432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116296883822820432' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116296883822820432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116296883822820432'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/11/blog-post_116296883822820432.html' title='திரு காளிமுத்து அவர்கள் மரணம்.'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116295545968930666</id><published>2006-11-07T19:08:00.000-08:00</published><updated>2006-11-08T19:16:58.750-08:00</updated><title type='text'>எதிர்காலம் என்று ஒன்று - ஒரு கேள்வி.</title><content type='html'>திண்ணை-மரத்தடி இணைந்து நடத்திய அறிவியல் புனைகதை போட்டியில் பங்கு பெற்ற கதைகளில் சிலவற்றுடன் மேலும் சில கதைகளையும் சேர்த்து &lt;a href="http://anyindian.com/"&gt;எனி இந்தியன்&lt;/a&gt; பதிப்பகம் 'எதிர் காலம் என்று ஒன்று' என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டிருக்கிறது. இதில் என்னுடைய  'மரக்கலாஞ்சி மாஞ்சிளா' என்ற கதையும் உண்டு. இந்த ,&lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=10507224&amp;format=html"&gt;சுட்டியில்&lt;/a&gt;   கதையைப் படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;    இந்த வார திண்ணை இதழில் வெங்கட் சாமிநாதன் இப்புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனக் கட்டுரை எழுதியிருக்கிறார். &lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=60611023&amp;format=html"&gt;சுட்டி&lt;/a&gt;. அதில் அவர் என் கதையைப் பற்றி கேள்வி ஒன்றை வைத்திருக்கிறார். ஒரு நிழ்கால நிகழ்வைச் சொல்லும் கதையை எப்படி அறிவியல் புனைகதையாகக் கொள்ள முடியும் என்பதே அந்தக் கேள்வி.  கதையில் வரும் கற்பனை செடியான மஞ்சுளாவின் அதீத அறிவியல் சார்ந்த தன்மைகள் மட்டுமே இக்கதையை அறிவியல் புனை கதையாக சேர்ப்பதற்கு போதுமானதாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இது பற்றி எனக்கு தோன்றியவற்றைக் கூற விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    அறிவியல் புனைகதைகளுக்கான விவரிப்பும் வரையரைகளும் திட்டவட்டமானதாக இல்லை என்று நான் கருதுகிறேன். &lt;a href="http://desikann.blogspot.com/2004/10/blog-post_22.html"&gt; அறிவியல் புனைகதை பற்றி சுஜாதாவின் கருத்துக்கள்.&lt;/a&gt;  இது&lt;a href="http://www.maraththadi.com/article.asp?id=2142"&gt; அறிவியல் புனைகதை பற்றிய மாலனின் கருத்துக்கள்.&lt;/a&gt;  இது&lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=60306153&amp;format=html"&gt; அறிவியல் புனைகதை பற்றிய ஜெயமோகனின் கருத்துக்கள்.&lt;/a&gt; எதிர்காலத்தில் நடப்பதாயும், வேற்று கிரகங்கள் வினோத விலங்குகள் தொடர்புடையதாயும், இன்னும் இது போன்ற கற்பனைகள் கொண்டதாயும் இருப்பவை அறிவியல் புனைகதைகள்  என்று ஒரு பொது கருத்து இருக்கிறது. புதுமைப் பித்தனின் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற கதை ஒரு அறிவியல் புனைகதை என வகைப்படுத்த முடியும் எனக் கருதப் படுகிறது. இது சமகாலத்தில் நிகழ்வதான கதைதான்.  என்னுடைய கதை சமகாலத்தில் நிகழ்வதாய் இருந்தாலும் இக்கதையில் ஒரு அறிவியல் சாத்தியக்கூறும் அரிய பல மூலிகைகள் முறையான அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமும் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு சம காலத்தில் நிகழ்வதாகச் சொல்லப்படும் அறிவியல் சார்ந்த கதைகள் ஒரு சவாலான செயலாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் சமகாலத்தில் நடக்கும் அறிவியல் சார்ந்த கதைகளை அறிவியல் புனைகதையாக ஏற்றுக் கொள்வதில் இருக்கும் தயக்கம் எனக்குப் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;    இன்னொரு கோணத்திலும் இக்கதையை அறிவியல் புனைகதையாக வகைப் படுத்த இடமுண்டு.  சிறுகதைப் பிரிவுகளில் எதேனும் ஒன்றில் இக்கதையை வகைப்படுத்த முயலும்போது என்னைப் பொருத்தவரையில் அறிவியல் புனைகதையே முதன்மை தேர்வாக வருகிறது. சமகாலத்தில் நிகழ்வதாகவே விவரிக்கப்படும் என்னுடைய மற்றொரு கதையான &lt;a href="http://oagaisblog.blogspot.com/2006/10/blog-post_17.html"&gt;'விடுதலைப் பட்டறை'&lt;/a&gt; யைக் கூட அறிவியல் புனைகதையாகவே வகைப் படுத்த விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    இது தொடர்பான கருத்துகளை அறிய விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    இப்புத்தகத்திற்கும், என் கதைக்கும் விமர்சனம் அளித்த திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் திண்ணைக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;    இப்புத்தக விமர்சனம் பற்றி மீனாக்ஸின் &lt;a href="http://thavam.blogspot.com/"&gt;பதிவு.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116295545968930666?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116295545968930666/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116295545968930666' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116295545968930666'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116295545968930666'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/11/blog-post_08.html' title='எதிர்காலம் என்று ஒன்று - ஒரு கேள்வி.'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116243790538547711</id><published>2006-11-01T19:16:00.000-08:00</published><updated>2006-11-08T01:09:57.733-08:00</updated><title type='text'>கார்பன் மானாக்ஸைடு - மரண எச்சரிக்கை.</title><content type='html'>சென்னை நகரில் பெய்த மழையில் 28-10-2006 அன்று தாங்கள் இருந்த சீருந்தில் (CAR) மூவர் மூச்சு திணறி இறந்திருக்கிறார்கள். இவர்கள் மரணத்துக்குக் காரணம் ஏராளமான கார்பன் மானாக்ஸைடை சுவாசித்ததுதான் என்பது போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் தெரிய வருகிறது. இது பற்றிய விரிவான செய்தியை ஹிந்து நாளேடு 31-10-2006 அன்று வெளியிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;    வழக்கத்தில் மிக அரிதாக நடக்கும் இந்த மரணங்கள் எனக்கு பெரிய அதர்ச்சியை அளித்தது. ஏனென்றால் நான் சீருந்தின் எல்லா கதவுகளையும் மூடிவிட்டு ஏசியை ஓட விட்டு நான்கு மணிநேரம் கூட தூங்கியிருக்கிறேன். இதுபோல் பலரும் செய்திருக்கலாம். அல்லது செய்யக்கூடும். அவர்களுக்கான எச்சரிக்கை இந்த மரண எச்சரிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;    ஒரு சீருந்தோ அல்லது அதைப் போன்று அடைக்கப்பட்ட ஓர் இடமோ  எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப் படுகிறதோ அதைவிட பன்மடங்கு பாதுகாப்பற்றது என்பதை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. விபத்தில் சிக்கிச் சிதைந்த ஒரு சீருந்து உள்ளிருப்பவர்களுக்கு உடனடி நரகத்தை வழங்கிவிடும். குடந்தையில் பள்ளி சிறுவர்களுக்கு ஏற்பட்டதைப் போல வெளியேற முடியாமையால் ஏற்படும் இன்னல்கள் சூழ்ந்துவிடும். நச்சுக்காற்றை சுவாசித்து அரை/முக்கால் மயக்க நிலைக்கு வந்தவர்களால் கதவைத் திறந்து வெளியேற்முடியாமல் போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்பன் மோனாக்ஸைடு என்றால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;    இது ஒரு நிறமற்ற மணமற்ற சுவையற்ற நச்சு வாயு. மனிதனால் எந்த வகையிலும் இது தம்மை சூழ்ந்திருப்பதை உணரவியலாது.&lt;br /&gt;&lt;br /&gt;    ஒரு சீருந்தின் எஞ்சின் வெளியேற்றும் வாயுக்களில் மனிதனுக்கு ஒவ்வாத வாயுக்கள் மூன்று பிரிவுகளில் இருக்கின்றன. அவை 1. எரியாத எரிபொருளின் ஆவிகள். (unburned hydrocarbons), 2.கார்பன் மானாக்ஸைடு, 3. நைட்ரஜனின் ஆக்ஸைடுகள் (oxides of nitrogen - NOx). இவற்றில் முதலாவதான எரியாத எண்ணெய் ஆவிகள் உருவாதற்கு முக்கிய காரணம் எஞ்சினுக்குள் முழுவதும் எரிவதற்கு போதுமான ஆக்ஸிஜன் அதாவது காற்று இல்லாமல் போவதுதான். இது முற்றிலும் தவிர்க்க இயலாத ஒன்று. ஏனென்றால் எஞ்சின் தொடர்ந்து சரியாக இயங்குவதற்கு சில இயங்குநிலைகளில் காற்று எரிபொருள் விகிதத்தில் எரிபொருள் அளவைக் கூட்ட வேண்டியிருக்கிறது. மூன்றாவதான நைட்ரஜன் ஆக்ஸைடுகள் உருவாகக் காரணம் - எஞ்சினுக்குள் இருக்கும் உயர் அழுத்தம் மற்றும் வெப்ப நிலை காரணமாக பல சிக்கலான வேதி வினைகளினால் அங்கு சும்மா இருக்கும் நைட்ரஜனுடன் ஆக்ஸிஜன் சேர்ந்து கொண்டு சில நைட்ரஜன் ஆக்ஸைடுகளை உருவாக்கி விடுகிறது. இவை அமிலத் தன்மை கொண்டவை. இரண்டாவதான கார்பன் மானாக்ஸைடு ஒரு நிறைவுறாத கார்பன் - ஆக்ஸிஜன் கூட்டுப்பொருள்.  எஞ்சினுக்குள்ளே எரிபொருள் முற்றிலுமாக எரிந்து கார்பன் டை ஆக்ஸைடாகவும் நீராவியாகவும் மாறவேண்டும். ஆனால் பல காரணங்களால் இவ்வினை முழுமையாக நிகழாமல் கார்பன், குறைந்த அளவு ஆக்ஸிஜனுடன் சேர்ந்து இந்த விஷ வாயு உருவாகிவிடுகிறது. இவை மூன்றுமே எரிபொருள் சிக்கனம் மற்றும் உடல்நலத்துக்கு எதிரானவை. இவை எஞ்சினினுள் ஏற்படுவதை ஒழிக்கவும் குறைக்கவும் இடைவிடாத ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;    நட்டநடு நகரத்தில் மிக முக்கிய சாலையொன்றில் மூடியிருக்கும் சீருந்தில் எவ்வாறு இந்த கொல்லும் வாயுக்கள் உருவாக முடியும்? ஹிந்து செய்தி என்ன நடந்திருக்கலாம் என்பதை விரிவாக விளக்கியிருக்கிறது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீருந்தின் அடியில் தேங்கிய மழைநீரால் நீர்மட்டம் உயர்ந்து  வெளியேற்றும் குழாய் (Exhaust pipe or tail pipe) வரை வந்தபின் எஞ்சினிலிருந்து வெளியேறும் வாயுக்களின் கசிவு வளிக்காற்றில் கலக்க முடியாமல் சீருந்தினுள் சென்று அடைந்திருக்கிறது.  இது சீருந்தின் உள்ளிருக்கும் ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து கார்பன் மானாக்ஸிடின் அளவை அதிகரித்திருக்கிறது. நமது இரத்தத்தில் ஆக்ஸிஜன் ஏற்பிகளாக செயல்படும் ஹீமோகுளோபினுக்கு இந்த வாயுவின் மீது அதீத ஈர்ப்பு உள்ளதால் இரத்தம் இவ்வாயுவை அதிகம் உட்கொண்டு உடலுக்குக் கிடைக்கவேண்டிய ஆக்ஸிஜன் அளவை வெகுவாகக் குறைத்துவிட்டிருகிறது. இதன் இறுதி விளைவாக மரணம் நிகழ்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;    ஒரு சீருந்தின் எஞ்சின் குறைந்த அளவில் அதாவது எஞ்சின் இயங்கவும் ஏசி இயங்கவும் தேவையான சக்தியை உண்டாக்கும் நிலையில் (idling conditions)  ஓடினால அது மிகக் குறைந்த வேலைத்திறனில் வேலை செய்யும். இந்நிலையில் எரியாத எண்ணெய் வாயுக்களும் கார்பன் மானாக்ஸைடும் அதிக அளவில் உருவாகும். இது பெட்ரோல் வண்டிகளுக்கு மிகவும் பொருந்தும். உயர்ந்த விலையுள்ள வண்டிகளில் கிரியா ஊக்கி மாசு மாற்றி (catalystic converter) என்ற கருவியை வாயு வெளியேறும் வழியில் எஞ்சினுக்கு அருகில் பொருத்தி இருப்பார்கள். மேலை நாடுகளில் இது எல்லா சீருந்துகளுக்கும் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது எனறு நினைக்கிறேன். இந்த மாசுமாற்றி எஞ்சினுள் உருவாகும் மூன்று அபாய வாயுக்களையும் அபாயமற்ற கார்பன் டை ஆக்ஸைடாகவும் நீராவியாகவும் மாற்றி வெளியே நமது வளிக்கு அனுப்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் என்ன செய்யலாம்:&lt;br /&gt;&lt;br /&gt;    1. சீருந்துகளை அதிக நேரம் சும்மா நிலைகளில் (idling condition) ஓட விடுவது பெரும் தவறு.&lt;br /&gt;&lt;br /&gt;    2. ஏசியை தேவையான சமயங்களைத் தவிர மற்ற நேரங்களில் மறுசுழற்சி நிலையில் வைக்காமல் (recirculation mode) காற்று உள்வரும் நிலையில் (ventilaating mode) வைக்க வேண்டும். இது மிக மிக அவசியம். ஆனால் பெரும்பாலோனோர் அவ்வாறு செய்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;    3. அடைக்கப்பட்ட சீருந்து எந்த அடைக்கப்பட்ட இடத்தையும் விட ஆபத்தானது. எஞ்சின் ஓடிக்கொண்டிருந்தால் இந்த ஆபத்து பன்மடங்காகிறது. இதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத நேரங்களில் இதை உணர்ந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;    4. நின்று கொண்டிருக்கும் சீருந்தை ஒரு ஏசி அறையாக பயன்படுத்தும் சபலத்தை அடியோடு நீக்குவது நலம்.&lt;br /&gt;&lt;br /&gt;    5. ஆனால் தற்போதைய கலாச்சாரத்தில் சீருந்தை ஒரு ஏசி அறையாக நல்லதுக்கும் கெட்டதுக்கும் பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. தவிர்க்க முடியாத நேரங்களில் ஏசியை காற்று உள்வரும் நிலையில் வைத்து மிகக் குறைந்த நேரத்துக்கு அவ்வாறு பயன்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;    6. மாசுமாற்றி பொருத்தப்பட்ட சீருந்துகளை வாங்குவது நலம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116243790538547711?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116243790538547711/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116243790538547711' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116243790538547711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116243790538547711'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/11/blog-post.html' title='கார்பன் மானாக்ஸைடு - மரண எச்சரிக்கை.'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116188788409324846</id><published>2006-10-26T11:35:00.000-07:00</published><updated>2006-12-03T03:40:57.246-08:00</updated><title type='text'>'பூங்கா' வைப் பற்றிய ஐயங்கள்.</title><content type='html'>தமிழ்மணத்தின் பூங்காவைப் பற்றி எனக்கு பல ஐயங்கள் எழுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;    16ம் தேதிய வெளியீட்டில் மரணதண்டனை பற்றிய ஒருதலையான பதிவுகளை அதிகம் கண்டதற்கு நான் கற்பித்துக் கொண்ட காரணம் தமிழ்மணத்தில் அதிகமான பதிவுகள் ஒரு சார்பாக வந்ததால்தான் இப்படி என்பதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;பூங்கா சொல்கிறது,&lt;br /&gt;&lt;br /&gt;//புதிய பார்வைகளையும் பரந்துபட்ட சிந்தனைகளையும் உயிர்ப்பான மொழியிலே வெளிப்படுத்தும் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து//&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்,&lt;br /&gt;&lt;br /&gt;// ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெறும் பதிவுகளுக்கு எண்ணிக்கை வரையறை எதுவும் இல்லை. பதிவரினாலே அனுமதி தரப்பட்ட தரம்வாய்ந்ததெனத் தோன்றும் படைப்புகள் அனைத்தும் தொகுக்கப்பெறும். //&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே தமிழ்மணம் எப்படியோ பூங்காவும் அப்படியே என்று எடுத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரவி ஸ்ரீனிவாஸ் இதை சுட்டிய போது  ரவியின் கருத்துக்களை பதிப்பது பூங்காவின் தனி உரிமை என்ற அளவிலேயே நான் எடுத்துக் கொண்டேன். ஆனால் பூங்காவின் விளக்கம் எனக்கு பல ஐயங்களை உண்டாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பூங்காவின் தொகுப்பாளர் மேசையிலிருந்து:&lt;br /&gt;&lt;br /&gt;// இறையாண்மை என்பது இந்த நூற்றாண்டின் பயங்கரவார்த்தை. ஒவ்வொரு மனிதனுக்கும் நாகரீகத்தின் வழி வந்ததாகக் கற்பிக்கப்படும் இறையாண்மை கடைசியில் சில அரசியல்வாதிகளின் நலன்களுக்காக நாடுகளுக்கு இருப்பதாகவும், மாற்றமுடியாததாகவும் கற்பிக்கப்படுகிறது//&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்துக்கள் ஒரு பதிவிலிருந்து அறியப் படலாம். ஒரு தொகுப்பாளர் மேசையிலிருந்து அறியப்படும்போது,  இது ஒரு அப்பழுக்கற்ற சார்பு நிலையாக எனக்குப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;லக்கிலுக்கின் பதிவு பற்றி:&lt;br /&gt;&lt;br /&gt;//  கட்டுரையளவிலே நன்றாகவிருந்தும், இவ்வாரமுங்கூட, இதே மரணதண்டனை தொடர்பான லக்கி லுக்கின் “முகமது அப்ஸல் யார்? உண்மை நிலவரம் என்ன?” என்ற பதிவும் இன்னமும் சான்றுகளோடு விரிக்கப்பட்டால்மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படும் என்ற ஆசிரியர்குழு உள்ளேயான விவாதத்தின்பின்னாலே தீர்மானிக்கப்பட்டது. //&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் சான்றுகள் விரிக்கப்படவேண்டிய நிலையில் இருக்கும் கட்டுரை என்று பூங்காவே கருதும் ஒரு அரசியல் கட்டுரை எப்படி கட்டுரையளவில் நன்றாக இருக்கிறது என்று குறிப்பிடப்படுகிறது என்று தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பதிவை நானும் படித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே விளக்கத்தில்:&lt;br /&gt;&lt;br /&gt;//  பூங்கா ஆசிரியர் குழுவுக்கும் ஒரு பொதுநோக்கும் ஓரளவுக்குக் கருத்தளவிலே ஒன்றிச் செயற்படும் அரசியல், சமூகச்சித்தாந்தச்சாய்வும் உண்டு.  //&lt;br /&gt;&lt;br /&gt;    இது பொதுவான ஒரு கருத்தாக இருந்தாலும், இந்த விளக்கத்தை முழுமையாகப் படித்தபின், தொகுப்பாளர் மேசையை படிக்கும் போது பூங்காவைப் பற்றிய அறிவிப்பிலும் விவரிப்பிலும் சொல்லாமல் விடப்பட்ட பலவற்றை எண்ண வேண்டி வருகிறது. தமிழ்மணத்தில் ஒரு சார்புடைய பதிவுகள் மிக அதிகமாக வருகின்றன என்பதற்குக் காரணம் அந்த வகைப் பதிவாளர்கள் அதிகமாக இருப்பதும் அவர்கள் அதிகமாக எழுதுவதும். ஆனால் அந்த எழுத்துகளின் தொகுப்பே பூங்காவோ அல்லது பூங்காவே அதற்குத் தானோ என்பதான ஐயம் எனக்கு வந்திருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116188788409324846?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116188788409324846/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116188788409324846' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116188788409324846'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116188788409324846'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/10/blog-post_27.html' title='&apos;பூங்கா&apos; வைப் பற்றிய ஐயங்கள்.'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116103364129208208</id><published>2006-10-16T13:53:00.000-07:00</published><updated>2006-10-30T22:18:37.693-08:00</updated><title type='text'>விடுதலைப் பட்டறை</title><content type='html'>-அறிவியல் புனைகதை-&lt;br /&gt;&lt;br /&gt; பேய் பிடித்திருந்த அந்த பத்து பேரின் கூச்சல் அப்படியொன்றும் நாராசமாக இல்லை. ஆனால் ரசிக்கும்படியாகவும் இல்லை.  சக்திவேல் சித்தரின் சக்திபீடம் என்றழைக்கப்பட்ட அந்த சிறு கோயிலுக்குச் சற்று தள்ளி இருந்த கொட்டகையில்தான் அந்த பத்துபேரும் வரிசையாக அமர்ந்து உலகில் இல்லாத சுருதிகளில் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். பவுர்ணமி முன்னிரவின் ஒளியையும் சிற்சில அகல் விளக்குகளின் ஒளியையும் தவிர அந்தப் பிரதேசத்தில் வேறு வெளிச்சமே இல்லை. அவர்கள் வடக்கு நோக்கி அமர்ந்திருந்தார்கள். திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையிலிருந்து பிரியும் ஓர் ஒற்றையடிப் பாதையில் கொஞ்ச தூரம் சென்றால் அந்தப் பீடம் வரும்.  பதினான்கிலிருந்து நாற்பது வயது வரை இருந்த அவர்களில் பெண்களும் இருந்தார்கள். எல்லோரும் ஒற்றை ஆடை அணிந்திருந்தார்கள். ஆண்கள் வேட்டி மட்டும் இடுப்பில். பெண்கள் பாவாடை மட்டும். குளத்தில் குளிக்கும்போது அணிவதுபோல் அணிந்திருந்தார்கள். கையில் சவுக்குடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். சித்தர் வந்தார். எல்லோரும் அமைதியானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; "உங்களைப் பிடித்த பைசாசங்கள் வெளியேறி வானில் கலக்கும்.  அவை இனி எப்பொழுதும் உங்களிடம் வரா. நீங்கள் அதை உணர்வீர்களாக! உங்கள் எல்லா புலன்களும் அதை உணருமாக!! அப்போது மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்வீர்கள். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு இது நடக்கும். அதன் பின் இங்கேயே தூங்கி காலை புதிதாய் எழுவீர்கள். புது மனிதராய் வீடு செல்வீர்கள்". நல்ல ஒரு தொனியோடு இதைச் சொல்லிவிட்டு ஒரு திருவாசகத்தைப் பாடிவிட்டு சென்றுவிட்டார். பன்னிரண்டு மணிக்கு மலை அடிவாரத்தில் மெலிதாக புகைபோல எழுந்தது. திரி திரியாய்ப் பிரிந்து வானில் கலந்து மறைந்தது. அங்கு  அடர்த்தியான அமைதி நிலவியது. எல்லோரும் மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டார்கள். அந்த சிறு வெண் புகை மண்டலம் காற்றில் கலந்து நீர்த்துப்போனதைக் கண்ணாரக் கண்டார்கள். சித்தர் குளிர்ந்த சுனைத் தண்ணீரை எல்லோர் மேலும் தெளித்தார். எதுவும் பேசாமல்  வெரும் சைகைகளாலேயே அவர்களிடம் உடை மாற்றிக் கொண்டு கிழக்கு நோக்கிப் படுக்கச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt; காலை சூரியனின் இளங்கதிர்கள் அவர்களை எழுப்பியபோது பறவைகளின் இன்னிசைகளுடன் புதிதாக எழுந்தார்கள். தம்மை அழைக்க வந்தவர்களுடன் அமைதியாக தியானத்தில் அமர்ந்திருந்த சித்தரிடம் மவுன ஆசிகளைப் பெற்றுச்சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; வேலூரின் புறநகர்ப் பகுதியில் ஒரு தனியார் கழகம். (private club)&lt;br /&gt;&lt;br /&gt; "ஒரு நெத்திலி ஃபிரை கொடுப்பா" என்ற சபாபதி, &lt;br /&gt;&lt;br /&gt; " ராஜாராம் உங்களுக்கு என்ன வேணும், என்று கேட்டார். &lt;br /&gt;&lt;br /&gt; ராஜாராமும் சபாபதியும் ஒரு பயணத்தில் சந்தித்து நண்பர்களாக ஆனவர்கள். இருவரும் ஐம்பது வயதைக் கடந்திருந்தார்கள். சபாபதி பொறியாளர். சொந்தமாக சிறு தொழில் நடத்துகிறார். ராஜாராம் மருத்துவர். சில மருத்துவமனைகளில் அழைக்கப்படும் மருத்துவர். (visiting docter) தனியாகவும் மருத்துவம் செய்து வருகிறார். இந்தக் கழகத்தில் அவர்கள் எப்போதாவது சந்திப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; "விஸ்கி" என்றார் ராஜாராம். &lt;br /&gt;&lt;br /&gt; சபாபதி தன் துரவரை(driver) அழைத்து காரிலிருந்து ஏதோ எடுத்துவரச்சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt; "இங்க ஸ்காட்ச் இருக்காது. அவன் ஷீவாஸ் ரீகல் எடுத்து வரப் போறான்", என்றார் சபாபதி.&lt;br /&gt;&lt;br /&gt; "புது எடத்துக்குப் ஃபேக்டரியை மாத்திட்டீங்களா? எப்படி ஓடுது?", என்று வினவினார்.&lt;br /&gt;&lt;br /&gt; "திருவண்ணாமலை அடிவாரம். எனக்கு இந்த பொலூஷன் கண்ட் ரோல் (மாசுக்கட்டுப்பாடு) தொல்லையிலிருந்து விடுதலை கெடச்சிருச்சு. ஆனா வீட்டை போளூர்ல வச்சுகிட்டு தெனம் 40 கிமீ போய் வர்றது பிரச்சனையா இருக்கு. திர்ணாமலைக்கு மாத்திடலாமான்னு பாக்கிறேன்".&lt;br /&gt;&lt;br /&gt; "போளூர்ன்ன உடனே நினைவுக்கு வருது. அந்த பக்கத்திலேர்ந்து ஒரு பேஷண்ட் எங்கிட்ட வந்தான். சிறு வயசுதான். புத்தி கொஞ்சம் பேதலிச்சு போய் இருக்கான். பேயடிச்சிருக்குன்னு சொன்னாங்க. பாவம் அவனுக்கு ஏதோ மன நோய் பீடிச்சிருக்கு".&lt;br /&gt;&lt;br /&gt; "சைக்கியாட்ரிஸ்ட்டு கிட்ட அனுப்ப வேண்டியதுதானே".&lt;br /&gt;&lt;br /&gt; "அவர்கள் அவன் நோயை மேலும் அதிகமாக்கிடுவாங்க. இது மாதிரி வியாதிகளுக்கு அவங்க சரிபட மாட்டாங்க".&lt;br /&gt;&lt;br /&gt; "என்ன டாக்டர், நீங்களே இப்படிச் சொல்றீங்க. அப்பறம் வேப்பலதான் அடிக்கனுமா?"&lt;br /&gt;&lt;br /&gt; "ஆமா. அடிக்கிற அடில பேய் இவங்கள உட்டுடும். அல்லது இவங்க பேய  உட்டுடுவாங்க. இந்த பையனுக்கு 25 வயசிருக்கும்.  நல்ல வசதியா இருக்கான். படிச்சவன். வேலூர்லதான் வேலை. தினம் கார்ல வந்துட்டு போறான். இப்ப அவன் காரை பேய் மாதிரி ஓட்றதா சொல்றாங்க".&lt;br /&gt;&lt;br /&gt; "ராஜாராம் பேய் பிசாசெல்லம் இருக்கா?"&lt;br /&gt;&lt;br /&gt; "ஒரு டாக்டர்கிட்ட கேக்கிற கேள்வியா இது. சரி, நீங்க சொல்லுங்க, பேய் பிசாசெல்லாம் இருக்கா?"&lt;br /&gt;&lt;br /&gt; "சக்திவேல் சித்தர்னு ஒருத்தர் திர்ணாமலைல பேய்கள்கிட்டயிருந்து விடுதலை கொடுக்கிறார்னு கேள்வி பட்டிடுக்கீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt; "யாரோ சொன்னாங்க. அங்க ஆவி பிரியறதைக் கண்ணாலேயே பாக்கிறமாதிரி சொல்றாங்க".&lt;br /&gt;&lt;br /&gt; சபாபதி மூன்றாவது சுற்றிலும் ராஜாராம் இரண்டாவது சுற்றிலும் இருந்தார்கள். இவர் பிராந்தி அவர் விஸ்கி. &lt;br /&gt;&lt;br /&gt; "ஒரு தந்தூரி சிக்கன் வாங்கிட்டு வாப்பா. இங்க இல்லன்னா கார எடுத்துகிட்டு போய் வெளிலருந்து வாங்கிட்டுவா" என்று கழக  ஊழியரிடம் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt; "டாக்டர் இருக்கார்னு தந்தூரியா, 65 க்கு இன்னிக்கு விடுதலையா?"&lt;br /&gt;&lt;br /&gt; "ராஜாராம், நான் தந்தூரிக்கு மாறி ரொம்ப நாளாச்சு. எண்ணை ஆகமாட்டேங்குது. இந்த நெத்திலி பிரைக்குதான் தந்தூரி மாதிரி ஒரு வழி கண்டுபிடிக்கணும். அப்புறம் ராஜாராம் அந்த சித்தர் படாத கஷ்டங்கள்லாம் பட்டு இமயமலைக்கெல்லாம் போய் பலதை கத்துகிட்டு வந்திருக்கார்".&lt;br /&gt;&lt;br /&gt; "ஆனா பேய் பிசாசுன்னு சொல்றது எல்லாம் கதை இல்லியா? மக்கள ஏமாத்தறது இல்லியா.  ஆயிரக்கணக்கில பணமெல்லாம் வாங்குறது பித்தலாட்டம்".&lt;br /&gt;&lt;br /&gt; "ராஜாராம், எல்லா பித்தலாட்டமும் தப்பு நோக்கத்துக்காக இல்ல. சைக்கோ டாக்டரால இத குணப்படுத்த முடியலையே. நீங்களே ஒத்துகிறீங்க. ஆனா சித்தர் செய்யிறாரே. பணம் வாங்காம செய்தா அந்த நோய் குணமாகாதே".&lt;br /&gt;&lt;br /&gt; இதில் இன்னொரு கோணமிருப்பதை புரிந்து கொள்ள ராஜாராமுக்கு சற்று நேரம் பிடித்தது. உடனே மூன்றாவது சுற்றைத் தவிர்த்துவிட்டார். தந்தூரியை ஒரு கை பார்க்கத் தொடங்கினார்".&lt;br /&gt;&lt;br /&gt; "சபாபதி உங்களுக்கு இதிலே ஏதோ விஷயம் தெரியும் போலிருக்கே...."&lt;br /&gt;&lt;br /&gt; "யாரோ ஒரு பையனைப் பத்தி சொன்னீங்களே அவனுக்கு எப்படி பேய் புடிச்சதா சொல்றாங்க. அவனப்பத்தி சொல்லுங்க".&lt;br /&gt;&lt;br /&gt; "அவன் பேரு சிவாஜி. ஒரு நாள் ஒரு ஆக்ஸிடெண்ட்டுல ஒரு சின்ன கொழந்த தலை நசுங்கி சாவறதப் பார்த்திருக்கான்.  காப்பாத்த ஓடி வந்த அந்த கொழந்தையோட அம்மாவும் அங்க அடிபட்டு ஸ்பாட்டிலேயே அவுட். அங்கேர்ந்து வீட்டுக்கு ஓடி வந்துட்டான்".&lt;br /&gt;&lt;br /&gt; "இவனா மோதுனான்".&lt;br /&gt;&lt;br /&gt; "இல்ல. காரை ஓரமா நிறுத்தி ஒண்ணுக்குப்போக போயிருக்கான். அது ஒரு வளவான இடம். வேகமாக வந்த வேன் இவன் காரை ஒதுக்கிப்போகப் போனபோது சாலையோரத்தில் விளையாடியக் குழந்தை மேல் ஏறிட்டுது. இவனுக்கு குற்ற உணர்வு. வளவுல கார நிறுத்தி இப்படி ஆயிடுச்சேன்னு. அன்னையிலேருந்து அப்டி ஆயிட்டான்".&lt;br /&gt;&lt;br /&gt; "அந்த சிவாஜியோ எம்ஜியாரோ அவன உடனே நம்ம சித்தர்கிட்ட அனுப்புங்க. பவுர்ணமி அன்னிக்கு மட்டும்தான் அவர் இதச் செய்வாரு. சாயங்காலம் எட்டு மணிக்குள்ள  போயிடணும். மறுநாள் காலை நிம்மதியா வந்துடுவான். எட்டு மணிலேர்ந்து அவனுக்கு விதவிதமா ட்ரீட்மெண்ட். பயப்படாதீங்க. சவுக்கடி, வேப்பிலை அடி இதெல்லாம் இல்லை.  சுலோகமும் யோகமும்தான். அஞ்சாயிரம் ஆகும். அதுக்கு மேலயும் விருப்பப்படி கொடுக்கலாம். சரியாடுச்சுன்னா நான் சொல்றேன் அதுல என்னா உள் விஷயமுன்னு".&lt;br /&gt;&lt;br /&gt; "சரி நான் அனுப்பிப் பார்க்கிறேன். அவனுக்கு அவனோட பேய்கள்கிட்டேர்ந்து விடுதலை வேணும்".&lt;br /&gt;&lt;br /&gt; ஆனால் சிவாஜி பலநாட்களாக அவரது மருத்துவமனைக்கு வரவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt; போளூர்-வேலூர் சாலையில் மிக உற்சாகமாக வந்து கொண்டிருந்தார்கள் சங்கரும் மனோவும். சங்கர்தான் அந்த புதிய பல்சர் வண்டியை படு உற்சாகமாக ஓட்டிக் கொண்டு வந்தான். சில நாட்களுக்கு முன்பு வாங்கிய அந்த வண்டியை அனுபவித்தான் சங்கர். அவர்கள் ஒரு  தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்கள். விடுதியில் தங்கியிருந்தார்கள். அவர்கள் அந்த சிவாஜியின் விபத்து வளைவைக் கடந்து வந்துகொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; "மனோ இருட்டிப் போச்சு. இனி லாரிக்கானுங்க ஹெட்லைட் அடிச்சே டார்ச்சர் பண்ணிடுவானுங்க".&lt;br /&gt;&lt;br /&gt; "டேய் உனக்கு பேஜாரா இருந்தா சொல்லு நான் ஓட்டுறேன்", என்றான் மனோ. "இல்ல நானே ஓட்டுறன்" என்ற சங்கர் நிதானமாய் வண்டி ஓட்ட ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; மாலை ஆறுமணிக்கு தன் மருத்துவமனைக்கு வந்த மருத்துவர் ராஜாராம் வாசலில் சிவாஜி நிற்பதைக் கண்டார். பதற்றமாக இருந்தான். உள்ளே பல நோயாளிகள் காத்துக் கொண்டிருந்தனர். இவனை தன் கூட வரச் சொல்லி தன் அறைக்குச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt; "டாக்டர் பயங்கர கொடுமையா இருக்கு. ராத்திரில ரொம்ப தீவிரமா ஆயிடுறேன். எல்லாரும் என்னைப் பார்த்துப் பயப்படுறாங்க. கொஞ்ச நாள்ல கட்டிப் போடுவாங்க போலிருக்கு".&lt;br /&gt;&lt;br /&gt; "தம்பி ஏன் நீங்க இவ்வளவு நாளா இங்க வரல".&lt;br /&gt;&lt;br /&gt; "பல முயற்சி செய்து பாத்துட்டேன். ஒண்ணும் நடக்கல. தற்கொலை பண்ணிக்கலாம் போலிருக்கு".&lt;br /&gt;&lt;br /&gt; "சே, அப்படியெல்லாம் சொல்லாதே. உன் பிரச்சனை தீர்ர நாள் வந்திடுச்சு. ஒரு முயற்சி பண்ணி பாரு. நல்ல வேளை. இன்னிக்கு பவுர்ணமி. நீ எட்டு மணிக்குள்ள திருவண்ணாமலைல சக்திவேல் சித்தர்கிட்ட போ. கையில பணம் அஞ்சாயிரம் இருக்கா, கார் இருக்கா?"&lt;br /&gt;&lt;br /&gt; "இருக்கு டாக்டர். நானும் கேள்வி பட்டிருக்கேன். எட்டு மணிக்குள்ள போகணுமா. இப்பவே ஆறரைக்கு மேல ஆயிடுச்சே, நான் உடனே கிளம்பறேன். வரேன் டாக்டர்".&lt;br /&gt;&lt;br /&gt; அவன் பேய் போல் விரைந்து பிசாசாய் திருவண்ணாமலை நோக்கி போளூர் சாலையில் காரில் விரைந்தான். நன்றாக இருட்ட ஆரம்பித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; "மனோ தூரத்துல ஒருத்தன் ஹெட்லயிட்ட ஹை பீம்ல வச்சுகிட்டு பேய் மாதிரி வர்றான் பாரு".&lt;br /&gt;&lt;br /&gt; "சங்கர் அது கார் மாதிரி இருக்கு. இருந்தாலும் கொஞ்சம் ஓரமாகவே போ".&lt;br /&gt;&lt;br /&gt; நட்ட நடு சாலையில் எம்பி எம்பி பறந்து வந்துகொண்டிருந்தது அந்த கார். அதன் முன் விளக்கொளியில் சங்கர் தடுமாறிப் போனான். அவசரமாக இடதுபக்கம்  ஒதுங்கி வண்டிக்கு தடையிட்டு வேகத்தை குறைத்தான். சற்றே வலப்புறம் சாய்ந்த வண்டியை நிமிர்ந்த தடையிலிருந்து வலது காலை எடுத்து சாலையில் ஊன்றினான். அங்கே புதிதாய் கழித்திருந்த மாட்டுச் சாணத்தில் காலை வைத்துவிட்டான். வண்டி சறுக்கியது. 'சங்கர்' என்று அலறிய மனோ வண்டியிலிருந்து விழுந்துவிட்டான். ஆனால் கிடைசாய்ந்த வண்டியோ அரைவட்டம் சுழன்று முன்நோக்கி பனிக்கட்டியைப் போல் சறுக்கிச் சென்றது. சங்கரும் கீழே விழுந்து சாலையின் இடது புறத்தில் உருண்டான். ஒரு மரத்தடியில் மோதி உருள்வதை நிறுத்தினான். மரத்தடியில் பல மனிதச் சாணங்களின் அபிஷேகம் கிடைத்தது. சங்கர் கொதித்தெழுந்து தன் மேல் சட்டையைக் கழற்றி விசிறி எறிந்தான். கோபத்தின் குன்றேறி நின்ற சங்கர் ஒரு பெரிய வசவினால் அந்த காரோட்டியைப் பழித்துக்கொண்டே ஓடிச்சென்று வண்டியை எடுத்து வெடித்துக் கிளப்பி அந்த காரின் பின் சென்றான். பின்னால் மனோ 'சங்கர் சங்கர்' என்று அலறிக் கொண்டே ஓடிவந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; சிவாஜி ஓட்டிச் சென்ற அந்த கருப்பு நிற சாண்ட்ரோ ஒரு பாரமேற்றிய இரட்டை மாட்டு வண்டியை குறுகிய சாலையில் முந்த முடியாமல் உறுமி உறுமி தவித்துக் கொண்டிருந்தது. மாட்டு வண்டி மெதுவாக அந்த வளைவைக் கடக்க முயன்று கொண்டிருந்தது. சங்கர் இந்த காரை துரத்திப் பிடித்துவிட்டான். வலப்புறம் துரவரின் சன்னலுக்குக்கருகில் வண்டிக்கு இணையாகச் சென்றான். அடைத்திருந்த சன்னலை சிவாஜி திறக்கவே இல்லை. சங்கர் வலது கையை ஆட்டி ஆட்டி வசவுகளை வீச, சிவாஜி முடுக்கியை மிதித்து உறுமி உறுமி பொறி மொழியில் பதில் பேசிக்கொண்டிருந்தான். ஆனால் சங்கர் தன் அபாய நிலையை சற்றும் உணரவில்லை. அந்த காருக்கு சிறு இடைவெளி கிடைத்தாலும் வலப்புறம் திரும்பி தன்னை சரித்துவிடும் என்பதை உணராதவனாய் தன் மோட்டார் சைக்கிளில் அந்த சீருந்துடன் சண்டையிட்டுக்கொண்டிருந்தான். கிடைத்த சிறு இடைவெளியில் இவனை சற்றும் மதியாமல் தன் காரை வலப்புறம் ஒடித்துத் திருப்பி பாய்ந்து சாலையில் ஏகிச் சென்றான் சிவாஜி. "ஆ........அ" என்று அலறிய வண்ணம் சாலையின் வலப்புறத்திற்கு தூக்கி எறியப்பட்டான் சங்கர். அந்த வளைவில் - அதே வளைவுதான் -அவனது வண்டி தன் போக்கில் சென்று எங்கோ முட்டிக்கொண்டது. சங்கர் தான் உயிரோடிருப்பதை முதலில் உறுதி செய்து கொண்டான். கண்களை அகலவிரித்து அருகில் நோக்கினான். 'ஆ, இது என்ன கோரம்! இங்கே எங்கே வந்தது இந்த கொடிய ஓநாய்'. அவனருகே அலங்கோலமாய்க் கிடந்தது விபத்தில் அடிபட்ட ஒரு தெரு நாய். குடல் சரிந்து கோரமாய் வாய் பிளந்து கோலிக் கண்களுடன் சங்கரின் முகத்துக்கு நேராக காட்சி தந்தது. சங்கர் அலறிய அலறல் அந்த பிரதேசம் முழுவதும் எதிரொலித்தது. அவனைத் தொடர்ந்த மனோ பதறிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; இரவின் வைபவங்கள் எல்லாம் முடிந்து காலையில் கொட்டகையில் கண்விழித்த சிவாஜிக்கு அந்த இளம் வெயிலும், மலைகாற்றும், பள்ளத்தாக்கும், பறவை ஒலிகளும், பனிப்புற்களும் பரவசத்தைத் தந்தன. புதிதாய் உணர்ந்தான். மெதுவாய் எழுந்தான். சித்தரைப் பணிந்தான். அமைதியாய் வண்டியை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி செலுத்தினான். இரண்டு நாட்கள் நிம்மதியாய் ஓய்வெடுத்தான். இரண்டு நாட்களும் தெளிவாக இருந்தான். இனி ஒன்றுமில்லை என்ற தெளிவுக்கும் வந்துவிட்டான். மருத்துவர் ராஜாராமைப் பார்த்து நடந்ததை விவரித்தான். ராஜாராம் ஓரளவிற்கு இதை எதிர்பார்த்திருந்தார். இருந்தாலும் ஆச்சர்யப்பட்டார். சபாபதியை தொலைபேசியில் அழைத்து சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt; அதே தனியார் கழகத்தில் அவர்கள் சந்தித்தார்கள். நிகழ்ந்ததை விவரித்து பின் ராஜாராம் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt; "சபாபதி, சித்தர் எப்படி இதை சாதிக்கிறார்?"&lt;br /&gt;&lt;br /&gt; "சுலோகம், திருவாசகம் அப்பறம் கொஞ்சம் யோகம்."&lt;br /&gt;&lt;br /&gt; "அப்புறம்"&lt;br /&gt;&lt;br /&gt; "அந்த சூழ்நிலை, பவுர்ணமி, மலைக்காற்று..."&lt;br /&gt;&lt;br /&gt; "அப்புறம்"&lt;br /&gt;&lt;br /&gt; "நம்பிக்கை. தமக்கு குணமாகிவிடும் என்கிற நம்பிக்கை."&lt;br /&gt;&lt;br /&gt; "இதுதான் முக்கியமான காரணம். அப்பறம் ஏதாவது இருக்கா?"&lt;br /&gt;&lt;br /&gt; "அவ்வளவுதான்."&lt;br /&gt;&lt;br /&gt; "ஏதோ சொல்றேன்னு சொன்னீங்களே அன்னிக்கு."&lt;br /&gt;&lt;br /&gt; "இல்லை. வேற ஒன்னுமில்லை. அன்னிக்கு நான் கொஞ்சம் ஹை. அதான் ஏதாவது புரியாம சொல்லியிருப்பேன்."&lt;br /&gt;&lt;br /&gt; "உங்களுக்கு வேற ஏதோ தெரியும்னு நான் யோசன பண்றேன்."&lt;br /&gt;&lt;br /&gt; "வேற இதுல என்ன இருக்க முடியும் டாக்டர்? எல்லாம்தான் தெளிவா இருக்கே."&lt;br /&gt;&lt;br /&gt; "நிச்சயமா?"&lt;br /&gt;&lt;br /&gt; "ம்"&lt;br /&gt;&lt;br /&gt; "சரி. வர்ர பவுர்ணமி ராத்திரி நான் உங்க ஃபேக்ட்ரிக்கு வரட்டுமா?"&lt;br /&gt;&lt;br /&gt; "தாராளமா வாங்க. ஆனா ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?"&lt;br /&gt;&lt;br /&gt; "என்னான்னு தெரிஞ்சுக்கலாமுன்னுதான்."&lt;br /&gt;&lt;br /&gt; ".........................."&lt;br /&gt;&lt;br /&gt; "நான் வராம இருக்க மாட்டேன். நிச்சயமா வருவேன் சபாபதி." &lt;br /&gt;&lt;br /&gt; "வேண்டாம். நீங்க வரவேண்டாம். உங்களுக்கு வேண்டிய தகவலை நான் சொல்றேன்."&lt;br /&gt;&lt;br /&gt; அவர் சொன்னது இதுதான். சபாபதியினுடையது ஒரு அலுமினிய வார்ப்புத் தொழிற்சாலை. அங்கே அலுமினியம் உருக்கும் போது அதை சுத்திகரிக்கப் போடப்படும் வேதி பொருட்கள் பெரும் புகையை கிளப்ப வல்லன. ஒரு பவுர்ணமியன்று இரவு இவ்வாறு செய்யும்பொழுது ஏதோ ஒரு தவறுதலான வேதிப் பொருளினால் மிகப் பெரிய வெண்புகை மண்டலம் கிளம்பி வெகுதூரம் மேலே சென்றது. அதைக் கண்ட பேய்பிடித்த ஒருவன் தன்னைப் பிடித்த பேயே அவ்வாறு வெளியேறியதாக சித்தரிடம் சொல்ல சித்தரும் அதை உள்வாங்கிக் கொண்டார். பகலில் பைனாகுலரினாலும் காண முடியாத ஒரு இடத்தில் அந்த தொழிற்சாலை அமைத்திருந்ததைக் கண்டுபிடித்து சபாபதியை வரச்சொன்னார். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் அவ்வாறு செய்ய முடியுமா எனக் கேட்டார். சித்தர் மீது பெருமதிப்பு வைத்திருந்த சபாபதியும் அதற்கு ஒப்புக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt; "சபாபதி, ஈஸ் திஸ் நாட் ச்சீட்டிங்? இது பக்கா ஏமாற்று வேலை இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt; "நோ. தன் சொந்த பயங்களினால் தங்களை ஏமாற்றிக் கொண்டவர்கள் மீண்டும் தங்களை ஏமாற்றிக் கொண்டு குணமடைகிறார்கள். அவ்வளவுதான்."&lt;br /&gt;&lt;br /&gt; "அந்த நோக்கில் உண்மைதான்....ஆனால் ஏராளமாக பணம் பண்ணுகிறீர்களே?"&lt;br /&gt;&lt;br /&gt; "பணம் கொடுக்காமல் கிடைக்கும் மருத்துவத்துக்கு மதிப்பிருக்குமா டாக்டர்? இங்கே அவர்கள் கொடுக்கும் பணமும் மருத்துவத்தில் ஒரு பகுதி இல்லியா? இந்த மனோதத்துவம் உங்களுக்கு புரியுமில்லயா? அதுவும் இது போன்ற விஷயங்களில் மனம்தான மருத்துவம் செய்யுது."&lt;br /&gt;&lt;br /&gt; "நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை, சபாபதி."&lt;br /&gt;&lt;br /&gt; "எனக்கு ஒரு பவுர்ணமிக்கு பதினையாயிரம் கொடுக்கிறார். இரண்டாயிரம்தான் எனக்கு செலவாகும். இதில இதுவரை வந்த லாபத்தை அப்படியே வைத்திருக்கிறேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. சித்தர் இதில் வரும் பணத்தை தர்ம காரியங்களுக்குத் தான் பயன்படுத்துகிறார். அந்த புகை வடிவுதான் உங்களைப் பிடித்த ஆவி என்று அவர் சொல்லுவதில்லை. எல்லாம் இவர்களாக நினைத்துக் கொள்வதுதான்."&lt;br /&gt;&lt;br /&gt; "பல டாக்டர்கள் நேரடியாக அடிக்கும் கொள்ளைக்கு இது பரவாயில்லை போலிருக்கே!"&lt;br /&gt;&lt;br /&gt; "நான் ஒரு மெட்டலர்ஜிகல் எஞ்சினீயர். எனக்கு இது ஒரு ஹாபி மாதிரி. ஒவ்வொரு பவுர்ணமி அன்னிக்கும் நான் ஃபேக்ட்ரிக்கு போய் புதுசு புதுசா பரிசோதனை செய்யறதா சொல்லி விதம்விதமா ஆவிகளை உருவாக்குறேன். இதுல மத்தாப்பு செய்யுற மக்னீசியம் சால்டெல்லாம் கலந்து இப்ப  ஏகப்பட்ட விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கேன்."&lt;br /&gt;&lt;br /&gt; ராஜாராம் நன்றி சொல்லி புறப்பட்டார். 'ஆன்மீகமோ அல்லது பித்தலாட்டமோ ஏதோ நாலு பேரு நல்லபடியா ஆனா சரிதான்' இந்த எண்ண ஓட்டத்துக்கு வந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt; அகோரமாய் அலைக்கழைக்கப் பட்ட அந்த முன்னிரவில் கிடைத்த மகா அலங்கோல நாய்ப்பிணத்தின் விஸ்வரூப தரிசனத்தால் சங்கரின் புத்தி பேதலித்திருந்தது. பல நேரங்களில் தூக்கத்திலிருந்து எழுந்து பயங்கரமாக அலற ஆரம்பித்தான். விடுதி மாணவர்கள் கவலையுற்றார்கள். அப்போது போளூர் சாலையில் எதேச்சையாக சிவாஜியைப் பார்த்தார்கள் மனோவும் சங்கரும்.&lt;br /&gt;&lt;br /&gt; "டேய் சங்கர், அவந்தாண்டா, அதே கருப்பு சாண்ட்ரோ, அதே நம்பர். கொலகாரப்பாவி."&lt;br /&gt;&lt;br /&gt; சங்கர் அவன் காருக்குக் குறுக்கே வண்டியை நிறுத்த சிவாஜி வெளியே வந்தான். தடித்த வாக்குவாததில் அமைதியாகப் பேசிய சிவாஜி கடைசியாகச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt; "ஃப்ரண்ட்ஸ், டாக்டர் ராஜாராம்னு வேலூர்ல ஒருத்தர் இருக்கார். அவரோட அட்ரஸ் தர்ரேன். போய்ப் பாருங்க. நிச்சயமா சரியாகும். என்னைக் குணமாக்கியது அவர்தான்."&lt;br /&gt;&lt;br /&gt; மனோவும் சங்கரும் ராஜாராமிடம் வந்தார்கள். மனோ விவரித்தான். ராஜாராம் சங்கரைப் பார்த்து கேட்டார்,&lt;br /&gt;&lt;br /&gt; "தம்பி உம் பேர் என்னா?"&lt;br /&gt;&lt;br /&gt; "ஜோசப்"&lt;br /&gt;&lt;br /&gt; "ஜோசப்?", கொஞ்சம் யோசித்த ராஜாராம் அவனை வெளியே அனுப்பிவிட்டு மனோவிடம் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt; "தம்பி உங்க ஃபிரண்டு இந்துவா இருந்தா திர்ணாமலைக்கு அனுப்புவேன். நீங்க ஒன்னு செய்ங்க. ஒரு பாதிரிகிட்ட கூட்டிட்டு போங்க. மனமாற்றம் தான் இதுக்கெல்லாம் மருந்து."&lt;br /&gt;&lt;br /&gt; "சார் அவன் இந்துதான். யாருக்கும் தெரியக் கூடாதுங்கறத்துக்காக பேர மாத்தி சொல்றான். அவங்க அப்பா திருவண்ணாமலைல ஒரு ஃபேக்ட்ரி வச்சிருக்கார். அவருக்குத் தெரிஞ்சா மொதல்ல பைக்க புடுங்கிடுவார்."&lt;br /&gt;&lt;br /&gt; "அவன் அப்பா பேரு?"&lt;br /&gt;&lt;br /&gt; "சபாபதி"&lt;br /&gt;&lt;br /&gt; தனக்குள் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே அவர்களை வரும் பவுர்ணமியன்று திருவண்ணாமலை சக்திவேல் சித்தரிடம் போகச் சொன்னார். யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் சொல்லி வைத்தார்.&lt;br /&gt; &lt;br /&gt; அன்று பவுர்ணமி. நிதானமாக போளூர் சாலையில் திருவண்ணாமலை நோக்கி மனோ வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். பின்னால் பதற்றமாக சங்கர் அமர்ந்து வந்தான். இருள் கவிழ்ந்துவிட்டிருந்தது. அவர்கள் அந்த வளைவை நெருங்கினார்கள். சங்கர் கொஞ்சம் ஆவேசமானான்.&lt;br /&gt;&lt;br /&gt; "வண்டியை ஆட்டாம வாடா" என்றான் மனோ.&lt;br /&gt;&lt;br /&gt; முன்னால் ஒரு மாட்டுவண்டி நின்றுகொண்டிருந்தது. சற்று தள்ளி சாலையின் வலதுபுறத்தில் இன்னொரு மாட்டு வண்டியில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு வண்டிக்காரன் மாடுகளுக்கு புல் கொடுத்துக் கொண்டிருந்தான். இந்த சூழலில் சற்றே நிதானித்த மனோவை விரட்டினான் சங்கர். அவர்கள் பாதையில் அவர்களுக்கு முன்னால் வரிசையாக நான்கு வண்டிகள் தேங்கியிருந்ததை அந்த வளைவு மறைத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; "சீக்கிரம் இந்த வளைவைத் தாண்டு மனோஒ..." என்றான் சங்கர் சிலிர்க்கும் குரலில். மனோ முடுக்கியதில் சீறிப் பாய்ந்த வண்டி முதலில் திணறி வளைந்து நெளிந்து அந்த வளைவைக் கடந்து சமநிலைக்கு வருவதற்குமுன் ஒரு சைக்கிள் ஓட்டியை நிலைகுலையச் செய்தது. அவன் அங்கு புல் மேய்ந்துகொண்டிருந்த ஒரு மாட்டின் வயிற்றில் பறந்து முட்டிக் கொண்டான். ஆத்திரத்தில் அவனை அந்த மாடு மிதித்த மிதியில் அவன் அந்த பிராந்தியம் முழுமைக்கும் கேட்குமாறு அலறினான்.&lt;br /&gt; &lt;br /&gt; "அந்த சைக்கிள் காரன் கீழ விழுந்துட்டான் போலருக்கு சங்கர்"&lt;br /&gt;&lt;br /&gt; "ஒம் வேலைய பாத்துகிட்டு நே..ரா போடா"&lt;br /&gt;&lt;br /&gt; மறுநாள் சங்கருக்கு பேய் விலகியிருந்தது. அந்த சைக்கிள் காரனுக்குப் பேய் பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; * * * * * * * * * * * * *&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116103364129208208?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116103364129208208/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116103364129208208' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116103364129208208'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116103364129208208'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/10/blog-post_17.html' title='விடுதலைப் பட்டறை'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116080165521825064</id><published>2006-10-13T21:42:00.000-07:00</published><updated>2006-10-13T22:27:28.636-07:00</updated><title type='text'>சென்னையில் வரலாறு காணாத வன்முறை</title><content type='html'>- - - &lt;br /&gt;&lt;br /&gt;- - - இது போன்ற தேர்தலை நான் சென்னையில் பார்த்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;- - - நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;- - - நடந்தது தேர்தலே அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;- - - தெலுங்கு திரைப்படங்களை மிஞ்சும் காட்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;- - - பீகாரில் நடந்தவைகளாக நாம் கேள்வியுற்ற காட்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;- - - சட்டத்தை எதிப்பவர்கள் நிம்மதியாக அல்வா சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;- - - ஜனநாயகத்தை எதிர்ப்பவர்கள் கெக்கொலி கொட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;- - - மீண்டும் தேர்தல் நடந்தால் திமுக அணி சென்னையில் மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;- - - அது முறையாக தேர்தல் நடந்தால்.&lt;br /&gt;&lt;br /&gt;- - - சென்னையில் நடுநிலையாளர்களிடம் திமுகவின் செல்வாக்கு பெரிதாக சரிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;- - - ***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116080165521825064?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116080165521825064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116080165521825064' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116080165521825064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116080165521825064'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/10/blog-post_14.html' title='சென்னையில் வரலாறு காணாத வன்முறை'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116030931841083641</id><published>2006-10-08T05:05:00.000-07:00</published><updated>2006-10-14T00:39:42.383-07:00</updated><title type='text'>"பா"</title><content type='html'>மரபுக் கவிதை ஆர்வலர்களே,&lt;br /&gt;கவிதை ஆர்வலர்களே!&lt;br /&gt;'பா' என்ற புதிய பதிவை மரபுக் கவிதைகளுக்கென ஆரம்பிதிருக்கிறேன்.&lt;br /&gt;வாருங்கள், உங்கள் கருத்துகளைத் தாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மரபுக் கவிதைகளை விரும்புகிறவர்களை &lt;br /&gt;வற்புறுத்தி அழைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்கள் அனைவரையும் விரும்பி அழைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://oagaippaa.blogspot.com/"&gt;சுட்டி.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116030931841083641?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116030931841083641/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116030931841083641' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116030931841083641'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116030931841083641'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/10/blog-post_116030931841083641.html' title='&quot;பா&quot;'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116029090360159981</id><published>2006-10-07T23:56:00.000-07:00</published><updated>2006-10-08T00:57:03.440-07:00</updated><title type='text'>அப்சலை தூக்குல போடுங்க "டா!"</title><content type='html'>'...தூக்குல போடுங்கடா' என்றொரு &lt;a href="http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116020914804334117.html"&gt;பதிவு&lt;/a&gt; முத்து-தமிழினி எழுதியிருக்கிறார். அங்கு இட்ட பின்னூட்டம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;    இதை என் வலைப்பூவில் ஒரு பதிவாக போட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    அதிர வைக்கும் தலைப்புகள் வைப்பது இப்போது வலையுலகின் போக்கு. அதன்படியும் மற்றபடிக்கு நுனுக்கமாயும் வைக்கப்பட்ட தலைப்பு.  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, விசாரனை முடித்து,  தீர்ப்பளித்து, அதை நடைமுறைப் படுத்தப் போகும் அரசு ஊழியர்களைத்தான் அப்படி டா போட்டு அழைக்கிறார் என்று முதலில் தோன்றினாலும் இங்கே ஒரு இக்கு வைத்திருகிறார். அதாவது 'என்னத்த சொல்றது? எல்லாரும் அவனை தூக்கில் போடுன்னு சொல்லு.. இல்லாட்டி உன்னிய தேசதுரோகின்னு சொல்லுவோம்னு சொன்னீங்கன்னா அவன தூக்கில் போடுங்கன்னு சொல்ற மொத ஆள் நான்தான்....' . முத்துவை தேசத் துரோகி என்று அழைத்துவிடக் கூடாது என்பதற்காக தூக்கில் போடுங்க என்கிறார். இல்லை,  போடுங்க 'டா' என்கிறார். பின்னூட்டங்களில் அவர் மையமாக எழுதிவிட்டதாக பலரும், மேலும் அவருமே பதிவில் ஐயப் பட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கான பதிலைத் தான் அந்த டா வில் சூசகமாகச் சொல்லியிருக்கிறாரோ? தேசத் துரோகி என்று தன்னை யாரும் அழைக்கவில்லை என்றால் தூக்கில் போட வேண்டாம் என்கிற மறை பொருளையும் சொல்லுகிறாரோ என்கிற ஐயத்தை ஒதுக்கிவிட்டு பார்த்தால் அவர் தான் தேசத்துரோகி என்று அழைக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் காட்டியிருக்கும் அக்கறை வியக்க வைக்கிறது. இந்த வியப்பு முத்துவின் முந்தைய பதிவுகளைப் படித்ததனால் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;   ' மரண் தண்டனைக்கான காரணங்களாக சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பதை ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் பிரபு ராஜதுரை எடுத்துக்கூறிய புள்ளிகளை நாம் கணக்கில் எடுக்க வேண்டும். ' என்று குறிப்பிட்டிருக்கிறார். இது ஒரு கனக்கு. எப்படி கணக்கில் எடுக்கவேண்டும் என்றும் முத்து தன் பதிவில் தெளிவாக சொல்லியிருக்கிறார். கூடவே பிரபு ராஜதுரை எழுதிய &lt;a href="http://www.maraththadi.com/article.asp?id=2885"&gt; இதையும் &lt;/a&gt; கணக்கில் எடுக்க வேண்டும். ""ஷரியா" - சரியா?: ஓர் எதிர்வினை " என்கிற கட்டுரையை அவர் மரத்தடி குழுமத்திற்காக எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;    குழலிக்கு பிடிக்கிற மாதிரி எழுதியிருக்கிறார். குழலி முதல் பின்னூட்டத்தில் 'அதே அதே' என்கிறார். அடுத்த பின்னூட்டத்தில் 'அது....'  என்று சொல்கிறார். அகவே குழலியின் பதிவுடன் சேர்த்தே இந்தப் பதிவுக்கும் பொருள் கொள்ளலாம் என்பதும் ஒரு விருப்பத் தேர்வாக(choice) இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;    இந்தப் பதிவின் திரண்ட கருத்து அந்த 'டா' வில் இருக்கிறது என்பதே நான் புரிந்து கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;    'ஆமாண்டா' என்றும் அதற்கு மேலும் பின்னூட்டங்கள் வரக்கூடும். நல்ல விளக்கங்களுடன் கூடிய பின்னூட்டங்களை வரவேற்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116029090360159981?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116029090360159981/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116029090360159981' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116029090360159981'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116029090360159981'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/10/blog-post_08.html' title='அப்சலை தூக்குல போடுங்க &quot;டா!&quot;'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116007720301194049</id><published>2006-10-05T12:38:00.000-07:00</published><updated>2006-10-26T06:53:06.956-07:00</updated><title type='text'>ஒரு ஜெர்மானியர் சொன்னது.</title><content type='html'>ஜெர்மனியில் ஃபிராங்க்ஃபர்ட் நகரில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி பற்றி செய்தி இன்று இந்து பத்திரிக்கையின் கடைசி பக்கத்தில் விரிவாக வந்திருந்தது. அதன் &lt;a href="http://www.hindu.com/2006/10/05/stories/2006100500842200.htm"&gt;சுட்டி.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மனியின் வெளிநாட்டுத்துறை அமைச்சர்,  ஒரு பில்லியன் (நூறு கோடி) மக்களுக்கு மேல் மக்கள்தொகை, 400க்கு மேற்பட்ட வட்டார மொழிகள், 20 தேசிய மொழிகள் இவற்றைக் குறிப்பிட்டதுடன் மற்றொன்றைக் குறிப்பிடுகிறார். ஒரு சீக்கியரை பிரதமராகவும் ஒரு முஸ்லீமை குடியரசு தலைவராகவும் மிகப் பெரிய அரசியல் கட்சி ஒரு கிருஸ்துவ பெண்மணியைத் தலைவராகவும் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருங்கிணைந்த ஐரோப்பாவைக் கட்டுவதற்கு இந்தியாவை முன்னுதாரணமாக வைத்தே வலிமையையும் தெம்பையும் பெறமுடியும் என்றும் கூறியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புத்தகக் கண்காட்சி நமது வலப்பதிவாளர்களின் கவனத்தை ஏன் கவரவில்லை என்று தெரியவில்லை. விவரமான பதிவுகளை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://news.yahoo.com/s/ap/20061003/ap_en_ot/book_fair"&gt;இதையும்&lt;/a&gt; பாருங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116007720301194049?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116007720301194049/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116007720301194049' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116007720301194049'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116007720301194049'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/10/blog-post_06.html' title='ஒரு ஜெர்மானியர் சொன்னது.'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-115990454229202965</id><published>2006-10-03T12:34:00.000-07:00</published><updated>2006-10-04T02:07:32.763-07:00</updated><title type='text'>பதிப்பறியேன் பார்வை</title><content type='html'>'நாடு கட்டிய நாயகன்' புத்தகம் முடக்கப்பட்ட செய்தி வந்தவுடன் வலையுலகில் இவ்விஷயம் பற்றிய பரபரப்பு வெகுவாகக் குறைந்திருக்கிறது. இவ்விஷயத்தில் பதிப்புலகைப் பற்றி அதிகம் அறியாத என் பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;    பதிப்புலகம் பற்றி அதிகம் அறியாவிடினும் சொந்தத்தில் தொழில் செய்பவன் என்கிற முறையிலும் அதே நேரம் எழுத்துலகில் ஏதோ செய்ய முயற்சிப்பவனாகவும் எனது கருத்துக்களை முன் வைக்கிறேன். சில நாட்களுக்கு முன் இதே போன்று அமெரிக்காவில் காவ்யா விஸ்வநாதன் என்ற பெண் செய்த செயல் எனக்கு அதர்ச்சியளிக்கவில்லை. மாறாக அந்தப் பெண் மாட்டிக் கொள்ளும்படியாக அதைச் செய்ததே எனக்கு ஆச்சரியமளித்தது.  வேறொருவரின் எழுத்தை எடுத்து உபயோகிக்கும் எண்ணம் இருப்பவர் அதை எழுதியவரே அறியா வண்ணம் திறமையாக எடுத்து வைத்துவிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;    தென்கச்சி சாமிநாதன் தன்னைப் பற்றி கூறிய ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அவருடைய புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு இராமகிருஷ்ண தபோவனம் வெளியிடும் ஒரு புத்தகத்தில்ருந்து தகவல்களை எடுத்துக் கொள்வாராம். ஒரு முறை அந்தத் தபோவனப் புத்தகத்தின் ஆசிரியர் இவரைக் கூப்பிட்டனுப்பினார். தம் சாயம் வெளுத்துவிட்டது என்று அஞ்சியபடியே அவரைக் காணச் சென்ற தென்கச்சியிடம் அவர்,  'எங்கள் புத்தகத்தில் போடுவதற்கு நீங்கள் வானொலியில் கூறுவது போன்ற தகவல்கள் வேண்டும்,  நீங்கள் எங்கிருந்து தகவல்களை எடுக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?' என்று கேட்டாராம்! புனைவுகள் மட்டுமல்லாமல் தகவல் சார்ந்த படைப்புகளிலும் இவ்வாறு மற்றவர்களின் அறிவும் உழைப்பும் சார்ந்த முயற்சிகளை தனதாக்கிக் கொள்ளும் போக்கும் தன்னுடைய படப்பாற்றலையும் சேர்த்து வேறொன்றுபோலத் தருவதும் சாதாரணமாக நடப்பவை என்று கருதுகிறேன். இவையெல்லாம் திருட்டு எனும் எல்லைக்குள் வருமா என்பது பெரும் சர்ச்சைக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;    ஆனால் தன் விஷயத்தில் நடந்திருப்பதாக திரு குமார் அவர்கள் சொல்வது அப்படிப் பட்டதுதான் என்று உறுதிப் படுத்துவதில் சர்ச்சைக்கு இடமிருப்பதாகத் தெரியவில்லை. தன் எழுத்தைப் புத்தகமாக்க முயன்று வரும் ஒரு வலைப் பதிவருக்கு நான் சற்று அறிந்த வட்டத்தில் இப்படி நிகழ்வது தனிப்பட்ட முறையில் எனக்கு துயரத்தைக் கொடுத்த செய்தி.  அவர் துணிந்து அதை வலையில் பதித்து  தன் மனக்குமுறலைப் பகிர்ந்து கொண்டது மிகவும் பாராட்டக் கூடிய செயல்.  அவர் அந்தப் பதிவில் கையாண்டிருந்த மொழியை சிலர் ஆட்சேபித்தாலும் எனக்கு அவ்வாறெல்லாம் தோன்றவில்லை. மிக நாகரீகமான முறையிலேயே அவர் தன் உணர்வுகளை வெளியிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;    இந்த நிகழ்வில் நான் கவனித்த அம்சங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;    * இது வெளிச்சத்துக்கு வராமல் திரை மறைவில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் தன் படைப்புகளை புத்தகமாகப் போடும் எண்ணத்தை தீவிரமாகக் கொண்ட எழுத்தாளர்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் எச்சரிக்கை கிடைக்காமல் போயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;    * தன் உழைப்பையும் ஆர்வத்தையும் கொட்டி உருவாக்கிய படைப்பை பறிகொடுக்கும்போது ஒரு எழுத்தாளருக்கு ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பை மிக அருகில் பார்க்கும் நிலை நமக்கு ஏற்பட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;    *இனையம், வலையுலகம் என்ற மிகக் குறுகியதும் நெருங்கியதுமான வட்டத்தில் இவ்வாறு நடப்பது இதன் அடுத்தடுத்த வட்டங்களில் மிக எளிதாக நடக்கக் கூடிய சாத்தியக் கூறுகளைப் புலப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;    *மிகுந்த சோதனையான காலகட்டத்தில் இந்த சூழலின் மிகப் பெரிய செயலாகப் புத்தகத்தை முடக்கி தொழில் தர்மத்தைக் காட்டியிருக்கிறார் பத்ரி.&lt;br /&gt;&lt;br /&gt;    *தமிழ் வலையுலகத்திற்கு மிக நெருங்கியவரான பத்ரி இது பற்றிய அறிக்கையோ அல்லது குறைந்தபட்சமாக வருத்தமோ நான் அறிந்தவரையில் தெரிவிக்காதது ஒரு நெருடலாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;    நாம் அறிந்த வலையுலக இருவர் - ஒரு எழுத்தாளர், ஒரு பதிப்பாளர் இருவரும் சிலவற்றை இழந்து கஷ்டத்தில் இருக்கிறார்கள். இதற்கு பொறுப்பானவர்கள் இதை உணரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;    .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-115990454229202965?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/115990454229202965/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=115990454229202965' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115990454229202965'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115990454229202965'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/10/blog-post_04.html' title='பதிப்பறியேன் பார்வை'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-115967260795974786</id><published>2006-09-30T20:12:00.000-07:00</published><updated>2007-01-18T16:17:46.760-08:00</updated><title type='text'>சூக்கும வழி</title><content type='html'>இம்மாத தேன்கூடு போட்டிக்கான என் சிறுகதை.&lt;br /&gt;ஆசாத் அளித்த விடுதலை என்ற தலைப்பில் எனது படைப்பு முதல் படைப்பாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூக்கும வழி&lt;br /&gt;=======&lt;br /&gt;&lt;br /&gt; இத்தனை நாள் தோன்றவில்லை.  இன்று தோன்றிவிட்டது.  இன்று விடுதலை ஆகிவிட வேண்டும்.  எப்படியாவது விடுதலை ஆகிவிட வேண்டும். யோசித்தான். அடைபட்டிருந்த அந்த அறையில் கும்மிருட்டாக இருந்தது. எங்கும் வழியிருப்பதாகத் தெரியவில்லை.  அவனை அந்த அறையில் ஏதோ ஒரு இடத்தில் கட்டிப்போட்டிருந்தார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt; கட்டப்பட்டிருப்பதைப் பற்றி அவன் கவலைப் படவில்லை.  ஆனால் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். இங்கு ஏதோ ஒரு வழி கட்டாயம் இருக்கவேண்டும். எங்கே இருக்கிறது அந்த சூக்கும வழி? அந்த தனிச்சிறையில் ஆன மட்டும் தேடிப்பார்த்தான். கைகளால் துழாவினான். கால்களால் நிரடினான்.  ஊஹ¤ம். ஒரு வழியும் புலப்படவில்லை. என்ன செய்வது? கைகளை பிசைந்து கொண்டான். உடம்பையே பிசைந்து கொண்டால் கூட தேவலாம் போலிருந்தது. செய்தான்.  பளிச்சென்று ஏதோ ஒன்று மூளையில் உறைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt; ஆ! அங்கே இருக்கிறது அந்த சூக்கும வழி!! சே, இவ்வளவு நேரம் இது தோன்றவில்லையே! எப்படி தோன்றியது நமக்கு இந்த வழி? யாருமே சொல்லாமல்! ஆனால் இதையெல்லாம் யோசிக்க நேரமில்லை. உடனடியாகக் காரியத்தில் இறங்க வேண்டும். இறங்கியே ஆக வேண்டும்.  கண்ணுக்குப் புலப்படாத அந்த சூக்கும வழியில் ஆழம் தெரியாமல் காலை விடலாமா? யோசித்தான். அவசரப்படக்கூடாது. முதலில் வழியின் அந்தப்பக்கம் என்ன இருக்கிறது என்று பார்ப்போம். பிறகு முடிவு செய்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; மெதுவாக அந்த வழியில் சென்று எட்டிப்பார்த்தான். சுகமான காற்று வீசியது. சுந்தர ஒளிமயமாக இருந்தது. சுகந்தம் நாசியில் உறைத்தது. சூக்கும ஒலிகள் கேட்டன.  அவன் முடிவு செய்து விட்டான். முயன்று முயன்று வெளியேறி விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!!&lt;br /&gt;&lt;br /&gt; இந்த விடுதலையை கொண்டாட விரும்பினான். பெருங்குரலெடுத்துக் கத்தினான்."குவா!.குவாஆ!"&lt;br /&gt;&lt;br /&gt; * * *      * * *      * * *&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-115967260795974786?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/115967260795974786/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=115967260795974786' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115967260795974786'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115967260795974786'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/10/blog-post.html' title='சூக்கும வழி'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-115963315008125972</id><published>2006-09-30T09:12:00.000-07:00</published><updated>2006-10-02T03:42:11.773-07:00</updated><title type='text'>முத்து-தமிழினியுடன் மூன்று நாட்கள்.</title><content type='html'>முத்து-தமிழினியுடன் மூன்று நாட்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ சென்றவாரம் என் தொழில் தொடர்பான பயணமாக மூன்று நாட்கள் மங்களூரில் இருக்க வேண்டிய வாய்ப்பு வந்தது. பயணத்திட்டம் முடிவானவுடன் முத்துவுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். உடனடியாக பதில் வந்தது. அதிரடியாக யாரையா நீர் என்று கேட்டு. ஆனால் யாராயிருந்தாலும் சந்திக்கத் தயார் இது உறுதி என்று அவருடைய கைபேசி எண்ணுடன் அந்த மின்னஞ்சல் சொன்னது. ஒரு தன்னிலை விளக்கம் அனுப்பி அவரை கண்டுகொள்ள வைத்தபின் கைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு பேசினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ இவருடைய எல்லா பதிவுகளையும் நான் படித்திருந்தாலும் எதற்கும் பின்னூட்டங்கள் இட்டதில்லை. அவருடைய பல கருத்துகளில் நான் மாறுபடுவதாலும் சில கருத்தாக்கங்களில் பலமாக மாறுபடுவதாலும் - எல்லா பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்துவிடுவேன்.  முதன்முதலில் அவர் என்னை சந்திக்க நான் தங்கியிருக்கும் அறைக்கு வந்தவுடன் எல்லா ஆண்களையும் சாய்க்கக் கூடிய அம்பொன்றை வீசினேன். அவர் இளமையாக இருப்பதாகக் கூறினேன். நல்லவேளையாக நான் தன்னெஞ்சறிந்து பொய்யற்கவில்லை. உண்மையில் அப்படித்தான் இருந்தார். அன்றிரவு (22-09-2006) ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டோம். மூன்று நாட்களும் இரவு உணவு ஒன்றாகவே சாப்பிட்டோம்.  மூன்றாம் நாள் மாலை என்னை மங்களூரின் ஒரு கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அன்றிரவு தொடர்வண்டி நிலையம் வந்து என்னை வழியனுப்பி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ எங்கள் பேச்சு வார்த்தைகளில் நான் தொடர்ந்து மாற்றுக் கருத்துகளாக கூறியவுடன் அவர் ஒரு அம்பை வீசினார். திரு சோ அவர்களின் இன்னொரு குரல் என்று என்னைக் கூறினார். எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. இந்த விவரிப்பால் நான் கொஞ்சம் நொந்து போனேன். அதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1. அறிவுப் பகலை உண்டாக்கித் தரும் ஆதவன் எங்கே,&lt;br /&gt;இரவின் இருட்டில் எப்போதோ ஒளிரும் மின்மினி எங்கே?&lt;br /&gt;&lt;br /&gt;2. அவருடைய(சோ) சில கருத்துகளில் முற்றிலும் நேர் எதிரான நிலைப்பாடுகள் கொண்டவனும், அவருடைய பல கருத்துகளில் முற்றிலும் உடன்படாதவனும்,  அவருடைய சில கருத்துக்களில் தனிப்பட்ட ஐயப்பாடுகளைக் கொண்டவனுமான எனக்கு இந்தப் பட்டம் நீதியாகப் படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;3. நான் முத்துவிடம் சொன்ன கருத்துககள் அனைத்தும் என் சிந்தனையில் உதித்ததல்ல என்பதை அந்தப் பட்டம் மறைமுகமாகக் கூறுகிறது. என்னைப் பற்றிய என் சுய பெருமைக்கு இது பெரும் குந்தகமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ மிக நீண்ட தன்னிலை விளக்கமும், இது பற்றி என் உணர்வுகளை வெளிப்படையாக கூறவேண்டிய கட்டாயமும் எனக்கு ஏற்பட்டது. அவரும் இதைத் தன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். பயண முடிவில் நான் பெரியாரின் பல கூறுகளை ஆதரிப்பதாகக் கூறியது என் தன்னிலை விளக்கத்தின் வெற்றியைக் கூறியது. முத்து பேச்சுக்காக இப்படியெல்லாம் கூறமாட்டர் என்கிற என் நம்பிக்கை எனக்கு ஒரு மகிழ்வைத் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ மூன்று நாட்களிலும் சோ, கருணாநிதி, திராவிடக் கருத்தாக்கங்கள்,  பெரியார், இராமதாசு, வலதுசாரி-இடத்சாரி கொள்கைகள் தொடர்பான விதயங்களை படு காரசாரமாகப் பேசிக் கொண்டோம். ஆனால் இருவரின் முகத்திலும் முறுவல் மாறவில்லை - கடைசி வரை.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ ஜாதி, தலித்து, பிராமணீயம், காதல், சமுதாயம், தமிழ், தமிழர் தொடர்பான விதயங்களை சற்று ஏற்ற இறக்க இணக்கங்களுடன் பேசிக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ வலைப் பதிவுகள், பதிவர்கள், தமிழ் வலையுலகின் ஈடு இணையற்ற துர்நட்சத்திரம் போலிடோண்டு ஆகிய விதயங்களை மையமாகப் பேசிக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _  இருவருக்கும் கருத்து வேறுபாடே வரமுடியாத எங்கள் குடும்ப விதயங்களை ஆர்வத்துடன் பரிமாறிக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்த எங்கள் இருவரின் ஒரு அலைவரிசையைப் பற்றிக் கொண்டு நாங்கள் நடத்திய இந்த நீண்ட சந்திப்பு என் நினைவுகளில் நீண்ட நாட்கள் நிற்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-115963315008125972?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/115963315008125972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=115963315008125972' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115963315008125972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115963315008125972'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/09/blog-post_30.html' title='முத்து-தமிழினியுடன் மூன்று நாட்கள்.'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-115929519603042730</id><published>2006-09-26T11:16:00.000-07:00</published><updated>2006-10-06T08:21:14.520-07:00</updated><title type='text'>மங்களூர்.</title><content type='html'>சென்ற வாரத்தில் முதன்முறையாக இந்த ஊருக்குச் சென்றிருந்தேன். தொழில் முறையில் அங்கிருக்கும் NIT ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கிற்கு செல்ல வேண்டியிருந்தது. மூன்று நாட்கள் தங்கி இருந்தாலும் மங்களூரின் சிறு பரிச்சயம் ஏற்படும் அளவிற்கே நேரம் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மங்களூரைப் பற்றி நான் அறிந்திருந்த செய்திகள் அங்கு ஒரு NIT இருப்பதும் குதிரமுக் இரும்புத்தாது தொழிலும் வலைப்பதிவர் முத்து தமிழினியும்தான். அவரைச் சந்தித்த விவரம் தனிப் பதிவில் தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையிலிருந்து நேர் மேற்காக பறவைப் பாதையில் செல்லுங்கள். கீழே தெரியும் பங்களூர் நகரைத்தைத் தாண்டி அரபிக் கடலோரத்தில் இறங்கினால் மங்களூருக்கு மிக அருகில் இருப்பீர்கள். (சென்னை 13.04 வ, பங்களூர் 12.58 வ, மங்களூர் 12.54 வ) அதனால் சென்னையைப் போன்ற தட்பவெப்பம்தான். ஆனால் ஏராளமாக மழை பொழியும் போலிருக்கிறது. பலகட்டடங்களின் கூரைகளும் சுற்றுச் சுவர்களும் பாசி படர்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குக்கரை அரபிக் கடலோர நகரங்களில் நான் திருவனந்தபுரம், ஆலப்புழை, கொச்சி, கள்ளிக்கோட்டை ( காலிகட்), கோவா, மும்பை ஆகிய நகரங்களுக்குச் சென்றிருக்கிறேன். கேரள நகரங்களையும் கோவாவையும்  கூட்டிக் கழித்துப் பார்த்தால் மங்களூர் வருமென்று எதிர்பார்த்திருந்தேன். அது ஓரளவுக்கு சரியாக இருந்தது. எங்கெங்கு காணினும் பசுமையாக இருக்கிறது நகரம். நகரத்துக்குள்ளேயே ஒரு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெரும் பள்ளத்தாக்கு வருகிறது. ஆ! எங்கேயும் காணமுடியாத காட்சி!! பரந்த விரிந்த அந்த பள்ளாத்தாக்கில் சுமார் ஒரு லட்சம் தென்னை மரங்கள் இருந்தன. விரிந்த கண்கள் விரிந்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் நடுவே வெள்ளையர் காலத்தின் ஓர் ஒற்றை பெரிய பங்களாவின் மேற்கூரைகள் தெரிய, சுற்றிலும் கரும்பச்சை தென்னை ஓலைகளாக மனதை கிறங்க அடித்தன. நாசிக்கிலிருந்து எங்கள் கருத்தரங்கிற்கு வந்திருந்த ஒருவர் இதே இடத்தில் மிக வியந்ததை என்னிடம் சொன்னார்.  மேற்குக்கரைக்குறிய ஏற்ற இறக்கத்துடன் சாலைகள் இருக்கின்றன. ஒரு ஆறு ஏராளமான தண்ணீருடன் கடலில் கலக்கிறது. நகரிலிருந்து பத்து கிலோமீட்டர் கடற்கரைக்கு இணையாகவே வடக்கு நோக்கி சென்ற பிறகுதான் ஒரு சிறிய கடல்மணல் பரப்பு வருகிறது. பீச்சாங்கரை. நான் சென்ற தினம் ஞாயிற்றுக் கிழமையாகையால் மக்கள் ஜேஜே என்று இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சாப்பிட்ட உணவகத்தில் நல்ல மீன்கறி கிடைத்தது. ஆனால் சாம்பார் சட்டினி அவ்வளவு சரியாக செய்யத் தெரியாது போலிருக்கிறது. இங்குள்ளவர்களுக்கு ரவாகேசரி மிகவும் பிடிக்கும்போல் தெரிகிறது. அதில் ஏராளமாய் முந்திரி போடுகிறார்கள். முந்திரி விளைச்சல் மிக அதிகம். முந்திரிக்கொட்டை எண்ணையை எரிபொருளாக உபயோகிக்கப்ப்டுவதைப் பற்றி எங்கள் கருத்தரங்கில் பேசப் பட்டது. முந்திரி விளைச்சல் அதிகமாக இருந்தும் முந்திரி விலை குறைவாக இல்லை. பாண்டிச்சேரி மற்றும் பன்ருட்டியைவிட மிக அதிகம். பொதுவாகவே இங்கு விலைவாசிகள் சற்று அதிகமாகத்தான் இருக்கும்போல் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாநகராட்சி அந்தஸ்துள்ள அமைதியான நகரம். போக்குவரத்து மெதுவாக நடக்கிறது. ஆட்டொக்காரர்கள் மீட்டர்படி பணம் வசூலிக்கிறார்கள். ஆங்கிலம், இந்தி, கன்னடம் அல்லது துளு மொழிகளில் ஒன்றைப் பேசி இங்கு சமாளித்துவிடலாம். பாரம்பரிய இசை மற்றும் நாட்டியங்களின் மேல் பற்று வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனித்தன்மையுள்ள நகரம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-115929519603042730?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/115929519603042730/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=115929519603042730' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115929519603042730'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115929519603042730'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/09/blog-post_26.html' title='மங்களூர்.'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-115859966838202093</id><published>2006-09-18T10:05:00.000-07:00</published><updated>2006-09-28T05:18:24.156-07:00</updated><title type='text'>தூக்கல் வாழ்க்கை</title><content type='html'>தேன்கூடு போட்டிக்கான கவிதை.&lt;br /&gt;மரபுக் கவிதை.&lt;br /&gt;நிலைமண்டில ஆசிரியப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கல் வாழ்க்கை&lt;br /&gt;==========&lt;br /&gt;வெளியுலகு வந்ததும்  வனிதையாம் செவிலியர்&lt;br /&gt;களிப்புடன் தூக்கினர் கைப்பிள்ளை நம்மையும்&lt;br /&gt;வாழ்வுநாம் தொடங்க வயிற்றினுள் அதுவரை&lt;br /&gt;ஆழ்வலி பொறுத்துநம் அன்னையும் தூக்கினாள் &lt;br /&gt;மடியில் இடுப்பில் மாசறு பால்தர&lt;br /&gt;வடியும் எச்சில் மைந்தரைத் தூக்கினாள்&lt;br /&gt;நிலவும் குருவியும் பலவும் காட்டி&lt;br /&gt;உலவும் பருவம் வரும்வரை தூக்கினாள்&lt;br /&gt;விந்தை யுலகில்  வித்தைகள் பெற்று&lt;br /&gt;முந்திச் செல்லவே தந்தையும் தூக்கினார்&lt;br /&gt;அக்கையும் தூக்கினாள் அண்ணனும் தூக்கினான்&lt;br /&gt;சுற்றமும் நட்பும் சூழ்ந்து தூக்கினார்&lt;br /&gt;வெறுமையைத் தூக்கிய வெரும்பயல் நமக்கு&lt;br /&gt;அறிவுச் சுடரிட்டு ஆன்றோர் தூக்கினார்&lt;br /&gt;கொஞ்சும் குழவியைக் குமரராய் மாற்றி&lt;br /&gt;விஞ்சும் பருவம் விடலையின் தூக்கினார்&lt;br /&gt;&lt;br /&gt;நாமும் தூக்க நம்மையும் தூக்க&lt;br /&gt;கணவனாய் மனைவியாய் துணைகள் வந்திடும்&lt;br /&gt;எடைபளு தூக்க பளுஎடை தூக்க&lt;br /&gt;கிடைமேல் நிலைநில்லா துலா முள்போல்&lt;br /&gt;ஏறியும் தாழ்ந்தும் வாழ்வும் நடந்திடும்&lt;br /&gt;மாறிடும் நடப்புகள் மாறிடும் தூக்கல்கள்&lt;br /&gt;இணங்கிப் பெற்ற இத்தனை தூக்கலை&lt;br /&gt;கணக்காய் எண்ணிக் கடன்களாய்த் தீர்க்க &lt;br /&gt;தூக்குவோம் தூக்குவோம் பலரைத் தூக்குவோம்&lt;br /&gt;தூக்கலில் தூக்கலில் வாழ்க்கை நடந்திட&lt;br /&gt;மூக்கினில் சுவாச மூச்சது நிற்கும்&lt;br /&gt;நாளது வந்தபின் நால்வர் வருவரே&lt;br /&gt;நம்முடல் தூக்கிநம் நரவாழ்வு முடிக்கவே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-115859966838202093?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/115859966838202093/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=115859966838202093' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115859966838202093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115859966838202093'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/09/blog-post_115859966838202093.html' title='தூக்கல் வாழ்க்கை'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-115854513906869106</id><published>2006-09-17T19:02:00.000-07:00</published><updated>2006-10-03T13:26:45.496-07:00</updated><title type='text'>மொழிபெயர்ப்பு</title><content type='html'>தேன்கூடு போட்டிக்கான கதை.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ அசோகன் அவசரமாக வண்டியை நிறுத்தினான்.  திடீரென பிடித்துக் கொண்ட பெருமழை அவனை தெருவோரம் விரட்டியது. இன்று மழை வருமென அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. எதிர்பார்த்திருந்தால் மழையுடை கொண்டு வந்திருப்பான். இப்படி ஒரு புறநகர்ப் பகுதிக்கு வருவதைக் கூட அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. துனி துவைக்கும் இயந்திரங்கள் பழுதானால் சரி பார்க்கும் சேவைப் பொறியாளன் அவன். அவனுக்கு அழைப்பு எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் வரும். இன்று இன்னொரு நாள். இன்னொரு இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ இரவு மணி எட்டைத் தாண்டிவிட்டது. மழை கணஜோராகப் பெய்து கொண்டிருந்தது. அந்த இடம் ஒரு புறநகர் பகுதியின் விளிம்பு. சாதாரணமாகவே ஆள் நடமாட்டம்  மிகக் குறைவு. இப்போது அடியோடு ஜனசந்தடி இல்லாமல் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மங்கிய ஒளியில் எரிந்து கொண்டிருந்த தெரு விளக்குகள் திடீரென அனணந்தன. இது போன்றதொரு திடீர் மழையைத் தொடர்ந்து இப்படி மின்தடை வருவது வெகு இயல்பான செயலாகப் பட்டது அசோகனுக்கு. தொடர்ந்து கும்மிருட்டு நிலவியது. நள்ளிரவைப் போல். நட்சத்திர நிலவொளிகளைக் கூட கருமேகப் படுதா மறைத்துவிட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ அசோகன் தான் நின்றுகொண்டிருக்கும் சூழலைக் கவனித்தான். கட்டி முடிக்கப் படாத, கட்டுமானம் கைவிடப்பட்ட ஒரு வீட்டின் முகப்பு. பாதி முடிந்த சுற்றுச்சுவரில் ஒரு குப்பைமேடு. லேசான துர்நாற்றத்துடன். சட சடவென்ற மழை சத்தத்துடன் சட்சட்டென்ற சொட்டு ஒலிகளும் சேர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. மெலிதாக ஒரு பூனை கத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ மழை விடுவதாக இல்லை. மின்சாரமும் வருவதாக இல்லை. மழை விட்டாலும் அந்த குண்டும் குழியுமான சாலையில் செல்ல ஏற்கனவே தயங்கியவனுக்கு இப்போது வந்த மழையால் ஏற்பட்ட சேறும் சகதியும் புது பயத்தைக் கொடுத்தது. தண்ணீர் நிரம்பிய குழிகளில் முன் சக்கரம் லொடுக்கென்று விழும்போது வரும் தடுக்கிடும் மனவோட்டம் அவனைப் படுத்தியது. மீண்டும் அந்த பூனைக் குரல் வந்தது. இல்லை! அது பூனை இல்லை!! அசோகனுக்கு மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. சிறிதே இடைவெளிவிட்டு அதேக் குரல் மீண்டும் வந்தபோது அமானுடமாயும் மனிதக் குரலாகவும் ஒரே நேரத்தில் உணர்ந்தான். நல்ல வேளையாக மழை சற்று குறைந்து மின்சாரம் வந்தது. மின் விளக்குகள் ஒளிர ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ அசோகனுக்கு தூரத்து விளக்கொளி சற்று தைரியத்தைத் தந்தது. மூக்கைப் பொத்திக் கொண்டு அந்த குப்பை மேட்டுக்கு அருகில் சென்றான். மொட்டு விழிகளைக் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு ஒரு பச்சிளம் குழந்தை. இன்று பிறந்திருக்கலாம். ஒரு பழைய சேலையில் தளர்வாக சுற்றப்பட்டு தூக்கி எறியப்பட்ட - இல்லை, பாந்தமாக வைக்கப்பட்ட - அந்தக் குழந்தை நேராக இவனைப் பார்த்தது. சற்று முன்பு கத்தியதெல்லாம் நான்தான் என்பதுபோல மீண்டும் அதே ஓசையில் ஒருமுறை கத்திக் காண்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _  அசோகன் உற்றுப் பார்த்தான். அதன் பார்வை அவனுக்கு எதையோ சொல்லியது. ஆனால் புரியவில்லை. ஐயோ யாரேனும் இக்குழந்தையின் பார்வையை மொழிபெயர்ப்பார்களா? அவனுடைய வேண்டுகோள் ஆண்டவனுக்குக் கேட்டுவிட்டது. அவர் மொழிபெயர்த்து அவனுக்க்ச் சொன்னார்,&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ "அரசு அனாதைக் குழந்தைகள் காப்பகத்துக்கு எனக்கொரு பயணம் தருவாயா?"&lt;br /&gt;&lt;br /&gt;***   ***   ***   ***    ***   ***   ***   ***    ***   ***   ***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-115854513906869106?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/115854513906869106/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=115854513906869106' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115854513906869106'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115854513906869106'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/09/blog-post_18.html' title='மொழிபெயர்ப்பு'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-115843537370698377</id><published>2006-09-16T12:22:00.000-07:00</published><updated>2006-10-02T12:04:56.320-07:00</updated><title type='text'>ஒரு தலைப்புச் செய்தி</title><content type='html'>தேன்கூடு போட்டிக்கான சிறுகதை:&lt;br /&gt;===================&lt;br /&gt;&lt;br /&gt;____________ஒரு தலைப்புச் செய்தி&lt;br /&gt;____________===================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _  கிருஷ்ணடு காட்டாங்குளத்தூரில் மோட்டார்சைக்கிளில் புறப்பட்டான். மணி மூன்றாக இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. வண்டலூர் தாண்டியவனுக்கு பொறி தட்டியது. 'இன்று கட்டுக்காவல் பலமாய் இருக்கும் போலிருக்கிறதே!' வண்டலூரில் ஒரு பாய்ந்தோடிய சரக்குந்து வண்டியைக் கவசமாகக் கொண்டு அங்கிருந்த காவல் சாவடியைக் கடந்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ 'இந்த செய்முறை விளக்கப் புத்தகங்களும், வரைபடங்களும் காலையில் ஓங்கோல் போய் சேர்ந்துவிட்டால்  அவர்கள் நாளை நடத்தவிருக்கும் செயலுக்குப் பெரும் உதவியாய் இருக்கும். சுப்பக்கா எப்படியும் அந்த எட்டுமாத கர்ப்பினிப் பெண்ணை செண்ட்ரல் தொடர்வண்டி நிலையத்துக்கு ஐந்து மணிக்குக் கூட்டி வந்துவிடுவாள். சார்மினார் விரைவு வண்டியில் இந்தப் பெட்டியுடன் அவளைப் பெண்கள் பெட்டியில் ஏற்றி விட்டுவிட்டால் தீர்ந்தது வேலை. ஆனால் காவல்துறை பலமாக முடுக்கிவிடப் பட்டிருக்கிறதே! எல்லாம் போன வாரம் நிகழ்ந்தவற்றால் வந்த வினை. இல்லாவிட்டால் சென்னையில் நடப்பதை யார் கண்டுகொள்ளப் போகிறார்கள்?' என்று எண்ணியவாறே வண்டி போய்க் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ எப்படியும் தாம்பரத்தில் பிரச்சனை இருக்கும். வேளச்சேரி சாலையில் திரும்பி விட்டால் சைதாப்பேட்டை வரை கவலை இல்லை, பிறகு அந்த போக்குவரத்து நெரிசலில் நீந்தி செண்ட்ரல் போய் சேர்ந்து விடலாம் என்று எண்ணினான்.  அப்போது கைபேசி ஒலித்தது. காதில் பொருத்தியிருந்த கைபேசி ஒலிபெருக்கி சொன்னது,&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ "வேளச்சேரி, திருநீர்மலை, பம்மல் ரோடுல யெல்லாம் நெறைய பள்ளம் இருக்குன்னு சொல்றாங்க. நேராவே போயிடு." (பள்ளம் = காவல்)&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ தொலைபேசியில் சொன்னபடி நேராகவே சென்றான். சரக்குந்தும் பேருந்தும் கேடயமாக அமைய சாலை நடுவனுக்கு அருகிலேயே சென்று கொண்டிருந்தான். ஆனாலும் தாம்பரத்தில் சற்று தடுமாறிவிட்டான். 'சே! இன்று நமக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது.' அப்போது கவனித்தான். பெண்கள் மற்றும் முதியவர்களுடன் செல்லும் இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ 'நம்முடனும் யாரவது உடன் வந்தால் நன்றாக இருக்குமே! வலியச் சென்று எப்படி நாமே லிப்ட் தருவதாகச் சொல்வது'. இவ்வாறு யோசித்தவன் சாலையோர பேருந்து நிறுத்தங்களில் பார்வையை ஓட்டியவாறே குரோம்பேட்டை பல்லாவரத்தைக் கடந்துவிட்டான். விமான நிலையத்தைக் கடக்கவேண்டும். வண்டியை மெதுவாக ஓட்டினான். இரண்டு சரக்குந்தும் ஒரு பேருந்தும் சாலையில் ஆயுத எழுத்தப் போல முக்கூட்டாகச் செல்ல, அவற்றின் மத்தியில் தன் வண்டியைச் செலுத்தி பாதுகாப்பாக ஓட்டிச் சென்றான். விமான நிலைய சிக்னலில் பச்சை விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்க, அந்த நான்கு வண்டி ஊர்வலம் தடையில்லாமல் கடந்து சென்றது. ஆனால் கடந்தபிறகு பீறிட்டு வந்தது பிகில் சத்தம். இரண்டு அல்லது மூன்று பிகில் சத்தங்கள் சேர்ந்து வந்தன. பிகில் ஏற்படுத்திய திகில் கிருஷ்ணடுவின் இரத்தத்தை உறைய வைத்தது. அவற்றைப் பொருட்படுத்தாமல் இயல்பாக வேகமெடுப்பதைப் போல் வேகமெடுத்து மற்ற உந்துகளை முந்திச் சென்றான். வண்டியை விரட்டி மீனம்பாக்கத்தில் ஒரு பொதுத் தொலைபேசி கூண்டுக்கு அருகில் நிறுத்தினான். தொலைபேசியில் யாரையோ அழைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ "பஸ்ஸில் போயிடறேன்."&lt;br /&gt;_ _ _ _ _ "எல்லா பஸ் ஸ்டாப்பிலேயும் பள்ளம்."&lt;br /&gt;_ _ _ _ _ "ஒரு லிப்ட் வேணும்."&lt;br /&gt;_ _ _ _ _ "ரொம்பத் தப்பு".&lt;br /&gt;_ _ _ _ _ "நான் போறத்துக்கு இல்லை. என்னோட வர்ரதுக்கு."&lt;br /&gt;_ _ _ _ _ "யார் வேணும்?"&lt;br /&gt;_ _ _ _ _ "ஒரு பொம்பளை இல்லாட்டி ஒரு கிழவி அல்லது கிழவன் இப்படி யாராவது."&lt;br /&gt;_ _ _ _ _ "நந்தனம் வரைக்கும் போயிடு. நந்தனம் பஸ் ஸ்டாப்பில ஒரு கிழவன் லிப்ட் கேப்பான்."&lt;br /&gt;_ _ _ _ _ "கோடு"&lt;br /&gt;_ _ _ _ _ "சார்மினாருக்குப் போகனும்"&lt;br /&gt;_ _ _ _ _ "நான்"&lt;br /&gt;_ _ _ _ _ "சுப்பக்கா வந்தாச்சா ன்னு சொல்லு. இன்னிக்கி பள்ளம் ஜாஸ்தி. பாத்துப் போ."&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ கொஞ்சம் நிம்மதியான கிருஷ்ணடு சரக்குந்து மற்றும் பேருந்து கவசங்களின் ஊடே தன் பயணத்தை நிதானமாகத் தொடர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;***   ***   ***   ***&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ மூன்றரை மணிக்கு நந்தனம் அரசப்பரில் ஆட்டுக்கறி பிரியானியை ஒரு வெட்டு வெட்டிவிட்டு வெளியே வந்தான் முகுந்தன். வெண்சுருட்டு பிடிப்பதற்குத் தடையாக சுற்றுமுற்றும் யாராவது காவலர்கள் இருக்கின்றனரா என்று பார்த்தான். இப்படி பராக்காகப் பார்த்துக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டு விலகுமாறு அவனை உரசியபடி ஒரு சீருந்து (கார்) வந்து நின்றது. இவ்வளவு விலை உயர்ந்த சீருந்தை இப்படி காட்டுத்தனமாக ஓட்டும் அந்தத் துரவரைப் (ட்ரைவர்) பார்க்க எத்தனித்தான் முகுந்தன். அதற்குள் சீருந்து சீறுந்தாக மாறி நந்தனம் சிக்னலை நோக்கி சீறிப் பறந்தது. முகுந்தன் தனக்குத் தெரிந்த பெரிய வசவுகளை மனத்துக்குள் கரித்துக் கொண்டு பவ்வியமாக ஒரு வெண்சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு நந்தனம் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தான். அவனுக்கு முன்னால் அந்தப் பெரியவர் போய் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;***   ***   ***   ***&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ காவல் கட்டுப்பாட்டு அறையில் அலாரம் அலறியது. சார்மினார் என்ற சொல் ஒரு பொதுத் தொலைபேசியில் பேசப்பட்டு, பதிவாகி அலாரத்தை இயக்கியது. அந்த உரையாடலின் அந்நியத் தன்மை உடனடியாக நான்கு காவலர்களை மீனம்பாக்கத்துக்கு விரட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;***   ***   ***   ***&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ ஆழ்வார்பேட்டைப் போகவேண்டி தனக்கு வரவேண்டிய 45A  எண்ணுள்ள பேருந்து வராததால் வெறுப்புற்ற முகுந்தன் இன்னொரு வெண்சுருட்டை யோசித்தான். அந்த முதியவரும் தன்னுடைய பேருந்துக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது என்று எண்ணினான். அந்த வழியில் வரும் மற்றெல்லா வண்டிகளும் வந்து போய்விட்டன. அவ்வழியே மெதுவாக வந்த ஒரு மோட்டர்சைக்கிளை நிறுத்தினார் அந்த முதியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ "கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?"&lt;br /&gt;_ _ _ _ _ "எங்கே"&lt;br /&gt;_ _ _ _ _ "சார்மினார் போகனும்."&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ இதைக் கேட்ட மோட்டார்சைக்கிள்காரன் சற்று பேந்த விழித்துவிட்டு போய்விட்டான். வித்தியாசமாக உணர்ந்த முகுந்தன் சற்று அப்பால் சென்று கைபேசியில் தன் காவலர் நண்பனை அழைத்து நிகழ்ந்ததை விவரித்தான். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த காவல்துறை ஜீப் முதியவரை அள்ளிச் சென்றது. சற்று நேரத்தில் மிடுக்கான முதியவர் ஒருவர் அங்கு வந்தார். அவ்வழியே மெதுவாக வந்த ஒரு மோட்டர்சைக்கிளை நிறுத்தினார் அந்த முதியவர்.&lt;br /&gt; &lt;br /&gt;_ _ _ _ _ "கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?"&lt;br /&gt;_ _ _ _ _ "எங்கே"&lt;br /&gt;_ _ _ _ _ "சார்மினார் போகனும்."&lt;br /&gt;_ _ _ _ _ "சுப்பக்கா வந்தாச்சா?"&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _  அவன் ஏற்றிக் கொண்டான். அவர் ஏறிக் கொண்டார். தேனாம்பேட்டை சிக்னல் தாண்டியவுடன் ஒரு சிறு காவல்படை அவர்களை வளைத்தது. கோழி அமுக்காக இருவரையும் அமுக்கியது. முதியவர் காவலர்களுடன் சேர்ந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;***   ***   ***   ***&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _  முகுந்தனின் கைபேசி அழைத்துச் சொன்னது, "முகுந்தா ரிவாடு நிச்சயம்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***   ***   ***   ***&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _  மறுநாள் காலை தலைப்புச் செய்தி:&lt;br /&gt;_ _ _ _ _  "முக்கிய ஆவணங்களுடன் நக்சல் தீவிரவாதி பிடிபட்டான்."&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _  கிருஷ்ணடு முட்டி வலியில் புலம்பிக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _  'சரியான லிப்ட் கிடத்திருந்தால் நாளைக் காலை தலைப்புச் செய்தி வேறொன்றாக இருந்திருக்கும்.'&lt;br /&gt;&lt;br /&gt;******      ******      ******      ******&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-115843537370698377?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/115843537370698377/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=115843537370698377' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115843537370698377'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115843537370698377'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/09/blog-post_17.html' title='ஒரு தலைப்புச் செய்தி'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-115759457179946026</id><published>2006-09-06T19:01:00.000-07:00</published><updated>2006-09-22T17:29:17.013-07:00</updated><title type='text'>இதுவேறுலகம்</title><content type='html'>தேன்கூடு போட்டிக்கான கதை.&lt;br /&gt;&lt;br /&gt;__________________________ இதுவேறுலகம்&lt;br /&gt;====================================&lt;br /&gt;&lt;br /&gt;_____ செல்வம் சந்தோஷத்தில் குளிர்ந்து போயிருந்தான். அவன் மனைவி ருக்கு அந்த செராக்ஸ் மற்றும் பொதுத்தொலைபேசி மற்றும் குளிர்பானக் கடையில் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தாள். செல்வத்தின் சந்தோஷத்துக்கு காரணம் சற்று முன் வந்த தொலைபேசி அழைப்பு. அவன் நண்பன் மணிக்கு திருமணம் முடிவாகியிருந்தது.  மணியை உடனே சந்திக்க வேண்டும் போலிருந்தது.  ஆனால் இவனைப்பார்க்க அவனே காரில் வந்து விடுவான். அவனைச் சந்தித்த முதல் நாளும் அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்திய வார்த்தைகளும் அவனுக்குள் நிழலாடின.&lt;br /&gt;&lt;br /&gt;_____ மைலாப்பூரில் ஒரு பொதுத்தொலைபேசி கூண்டில் தான் செல்வத்தின் வாழ்க்கை நிகழ்ந்து கொண்டிருந்தது.  அவனும் அவன் மனைவி ருக்குவும் காலை முதல் மாலை வரை அந்த கூண்டில் தான் வாசம் செய்தார்கள்.  அப்புறம் அவர்கள் வீடு என்கிற இன்னொரு கூண்டு. திருச்சியில் அவன் படித்த விழியிழந்தோர் பள்ளியில் ஒரு விழா. இவனை அழைத்திருந்தார்கள். இவனுக்கு அங்கு சென்றுவர அடக்கமாட்டாத ஆசை. ருக்கு வந்து தொடர்வண்டியில் ஏற்றிவிட திருச்சியில் அவன் அக்கா வந்து அழைத்துச் சென்றாள். விழா முடிந்ததும் அவளே மீண்டும் வண்டி ஏற்றிவிட்டாள்.  பாவம் அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து இட்டிலி சுட்டு பொட்டலம் கட்டிக் கொடுத்து பல்லவனில் ஆறரை மணிக்கு ஏற்றிவிட்டாள். வண்டி அன்றைக்குக் கொஞ்சம் தாமதமாய் பண்ணிரண்டே காலுக்கு எழும்பூர் வந்தது.  யாரோ வழிகாட்ட ருக்கு சொன்ன இருக்கையில் வந்து அமர்ந்தான். ருக்கு வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;_____ செல்வம் அங்கு நிலவிய ஆரவாரங்களை அமைதியாகக் கவனித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். மணி ஒன்றுக்கு மேலாகியிருக்கும், இன்னும் ருக்கு வரவில்லை. தொலைபேசியில் தன் கூண்டை அழைத்துப் பார்க்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவனருகே பேச்சுக் குரல் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;_____ "மணி, கொஞ்சநேரம் அவர் பக்கத்துல உட்கார்ந்துக்கோ, கூட்டம் எவ்வளவு இருக்குன்னு பாத்துட்டு வந்திடுறேன்".&lt;br /&gt;&lt;br /&gt;_____ "சரி, சீக்கிரம் வாங்கப்பா".&lt;br /&gt;&lt;br /&gt;_____ செல்வத்தின் தொடை மேல் உரசிக்கொண்டு அவன் அமர்ந்தான். பொதுவாக செல்வத்தின் அருகே யாரும் அமர்வதில்லை. செல்வத்துக்கு யாரோ தன்னருகில் நெருக்கமாக அமர்வது ஆச்சர்யமாக இருந்தது. வந்து அமர்ந்தவன் இப்போது சற்று தள்ளி உட்கார்ந்து கொண்டான். அமைதியாக சில நிமிடங்கள் கழிந்தன. அவனிடமிருந்து ஒரு சுகந்தம் மிதந்து வந்தது. ஏதோ வாசனை திரவியம் போட்டிருக்கவேண்டும். அவன் ஆடையிலிருந்து கூட ஏதோ ஒரு நல்ல துணி சோப்பின் மணம் வந்தது. வழக்கமாக ஆண்களின்மேல் வரும் வியர்வைவாடை வரவில்லை. ஆண்வியர்வை வாடைக்கும் பெண் வியர்வை வாடைக்கும் அவனுக்கு வேறுபாடு தெரியும். இதை வைத்தே பலவற்றை அவன் கண்டு பிடிப்பான். இப்போதுதான் குளித்துவிட்டு வந்தானா? இருக்க முடியாது. குளித்தவுடன் வரும் குளியல் சோப்பின் மணம் வரவில்லை. ருக்குவிடம் தினமும் அவன் அனுபவிப்பான். ருக்கு நினைவு வந்தது. ஏன் அவள் இன்னும் வரவில்லை. தொலைபேசியில் அழைக்க இவன் உதவுவானா? அப்போதுதான் அவனுக்கு உறைத்தது. இல்லை.  இவனால் உதவ முடியாது. வேறு யாரையாவது கேட்க வேண்டும்.  நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. பசிவேறு வயிற்றைக்கிள்ளியது. ஒரு தின்பண்ட வாசனை வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;_____ "கொஞ்சம் சாப்பிட்றீங்களா?" செல்வத்தின் கையைப் பிடித்து வந்தவன் கேட்டான். அந்த பொட்டலத்திலிருந்து ஒன்றை எடுத்து வாயில் போட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;_____ "லேய்ஸ் சிப்ஸ் ரொம்ப நல்லாயிருக்கும்". என்றான் செல்வம்&lt;br /&gt;&lt;br /&gt;_____ செல்வத்துக்கு  அதன் விலையைத்தவிர லேய்ஸ் சிப்ஸ் ரொம்ப பிடிக்கும். அதன் பொட்டலக் காகிதம் போடும் அந்த கரகரவென்ற ஒலி அவனுக்கு ஒரு குழந்தை உள்ளத்தைக் கொடுத்துவிடும். தடவியபடி அந்த பையோடு வாங்கிக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;_____ "அவர் உங்க அப்பாவா?"&lt;br /&gt;&lt;br /&gt;_____ "ம்"&lt;br /&gt;&lt;br /&gt;_____ "எனக்கு ஒரு உதவி வேணும். என்னை கூப்ட்டு போக என் வீட்டுக்காரி வரவேண்டும், வரவில்லை. ஒரு போன் செய்ய பூத் எங்கிருக்குன்னு சொல்லணும்".&lt;br /&gt;&lt;br /&gt;_____ "எங்கிட்ட செல்போன் இருக்கு. நம்பர் சொல்லுங்க" ஆச்சர்யத்துடன் அவன் தன் கூண்டு எண்ணைச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;_____ "பெல் அடிச்சிட்டே இருக்கு யாரும் எடுக்கல" ருக்கு கூண்டைப் பூட்டிவிட்டு இங்கு வந்து கொண்டிருப்பாளோ?&lt;br /&gt;&lt;br /&gt;_____ "பக்கத்து கடை நம்பர் சொல்றேன்...." பக்கத்து கடையில் பேசிய போதுதான் அவனுக்கு சேதி தெரிந்தது. ருக்குவின் அம்மாவுக்கு ரொம்பவும் உடம்பு முடியாமல்ப் போக அவள் இன்று காலை மரக்காணம் போவிட்டாள். இவனை ஆட்டோவில் வரச்சொல்லிவிட்டு போயிருக்கிறாள். ஆட்டோவுக்கு பணமும் கொடுத்துவிட்டு போயிருக்கிறாள். அவனுக்கு அலுப்பாக இருந்தது. 'யாரவது மைலப்பூரில் கொண்டுவிட்டால் தேவலை' என்று நினைத்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;_____ சற்று நேரம் சென்று அவனுடைய அப்பா வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;_____"மணி ரொம்ப கூட்டமா இருக்கு, அரைமணிக்கு மேல ஆகும் போலிருக்கு, என்ன செய்யலாம்?"&lt;br /&gt;&lt;br /&gt;_____ மணி செல்வத்தின் கையைப் பிடித்துக் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;_____ "சார், கொஞ்ச நேரம் நீங்க இருப்பீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;_____ செல்வத்துக்கு அந்த சூழல் பிடித்திருந்தது. இவர்கள் கொண்டுவிட்டாலும் விடுவார்கள் என்று நினைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;_____  "சரி இருக்கேன்".&lt;br /&gt;&lt;br /&gt;_____ "அப்பா நீங்க போய் பார்சலையெல்லாம் வெளியே எடுக்க ஏற்பாடு பண்ணிட்டே வாங்க.  நான் இவரோட இருக்கேன். அப்பா இவரு ஏதும் சாப்பிடல போலருக்கு".&lt;br /&gt;&lt;br /&gt;_____ "சரி மணி" என்று சொல்லிவிட்டு போனவர் ஒரு உணவுப் பொட்டலத்துடன் வந்தார். செல்வம் மகிழ்ந்து போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;_____ செல்வத்துக்கு உதவிகளை தயங்காமல் ஏற்றுக் கொள்வதும், அவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்வதும், உதாசீனங்களை உதாசீனப்படுத்துவதுமான ஒரு குணம் இருந்தது. அது அவனை மகிழ்ச்சியாக எப்போதும் வைத்திருந்தது. அவன் வாழ்வில் மகிழாத கணங்கள் குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;_____ "நீங்க கொஞ்சம் பணக்காரவுங்க போலிருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;_____ "கொஞ்சம் இல்ல, ரொம்ப"&lt;br /&gt;&lt;br /&gt;_____ "நல்லதுங்க, எம்பேர் செல்வம்".&lt;br /&gt;&lt;br /&gt;_____ "நான் மணி, என்ன தொழில் செய்றீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;_____ "பிசிவோ வச்சிருக்கேன்."&lt;br /&gt;&lt;br /&gt;_____ "வருமானம் பரவாயில்லிங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;_____ "எங்கங்க வருமானம். முன்னெ மாறி இல்லீங்க. இப்ப பாருங்க நீங்க செல்போன் வெச்சிருக்கீங்க. உக்காந்த இடத்திலேர்ந்து போன் பண்ணிடுறீங்க. பூத்துக்கு ரொம்பப் பேரு வர்ரதில்லீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;_____ "உங்களுக்கு குழந்தைங்க இருக்கா?"&lt;br /&gt; &lt;br /&gt;_____ "இன்னும் இல்லீங்க"&lt;br /&gt;&lt;br /&gt;_____ "உங்க வீட்டுக்காரங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;_____ "அவதான் எனக்கு எல்லாம். துணி போட்டு உடறதிலேர்ந்து, பூத்துக்கு கூட்டி வர்றது வரை. இன்னிக்கு அவ அம்மாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்லேன்னு மரக்காணம் போயிட்டா.  பாருங்க ஆட்டோக்கு பக்கத்துக் கடையில் காசெல்லாம் குடுத்துட்டு போயிருக்கா. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"&lt;br /&gt;&lt;br /&gt;_____ "இல்ல செல்வம்"&lt;br /&gt;&lt;br /&gt;_____ "வயசு"&lt;br /&gt;&lt;br /&gt;_____ "இருபத்தெட்டாகுது. ஆனா வர்ர இடமெல்லாம் அப்பா அம்மாவுக்கு பிடிக்கல". அவன் குரலில் அவன் உணர்வு கலந்திருந்தது. செல்வம் புரிந்து கொண்டான். செல்வத்துக்கும் இருபத்தெட்டு வயதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;_____ "உங்களுக்கு எந்த ஏரியா?"&lt;br /&gt;&lt;br /&gt;_____ "பூந்தமல்லிக்கப்புறம் ஒரு சின்ன ஊர்".&lt;br /&gt;&lt;br /&gt;_____ அவனுக்கு சப்பென்றாகிவிட்டது. சென்னைக்குள் என்றால் அவர்களையே மைலாப்பூரில் தன் கூண்டுக்கருகே இறக்கி விடச் சொல்லலாமென்று எண்ணியிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;_____ "என்ன செல்வம் அமைதியாயிட்டீங்க? உங்க மனைவிகிட்ட பேசனுமா, ஏதாவது நம்பர் இருக்கா?"&lt;br /&gt;&lt;br /&gt;_____ "ஆமாம் நீங்க எப்படி நம்பர்லாம் போடுறீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;_____ "ஒரு பழக்கந்தான்".&lt;br /&gt;&lt;br /&gt;_____ செல்வம் மரக்காணத்தில் ஒரு வீட்டின் எண்ணைச் சொன்னான். ருக்கு வந்து பேசினாள். நாளைக்கு வருவதாகச் சொன்னாள். உணவுக்கு வீட்டில் ஏற்பாடு செய்து விட்டதைச் சொன்னாள். உதவிக்கு பக்கத்துவீட்டு பையனிடம் சொல்லியிருப்பதாகச் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;_____ "மணி, இன்னிக்கு எனக்கு வேலை இல்லை. நீங்க புறப்படறப்ப நானும் கிளம்பறேன்" அப்போது கேட்கலாமா என்று நினைத்தான். மணியின் அப்பா வந்து இவர்கள் பக்கத்தில் அமர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;_____ "இன்னும் பத்தே நிமிஷம், உன் பியானோவை வெளியே கொண்டுவந்துடுவேன் மணி. அந்தப் பக்கம் வேன் தயாரா இருக்கு. ஏத்திவிட்டு நாம் கார்ல போயிடலாம்".&lt;br /&gt;&lt;br /&gt;_____ இதைகேட்டதும் செல்வத்துக்கு நப்பாசை வந்தது. அவன் காரில் வெகு அபூர்வமாகவே போயிருக்கிறான். கேட்கத் துணிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;_____ "மணி ஒரு சின்ன ஹெல்ப்"&lt;br /&gt;&lt;br /&gt;_____ "சொல்லுங்க செல்வம், வேற யார் கூடயாவது பேசனுமா?" செல்வத்துக்கு இப்போது தயக்கமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;_____ "அப்புறம் சொல்றேன். சார் உங்க பையனுக்கு எப்ப கல்யாணம்?"&lt;br /&gt;&lt;br /&gt;_____ "அவனுக்கு பொருத்தமா ஒரு பொண்ணு வரலியே தம்பி. வந்தவுடன் கல்யாணந்தான்".&lt;br /&gt;&lt;br /&gt;_____ "என் ருக்கு மாதிரி ஒரு பொண்ணைக் கண்டு பிடிங்க" என்றான். மணியின் அப்பா அசவுகரியமாக உணர்ந்தார். யாரோ ஒருவன் தன் வீட்டுத் திருமணத்தைப் பற்றி பேசுவது அவருக்குப் பிடிக்கவில்லை. அவரே தன் ஒரே மகனின் திருமணம் இவ்வளவு நாள் தள்ளுவதைப் பற்றி கவலையோடிருந்தார். அவரின் அசவுரியத்துக்கு ஏதோ வாசனை இருந்திருக்க வேண்டும். இடைப்பட்ட மவுனத்தில் அதை உணர்ந்த செலவம் உடனே சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;_____ "சார் கோச்சிக்காதீங்க, சும்மா யதார்த்தமாதான் சொன்னேன்". கொஞ்சம் தணிந்தவர் அமைதியாக இருந்தார். அவர்களது கொஞ்சநேர சல்லாபத்தில் விளைந்த நெருக்கம் அவருக்கு வியப்பாக இருந்தது. பொதுவாக மணி யாருடனும் அதிகமாக பேசுவதில்லை. அந்நியர்களுடன் சுலபத்தில் கலந்துவிடாத மணியின் சுபாவம் செலவத்திடம் வேறுபட்டிருப்பதை கவனித்தார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அவர் செல்வத்திடம் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;_____ "தம்பி நீ நெனைக்கறத சொல்லுப்பா. அவனுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்கணும்".&lt;br /&gt;&lt;br /&gt;_____ "சார், நேத்து எங்க ஸ்கூல் ஆண்டு விழாவில ஒரு கவிதை சொன்னாங்க.... படிக்கட்டுமா" &lt;br /&gt;&lt;br /&gt;_____ "படிங்க செல்வம்" என்றான் மணி.&lt;br /&gt;&lt;br /&gt;_____ செல்வம் தன் பையிலிருந்து ஒரு பிரைலி தாளை உருவிப் படித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;_ _ _ _ _ _ நாசியும்என் இருசெவியும் மெய்யுமே&lt;br /&gt;_ _ _ _ _ _ ___   நயனங்கள் என்றான யாக்கையில் &lt;br /&gt;_ _ _ _ _ _ வாசனைகள் சுரங்களொடு சொற்களே&lt;br /&gt;_ _ _ _ _ _ ___   வண்ணங்கள்  என்றான வாழ்க்கையில் &lt;br /&gt;_ _ _ _ _ _ யோசனையில் எவ்வுருவும் யாண்டுமே &lt;br /&gt;_ _ _ _ _ _ ___  உருவாகா சிந்தைக்குள் வெளிச்சமாய்!&lt;br /&gt;_ _ _ _ _ _ ஆசிகளை மெய்பிக்க வந்தனள்&lt;br /&gt;_ _ _ _ _ _ ___   அக்கிழத்தி ஒளிக்கற்றை வடிவமாய்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நாசி-மூக்கு, நயனங்கள்-கண்கள், யாக்கை-உடம்பு, யாண்டும்-எப்பொழுதும், அகக்கிழத்தி-மனைவி)&lt;br /&gt;&lt;br /&gt;_____ கவிதையைத் தொடர்ந்த மவுனத்தைக் கலைத்து செல்வம் மேலும் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;_____ " சார், ருக்கு இல்லாத நேரங்கள்ள கூட எனக்கு அவளப் பத்திதான் சிந்தனை. எனக்கு ருக்கு வரலன்னா யாரு வந்திருப்பா? ருக்குதான் வந்திருப்பா. ருக்குவத் தவிர யார் வர முடியும்? யார் வந்திருந்தாலும் அவதான் ருக்கு. எப்படி யோசிச்சாலும் எனக்கு இப்படிதான் சிந்தனை வருது. அந்த கவிதயக் கேட்டப்ப கூட  அது ருக்குவுக்காக எழுதுன மாறிதான் எனக்கு தோனிச்சு."&lt;br /&gt;&lt;br /&gt;_____ மீண்டும் மவுனம் நிரப்பிய அந்த நுன்னிய இடைவெளிக்குப் பிறகு அவனே தொடர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;_____ "சார், மணிய யாருக்கு புடிக்குதோ அந்தப் பொண்ணப் பாத்து முடிச்சிடுங்க."&lt;br /&gt;&lt;br /&gt;_____ இந்த வார்த்தைகள் மணியின் அப்பாவை சென்று அடைந்தது. மணி செல்வத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டான். மணியின் உலகம் சற்று வேறானது என்பதை உணர்ந்திருந்தாலும், அவ்வுலகின் ஒரு புதிய பரிமாணம் புலப்படுவதுபோல் தோன்றியது. அந்தப் பெரியவர் தன் விழிக்கடை நீர் துடைத்ததை இருவரும் அறியவில்லை. ஏதோ பல சம்பவங்கள் நடந்திருக்க வேண்டும் போலிருக்கிறது. மணியை யாருக்குப் பிடிக்கிறதோ அவளைத் தேடுவது அவருக்கு இடப்பட்ட உடனடி வேலையாக உணர்ந்தார். அவர் தன் அலுவலைப் பார்க்கச் சென்ற போது செல்வம் தயக்கத்தை விட்டுவிட்டு கேட்டேவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;_____ "மணி என்னை மைலாப்பூரில் என் பூத்தில் இறக்கிவிட முடியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;_____ மணி செல்வத்தை அணைத்துக் கொண்டான். அந்த அரவணைப்பை இன்று வரை நீக்கவில்லை. மைலாப்பூரில் இறக்கிவிட்டு வாழ்க்கையிலே ஏற்றிவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;_____ மணியின் கார் செல்வத்தின் கடை வாசலில் நின்று செல்வத்தின் சிந்தனையைக் கலைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;*****     *****     *****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-115759457179946026?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/115759457179946026/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=115759457179946026' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115759457179946026'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115759457179946026'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/09/blog-post_07.html' title='இதுவேறுலகம்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-115727422194243100</id><published>2006-09-03T01:59:00.000-07:00</published><updated>2006-09-04T02:54:51.226-07:00</updated><title type='text'>கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?</title><content type='html'>கொஞ்சம் அங்கே இறக்கி விட்டுவிடுகிறீர்களா?&lt;br /&gt;கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;___   ஆங்கில சொற்கலப்பு அத்தியாவசியமாகிவிட்ட இந்நாட்களில் இது போன்ற தலைப்புகள் வருவது சிலருக்கே நெருடலாக இருக்கும். இம்மாத தேன்கூடு போட்டிக்கான தலைப்பு நான் யோசித்த அளவில் மொழிமாற்றம் செய்ய இயலாததாய் இருக்கிறது. பினாத்தல் சுரேஷ் வைத்த ஆங்கிலத் தலைப்பு அழகாக 'விடலைப் பருவம் விடைபெறும் தருணம்' என்று மொழிமாற்றம் பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;___   பேச்சுத் தமிழிலேயே ஆங்கிலச் சொற்கள் கலந்து பேசுவது தவறானது என்றாலும் பல பயன்பாடுகள் தவிர்க்க முடியாததாய்ப் போய்விடுகிறது. ஆனால் எழுத்து என்று வரும்போது கட்டுப்படுகளை நாம் விதித்துக் கொள்ளவேண்டும். நான் தனித் தமிழை வலியுறுத்தவில்லை. ஆனால் தவிர்க்க முடியாத சில இடங்களைத் தவிர்த்து மற்றெல்லா இடங்களிலும் தமிழையே பயன் படுத்துதல் எழுதுபவர்களின் கடமை. ஒரு கதையில் நடக்கும் உரையாடலில் "அவன் கராக்டா பத்து மணிக்கு வ்ந்துட்டான்" என்று எழுதுவதை இயல்பு கருதி ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் விவரிப்பில் 'அவன் பங்க்சுவலா பத்து மணிக்கே வந்துவிட்டான்' என்று எழுதுவதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;___   நல்ல கல்வியறிவு உள்ளவர்களும், குறிப்பாக எழுத்தாளர்களும், மாணவர்களும் தமிழில் ஆங்கிலக் கலப்பை அதிகமாகச் செய்கிறார்கள். பாமரர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும், கிராமத்தாரிடமும் நல்ல தமிழ் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் அவர்களிடேயும் தமிழ் ஆங்கிலத்தால் நீர்த்துப் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழைக் காத்து முன்னெடுத்துச் செல்லவேண்டிய எழுத்தாளர்களின் செயல்பாடு மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;___   "கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?" என்பதை "என்னைக் கொஞ்சம் அங்கே இறக்கி விடுகிறீர்களா?" என்ற முறையிலும் பலர் கேட்பதை நாம் அறிவோம். "இக்கட்டான சூழ்நிலையில் அவர் எனக்கு ஒரு லிஃப்ட் கொடுத்தார்" என்னும் பயன்பாடு "இக்கட்டான சூழ்நிலையில் அவர் என்னை கைதூக்கி விட்டார்"  என்றும் பலரால் கூறப்படுவதை நாம் அறிவோம். இவ்வாறு லிஃப்ட் என்ற சொல் குறித்திடும் பயன்பாடு நம்மிடையே வெகு இயல்பாக இருந்தாலும், இதற்கான ஒரு தனிப்பட்ட பெயர்ச்சொல் நான் யோசித்தவரையில் வழக்கில் இல்லை. இருந்தால் அன்பர்கள் அறியத் தரவேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;___   கூடியவரை ஆங்கிலக் கலப்பைத் தவிர்த்து உரையாடுங்கள். எழுத்தில் மிகச்சில விதிவிலக்குகள் தவிர்த்து முற்றிலும் தமிழிலேயே எழுதுங்கள். லிஃப்ட் என்ற சொல் தமிழ்ப்படுத்தப்பட முடியவில்லை என்கிற காரணத்தாலேயே இந்தத் தலைப்பு தவிர்க்கப் பட்டிருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;___   கொங்குராசாவின் பதிவிலிருந்து ஒரு பகுதி:&lt;br /&gt;&lt;br /&gt;////காலையில பத்து மணி சென்னை அண்ணா சாலை ட்ராபிக்ல, என்னோட முதல் வெற்றிகரமான இன்டர்வ்யூக்கு போக தேனாம்பேட்டை சிக்னல்ல இருந்து நந்தனம் வரைக்கும் லிப்ட் குடுத்திருந்தவர் போட்டிருந்த சட்டையோ முகமோ இன்னைக்கு ஞாபகம் இல்லை, ஆனா போன வாரம் கார்ப்பரேஷன் சர்கிள்ல இருந்து ஜங்ஷன் வரைக்கும் நான் லிப்ட் குடுத்தவங்க கிட்ட இருந்து அடுத்த நாள் காலையில வந்த 'thanks e-card'அ பார்த்ததும், அந்த பதட்டமான குரலும் , (குர்லா டைம் சேஞ்ச் பண்ணிட்டாங்களாம்.. ரிசர்வேஷன் டிக்கெட்ல போடவே இல்லை) அந்த சென்ட் வாசமும் (ஆர்ச்சீஸ் டீப் க்ரீன்?) ஞாபகம் வருது. :)&lt;br /&gt;(லிப்ட் குடுத்த கேப்'ல மெயில் ஐடி வரைக்கும் குடுத்திட்டயான்னு எல்லாம் கேட்டு, விவாகரத்தை கிளப்பக்கூடாது, அதெல்லாம் அப்புறம் நம்ம பதிவுல வச்சுக்கலாம், யூ நோ? திஸ் ஈஸ் அஃபீஷியல் ஃபார் தேன்கூடு.. ஓகே?)////&lt;br /&gt;&lt;br /&gt;___ இவை போன்றவற்றைப் படிக்கும்போது என் நகைச்சுவை உணர்வும் தமிழ் உணர்வும் போட்டிட்டு தமிழ் உணர்வே வென்று மனதில் ஒரு கைப்பை நிற்கச் செய்யும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-115727422194243100?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/115727422194243100/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=115727422194243100' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115727422194243100'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115727422194243100'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/09/blog-post.html' title='கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-115630166762393980</id><published>2006-08-22T19:50:00.000-07:00</published><updated>2008-04-08T09:04:34.410-07:00</updated><title type='text'>மைலாப்பூர் உறவுகள்</title><content type='html'>22-08-2006 சென்னை தினத்தில், நான் சென்னைக்கு வந்து முதன்முதலில் குடியேறி பல ஆண்டுகள் வசித்த மயிலாப்பூர் பற்றி ஒரு கானா இயற்றி உங்களுக்கெல்லாம் சமர்ப்பிக்கிறேன். இதில் சொல்லியிருக்கும் அத்தனை வழிபாடு இடங்களும் நான் கூறிய வரிசையிலேயே மைலப்பூரில் அமைந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மைலாப்பூர் உறவுகள் (கானா)&lt;br /&gt;========================&lt;br /&gt;&lt;br /&gt;-என்னா கஜா இன்னிக்கு ரொம்ப குஷியா இருக்கிற?&lt;br /&gt;&lt;br /&gt;______ கஜாவுக்கு கண்ணாலம் வச்சிகிணேன் - என்&lt;br /&gt;______ மைலாப்பூரு உறவுக்கெல்லாம் சொல்லிகிணேன்&lt;br /&gt;&lt;br /&gt;______ (கஜாவுக்கு.........)&lt;br /&gt;&lt;br /&gt;-உனக்கு ஏதுப்பா உறவெல்லாம். நீ தனிக்கட்டை ஆச்சே?&lt;br /&gt;&lt;br /&gt;______ இன்னா சாமி அப்டி கேட்டே - இந்த&lt;br /&gt;______ மைலாப்பூரே நம்ம பேட்ட&lt;br /&gt;______ நெறயா ஒறவுக்காறங்க கீறாங்க&lt;br /&gt;______ சுகுரா அத்தினிபேரும் வாராங்க!&lt;br /&gt;&lt;br /&gt;-சரி வரிசையா சொல்லு பார்க்கலாம்! யார் யாரயெல்லாம் கூப்பிட்டே?&lt;br /&gt;&lt;br /&gt;______ என்வூடு சித்திரக்கொளம் பக்கந்தான்&lt;br /&gt;______ மொத ஒறவக் கூப்பிட போனேன் மேக்கதான்&lt;br /&gt;______ தேங்கூரு செல்வ வினாயகன கூப்பிட்டேன்&lt;br /&gt;______ கூடவே குந்திகிற வெள்ளீஸ்வரன கூப்பிட்டேன்&lt;br /&gt;______ தெக்க வந்து மசூதில அல்லாவை கூப்பிட்டேன்&lt;br /&gt;______ ______ ______ ______ நம்ம அல்லாவை கூப்பிட்டேன்&lt;br /&gt;______ அப்பால மேக்கபோயி தண்டுமாரிய கூப்பிட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;______ (கஜாவுக்கு.........)&lt;br /&gt;&lt;br /&gt;-ம், அப்பறம்&lt;br /&gt;&lt;br /&gt;______ வடக்க போனா வந்துது நம்ம மடம்&lt;br /&gt;______ ராமகிஸ்ண பரமஅம்சர் கீற எடம்!&lt;br /&gt;______ அத்த தாண்டி வடக்கால சாயி கோயில் வருதுங்கோ&lt;br /&gt;______ அப்பால கொஞ்சம் போனா நவசக்தி புள்ளாருங்கோ!&lt;br /&gt;______ அவரையும் கூப்டுகினு அப்பால போனேங்கோ&lt;br /&gt;______ அம்சமா வந்தாருங்கோ ஆஞ்சநேய சாமிங்கோ!&lt;br /&gt;______ அம்சமா வந்தாருங்கோ ஆஞ்சநேய சாமிங்கோ!!&lt;br /&gt;&lt;br /&gt;______ (கஜாவுக்கு.........)&lt;br /&gt;&lt;br /&gt;-ஏ அப்பாடி, பெரிய பட்டியலா வச்சிரிக்கியே!&lt;br /&gt;&lt;br /&gt;______ அய்யன் திருவள்ளுவரு அங்கே நின்னாரு&lt;br /&gt;______ ______ ______ சிலையா அங்க நின்னாரு&lt;br /&gt;______ அவருக்கு சலாமு அய்யா சொன்னாரு&lt;br /&gt;______ ______ ______ இந்த அய்யா சொன்னாரு&lt;br /&gt;&lt;br /&gt;______ அப்பாலே கிழக்காலே முண்டகன்னி அம்மன கூப்பிட்டேன்&lt;br /&gt;______ அய்யன் திருவள்ளுவர அவரோட கோயில்ல கூப்பிட்டேன்&lt;br /&gt;______ அதுக்கு பக்கத்துல மாதவப் பெருமாள கூப்பிட்டேன்&lt;br /&gt;______ இன்னும் கொஞ்சம் கிழக்காலே கோலவிழியம்மன கூப்பிட்டேன்&lt;br /&gt;______ இன்னும் நாலு எட்டு வச்சி காரணி ஈசனயும் கூப்பிட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;______ (கஜாவுக்கு.........)&lt;br /&gt;&lt;br /&gt;-மூனு பக்கம் சுத்தி வந்திருக்கிற. இப்ப தெக்க திரும்ப போற! சரியா?&lt;br /&gt;&lt;br /&gt;-கரீட் சாமி.&lt;br /&gt;&lt;br /&gt;______ தெக்கால வந்தாக்கா நெடுநெடுன்னு நிக்கிதுங்கோ&lt;br /&gt;______ கடக்கர காத்து வாங்கும் தோமையர் சர்ச்சுங்கோ&lt;br /&gt;______ அவரையும் கூப்பிட்டேன் வாரேன்னு சொன்னாருங்கோ&lt;br /&gt;______ என் வூட்டு பக்கத்துல கேசவப் பெருமாளுங்கோ&lt;br /&gt;______ அவரையும் கூப்பிட்டேன் அவரு நம்ம ஆளுங்கோ&lt;br /&gt;______ அல்லாரையும் கூப்டுகிணு நடுவுக்கு வந்தேங்கோ&lt;br /&gt;______ ______ ______ ஊரு நடுவுக்கு வந்தேனுங்கோ&lt;br /&gt;______ இஷ்ட தெய்வம் கபாலி கோயிலுக்கு வந்தேங்கோ&lt;br /&gt;______ என்னோட&lt;br /&gt;______ இஷ்டதெய்வம் கபாலி கோயிலுக்கு வந்தேங்கோ&lt;br /&gt;&lt;br /&gt;______ (கஜாவுக்கு.........)&lt;br /&gt;&lt;br /&gt;-அடி சக்க, கடைசியா கபாலியப் பாக்கிற.&lt;br /&gt;&lt;br /&gt;______ உள்ள போயிக் கூப்பிட்டேன் மயிலேறும் முருகனத்தான்&lt;br /&gt;______ வற்புருத்தி கூப்பிட்டேன் கற்பக வல்லி அம்மாவத்தான்&lt;br /&gt;______ வெள்ளமாக அருள்புரியும் வெள்ளிமலை காபாலியத்தான்&lt;br /&gt;______ மருடி மருடி கூப்பிட்டேன் கட்டாயமா வந்திடத்தான்&lt;br /&gt;______ அறுபத்து மூனூபேரு நாயன்மாரு சாமிங்கோ&lt;br /&gt;______ அவங்களையும் கூப்பிட்டேன் வருவாங்கோ பாருங்கோ&lt;br /&gt;______ மத்த எல்லா சாமிங்களும் நவக்கிரக சாமிங்களும்&lt;br /&gt;______ அல்லாரையும் கூப்பிட்டேன் அவங்களும் வருவாங்கோ&lt;br /&gt;&lt;br /&gt;______ (கஜாவுக்கு.........)&lt;br /&gt;&lt;br /&gt;-இன்னும் ஏதாவது சாமிங்க பாக்கி கீக்கி இருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;-இல்லாம...&lt;br /&gt;&lt;br /&gt;______ மசூதி தெருவுல ஒரு விசேஷ இடமுங்கோ&lt;br /&gt;______ மசூதி தெருவுல ஒரு விசேஷ இடமுங்கோ&lt;br /&gt;______ அதுங்கோ பேயாழ்வார் அவதார தலமுங்கோ&lt;br /&gt;______ ஆழ்வாருங்க மொத்தம் பத்து பேருங்கோ&lt;br /&gt;______ ஆண்டாளும் இன்னுமொரு ஆழ்வாரு தானுங்கோ&lt;br /&gt;&lt;br /&gt;-உறவுக்காறங்கன்னு சொல்லி சாமிங்களெல்லாம் கூப்பிட்ற..என்ன நியாமப்பா இது?&lt;br /&gt;&lt;br /&gt;______ அல்லாருக்கும் பெரியவரா ஒரு பெரியாழ்வார் பாருங்கோ&lt;br /&gt;______ அவரு இன்னா சொன்னார் கேளுங்கோ&lt;br /&gt;______ அவரு இன்னா சொன்னார் கேளுங்கோ&lt;br /&gt;&lt;br /&gt;-சாமிங்கெல்லாம் உனக்கு உறவுங்கன்னாரா?&lt;br /&gt;&lt;br /&gt;______ ஆமாங்கோ, ஆமாங்கோ அப்படித்தான் சொன்னாருங்கோ!&lt;br /&gt;______ ______ ______ ______ அப்படித்தான் சொன்னாருங்கோ!!&lt;br /&gt;&lt;br /&gt;______ ஊரிலே ஒத்தகாணி நெலம் இல்லேன்னு சொன்னாரு!&lt;br /&gt;______ உறவு மத்தபடிக்கு ஒருத்தர் இல்லேன்னு சொன்னாரு!!&lt;br /&gt;______ உறவு மத்தபடிக்கு ஒருத்தர் இல்லேன்னு சொன்னாரு!!&lt;br /&gt;______ சாமியத்தவிர&lt;br /&gt;______ உறவு மத்தபடிக்கு ஒருத்தர் இல்லேன்னு சொன்னாரு!&lt;br /&gt;______ உறவு மத்தபடிக்கு ஒருத்தர் இல்லேன்னு சொன்னாரு!!&lt;br /&gt;&lt;br /&gt;______ உறவு மத்தபடிக்கு&lt;br /&gt;______ ______ ______ ஒருத்தர் இல்லேன்னு&lt;br /&gt;______ ______ ______ ______ ______ சொன்னாரு...!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;______ *************______ *************______ *************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-115630166762393980?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/115630166762393980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=115630166762393980' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115630166762393980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/115630166762393980'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/08/blog-post_23.html' title='மைலாப்பூர் உறவுகள்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://i100.photobucket.com/albums/m17/oagai/nat9.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-115455179591929715</id><published>2006-08-02T13:10:00.000-07:00</published><updated>2006-08-02T20:34:07.993-07:00</updated><title type='text'>அகச் சிவப்புக் கதிர்கள்</title><content type='html'>ஆடிப் பெருக்கை முன்னிட்டு இயன்றவரை இனிய தமிழில் ஓர் அறிவியல் புனை கதை. இது சென்ற ஆண்டு மரத்தடி யாகூ குழுமத்தில் வெளிவந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அகச் சிவப்புக் கதிர்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;======================&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கி.பி 3006. அன்று ஆடிப்பெருக்கு. அதை நினைத்த வாணிக்கு வந்த முறுவல் அனிச்சையானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வழக்கொழிந்துபோன ஆடிப்பெருக்கு எனும் சிறப்பு தினத்தை இன்றும் இனம் காணும் சொற்ப ஜீவன்களில் ஒருத்தி என்ற நினைவு தந்த முறுவல். மைலாவில் அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னெல்லாம் - அப்போது மைலாவுக்கு மைலாடுதுறை என்று பெயர் இருந்தது - மைலாவில் ஆடிப்பெருக்கு எவ்வளவு கோலாகலமாய் இருந்திருக்கும். அவள் ஒரு வரலாறு விரும்பி. அவளுக்குத் தமிழே தாயும் தந்தையும். வாழ்ந்த வயதும், வரப்போகும் வாழ்வும் தேர்ந்த கல்வியும் எல்லாம் தமிழே. அவள் ஆழ்ந்த கற்பனையில் காவிரியின் கரையில் இளஞ்ஜோடிகளை கற்பனை செய்து பார்த்தபோது இன்று காலை பார்த்திபனுடன் காவிரியின் ஸ்பரிசம் பெற்றதை நினைத்துக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு விஞ்ஞானியான பார்த்திபன் அவளுடைய உயிர்த்தோழன். அவசர அலுவல் அழைப்பில் சென்றிருந்தான். அலுவல் முடிவது எப்போது வரமுடியும் என்று தெரியாமல் உத்தேசமாக நாளை வருவதாகச் சொல்லியிருந்தான். பார்த்திபன் - ஒரு பல்லவ ராஜனின் பெயர் என்று நினைத்த மாத்திரத்தில் இப்போது இச்சையாக முறுவலித்தாள். இப்படி தானே வலிந்து சிரிப்பதை நினைத்தபோது அவளுக்கு கிளர்ச்சியாக இருந்தது. ஒளிர்த்திரை வரவழைத்து கண்ணாடித் தன்மைக்கு (mirror mode) மாற்றினாள். 'அழகை ரசிக்காத அறிவும் ஒரு அறிவா?' கண்ணாடியில் தன் முகத்திற்கு பின்னே பார்த்திபனின் பிம்பத்தை இட்டு அப்போது தன்முகம் மலர்வதை தானே பார்க்க ஆசை கொண்டாள். பார்த்திபன் திரையில் வந்தான். இப்போது அவள் கட்டுப்படுத்த விரும்பாமல் களுக்கென்று சிரித்தாள். குப்புறக் கவிழ்ந்து படுத்து தலையணையில் பார்த்திபனைத் துழாவித் தேடினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் இருந்தாள் வாணி - அறிவிலும் அழகிலும் வாணிதான். அப்படித்தான் பார்த்திபன் சொல்லியிருந்தான். அன்று இருந்த அகமான மனநிலையில் குறுந்தொகையும் வேறு அகப்பொருள் இலக்கியங்கள் பலவற்றையும் மேய்ந்தாள். இந்தப் பசலை என்பது எப்படி இருக்கும் என்ற நெடுநாள் கேள்வியை மீண்டும் கேட்டுக்கொண்டாள். அவள் மனதில் குடையும் வண்டாய் மாறி பார்த்திபனின் ஒரு ரீங்காரம் கேட்டுக்கொண்டேயிருந்தது. 'பார்த்திபன், பார்த்திபன், பார்த்திபன்,.............'. அவள் வாய்விட்டுச் சொன்னாள், ........ "சீ போடா" . பிறகு மெதுவாக இவனின் பெயர் ஜபத்திலிருந்து கழன்று சுகமான பின்னினைவில் (flash back) ஆழ்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சூர் பல்கலையில் 3005ம் ஆண்டின் திசு வளர்ப்பு (Tissue culture) மாநாட்டிற்கு பார்த்திபன் வந்தபோது தான் அவர்கள் முதன்முதலில் சந்தித்தார்கள். அனைத்து விஞ்ஞான ஆவணங்களும் தமிழிலும் வேண்டும் என்கிற அரசாணையால் திசு வளர்ப்பு பற்றிய அவனுடைய கட்டுரை மொழிபெயர்ப்பை நல்ல தமிழில் அழகானதாக மாற்ற வேண்டி அவன் அவளிடம் வந்தான். வாணிக்கு விஞ்ஞானிகள் மேல் எப்பொழுதுமே மரியாதை இருந்தது இல்லை. விஞ்ஞானிகளை பொறியாட்களுக்குச் (robot) சற்று மேலாகவோ அல்லது கீழாகவோதான் அவள் நினைத்திருந்தாள். ஆனால் தன் மொழிபெயர்ப்பை மேலும் அழகானதாக்க முயலும் ஒரு விஞ்ஞானியை மனதளவில் நிராகரிக்க முடியாமல், மனிதனுக்கு அருகில் முதன்முறையாக எண்ணிப் பார்த்தாள். பல சிறந்த மொழிபெயர்ப்புகளை அவனே தமிழில் முன்மொழிந்த போது அவளுள் ஒரு மெல்லிய இரசாயனம் முளைத்தது. இவன் சொன்னதையெல்லாம் தமிழில் முனைவரான அவள் ஒப்புக்கொண்டு பாராட்டியபோது அவனுள்ளும் அதே இரசாயனம் துளிர்த்தது. இவனுள் எப்போது இரசாயனம் துளிர்த்ததோ அப்போதுதான் அவளுக்கு அழகு முளைத்தது போல் அவனுக்கு அவள் திடீரென அழகாக இருந்தாள். எந்த விதிகளும் எந்த காலத்திலும் இப்படி துளிர்க்கும் இரசாயனத்தை என்ன செய்துவிட முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் எல்லா மனித தேவைகளுக்கும் அரசே பலவகை மனிதர்களை உற்பத்தி செய்தபோதும் இயல் மனிதவகை (wild human) என்றழைக்கப்பட்ட இந்த வகை மனிதர்கள்தாம் கற்காலம் முதல் கணிணிகாலம் (கணிணி காலம் கிபி 1950- கிபி 2050) வரையிலான மனிதர்களுக்கு ஓரளவிற்கு ஒப்பானவர்கள். மற்றெல்லோரும் பல திறத்துப் பொறியாட்களே. படி எடுக்கப்பட்டு (cloned) கணினி மூளையால் கட்டுப்படுத்தப் படுபவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சூரில் ஒரு உணவகத்தில் அவர்கள் மீண்டும் முன்பேசி சந்தித்தபோது,&lt;br /&gt;&lt;br /&gt;"வாணி என்ற நல்ல பெயர் உனக்கு வைத்திருக்கிறார்கள்".&lt;br /&gt;&lt;br /&gt;" இல்லை பத்து வயதில் என்னைத் தமிழ்த் துறையில் சேர்த்தபோது பல பெயர்கள் கொடுத்து தேர்ந்தெடுக்க சொன்னார்கள். நானாக வைத்துக் கொண்ட பெயர்தான் இது."&lt;br /&gt;&lt;br /&gt;"நீ எனக்கு மேல் படி (grade) போலிருக்கிறது. அதனால்தான் உன் பெயரை நீயே வைத்துக் கொள்ளும் உரிமை பெற்றவளாயிருக்கிறாய். நான் பிறப்பிலேயே பார்த்திபன் என்ற பெயரோடு விஞ்ஞானியாக உருவாக்கப்பட்டு விட்டேன். பத்து வயதில் திசு விஞ்ஞானி குழுவில் சேர்க்கப்பட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"..........."&lt;br /&gt;&lt;br /&gt;"வாணி..."&lt;br /&gt;&lt;br /&gt;"..........."&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னை ஏனோ எனக்கு மிகவும் பிடிக்கிறது."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா! அதற்கு நான் ஒரு வழி சொல்லட்டுமா? உடனே உடலங்கடிக்குச் (Body shop) சென்று என்னைப்போல் ஒன்றைக் கேட்டு வாங்கி உன்னறைக்கு கூட்டிச் செல். நாமாக இணைவதற்குதான் அரசுக்கு முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். பல விளக்கங்கள் கொடுக்கவேண்டும். சிக்கல்தான். மேலும் நான் அதற்குத் தயாராயில்லை. எனக்கு இதிலெல்லாம் விருப்பமுமில்லை."&lt;br /&gt;&lt;br /&gt;இவனுக்கு தோசையும் அவளுக்கு மாவைப் போன்றதொன்றும் கொணர்ந்த பொறிப்பெண் அவனைப் பார்த்து முறுவல் ஒன்றை உதிர்த்துவிட்டு போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பொறிப்பெண்ணுடனா? நானா? இப்போது வந்து போனதே பார்த்தாயா? ஆண்களைப் பார்த்து முறுவலிக்க வேண்டுமென்று ஜீனில் எழுதப்பட்ட ஒன்றின் கூடவா உறவாடச் சொல்கிறாய்? இல்லை வாணி, எனக்கு உன்னைப் போலவே இருந்தாலும் பொறிப் பெண்ணெல்லாம் வேண்டவே வேண்டாம்.......ஆமாம் அது என்னது மாவும் தேனும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"இது தினை மாவு. சுமார் 3000 ஆண்டுகளுக்குமுன் இது மிகப் பழந்தமிழரின் உணவு."&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்குப் பழமை இந்த அலவுக்குப் பிடிக்குமா. உனக்காக ஒன்று என்னிடம் இருக்கிறது".&lt;br /&gt;&lt;br /&gt;எதிரே அமர்ந்திருந்தவன் அருகே வந்து அமர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாணி, உனக்குப் பழங்காலம் பிடித்திருக்கிறது அல்லவா, உன்னை பழங்காலத்தை உண்மையாய் உணரச் செய்ய என்னால் முடியும். காலப்பொறி ஆராய்ச்சிகளை அரசு தடை செய்திருந்தாலும் பொழுதுபோக்கிற்காக நான் ஒன்று செய்திருக்கிறேன். முடியும் தருவாயில் இருக்கிறது. இது பெரிய தண்டனைக்குரிய குற்றம். ஆனால் வாணி, உன்னிடம் சொல்வதில் எனக்கு பயமில்லை."&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அவர்கள் அடிக்கடி சந்தித்தார்கள். ஒரே அறையில் மைலாவில் வசிக்கவும் ஆரம்பித்தார்கள். நேற்றுதான் அவன் அந்த காலப்பொறியை பூர்த்தி செய்து அவளுக்கும் விளக்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இது இறந்த காலத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்று இயல்பு நேரம் வரை மீளும். இயக்குபவரை ஒலி ஒளி உணரும் நிறமற்ற திசுக்களாக்கி, விரும்பும் காலகட்டத்திற்கு இட்டுச்செல்லும். நிகழ்காலத்தில் உடல் மட்டும் கோமாவில் நிறுத்தி வைக்கப் படும். உயிர்த்திசுக்களை மட்டும் காலத்தின் பரிமானத்தில் பின்னோக்கி இட்டுச்செல்லும். ஒரே நேரத்தில் இருவர் இயக்கலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;சோதிப்பதற்காக இரண்டு ஆண்டுகள் பின் சென்று பார்த்து அந்த அலாதி அனுபவத்தை இருவரும் பெற்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாணி, இந்தப் பொறியில் அகச்சிவப்புக் கதிர்களின் பயன்பாட்டை அதிகம் உபயோகித்திருக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"பார்த்திபா, infra red rays ஐச் சொல்கிறாயா? அது தவறான மொழிபெயர்ப்பு என்று எனக்குத் தோன்றுகிறது. என்றோ யாரோ தவறாய்ச் செய்தது இன்றுவரை வந்திருக்கிறது என நினைக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆம் வாணி. infra என்றால் 'தாழ்ந்த' அல்லது 'கீழான'. காணும் நிறமாலைக்குக் கீழே அதிர்வெண் உடைய கதிர்கள். அதற்கு 'உள்ளே' என்று பொருள்வரும் 'அகச்சிவப்பு' என்பது எப்படிப் பொருந்தும்".&lt;br /&gt;&lt;br /&gt;"சரிதான். உண்மையிலேயே அகச்சிவப்பு கதிர்கள் எவை தெரியுமா பார்த்திபா? ஒரு நாள் தஞ்சூர் உணவகத்தில் என்னை உற்றுப்பார்த்தபடி மிகவும் பிடித்திருக்கிறது என்று சொன்னாயே, அப்போது நீ என் மீது வீசிய கதிர்கள்தான் அகச் சிவப்புக் கதிர்கள். அகம் சிவந்ததால் வீசிய கதிர்கள்".&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ, ஆனால் அவை உன்னை பாதித்ததாக எனக்குத் தெரியவில்லையே".&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த ஆரம்பத்தாக்குதலை இன்னும் ருசித்து முடிக்கவில்லை பார்த்திபா, அதற்குப் பிறகுதான் என் எதிர் தாக்குதல்".&lt;br /&gt;&lt;br /&gt;"என்மீது எப்போது வீசும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"................."&lt;br /&gt;&lt;br /&gt;"வாணி, பொறிப் பெண்களை அடுப்பில் போட்டு பார்க்கட்டுமா? நீ அப்படித்தானே யோசனை சொல்வாய்."&lt;br /&gt;&lt;br /&gt;அவள் ஒன்றும் சொல்லவில்லை. சிறிய மவுனத்துக்குப் பிறகு சொன்னாள்,&lt;br /&gt;&lt;br /&gt;"பார்த்திபா நாளைக்கு ஆடிப்பெருக்கு. நீ வேலைக்கு செல்லுமுன் கேயெம் நகருக்குச் செல்வோம். அங்கு உனக்கு நான் ஒன்றைக் காட்டுகிறேன்".&lt;br /&gt;&lt;br /&gt;(KMநகர்-பழைய நாட்களில் கும்பகோணம் என்று பெயரிருந்தது.)&lt;br /&gt;&lt;br /&gt;"எதைக் காட்டப்போகிறாய் வாணி?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னைச் செய்த பிரம்மாவை".&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா அம்மாவே இல்லாத இன்றைய உலகில் அவள் பிரம்மாவைக் காட்டுவதாகச் சொன்னபோது அவன் ஆர்வமானான். விடியற்காலை கிளம்ப திட்டமிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு கடந்த பல நூற்றண்டுகளாக ஓடுகிறது. நதிநீர் இணைப்பில் காவிரியும், மற்றெல்லா ஆறுகளும் ஜீவ நதிகளான புண்ணியத்தில் மைலாவின் காவிரி மத்தியத்துறையில் படகிலேறி கேயெம்மின் சக்கரைப்படிக்கு வந்தார்கள். அவள் ஏதோ ஒரு கோவிலுக்கு கூட்டிச்சென்று ஒரு சிற்பத்தைக் காட்டினாள். அந்த சிற்பம் ஒரு தூணில் கல்லாய் சமைந்திருந்த ஆணும் பெண்ணும் தழுவிய நிலையில் இருந்ததைக் காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தப் பெண்ணைப்பார் பார்த்திபா. என்னைப் போல் இல்லை?"&lt;br /&gt;&lt;br /&gt;அவன் ஆச்சர்யக் கடலில் மூழ்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அடேயப்பா! வாணி, அப்படியே உன்னை உரித்து வைத்தது போலிருக்கிறதே!"&lt;br /&gt;&lt;br /&gt;"பார்த்திபா-உன்னைப் போலொரு முன்தலைமுறை திசு விஞ்ஞானி இவளைப் பார்த்துதான் எனக்கு வித்திட்டிருக்கிறான் என்று ஊகிக்கிறேன்".&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம் வாணி, நிச்சயம் உன் யூகம் சரி".&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சிற்பத்தில்,&lt;br /&gt;நின்று பிணைந்த நிலையில்,&lt;br /&gt;அங்கங்கள் அழுத்தி அழுந்திய நிலையில்,&lt;br /&gt;பித்தம் தலைகேறிய நிலையில்,&lt;br /&gt;தாங்களே உலகாய் நின்றது அந்த இணை,&lt;br /&gt;சரியாய்க் காண்பவர்களிடம்&lt;br /&gt;கோடிக்கண்கள் கேட்கும் அற்புத சிற்பம்.&lt;br /&gt;ஆடைகள் ஏதுமின்றி&lt;br /&gt;குறைந்த ஆபரணங்களே&lt;br /&gt;அங்கங்களை மூடியன. &lt;br /&gt;ஆண்மகன்&lt;br /&gt;தலை குனிந்து கீழ்நோக்கி,&lt;br /&gt;வலக்கரம் பெண்ணின் முகவாயாயை&lt;br /&gt;மென்மையாய் முட்டிட்டு மேல் தூக்க,&lt;br /&gt;அவள்&lt;br /&gt;அகல விரிந்த அகக்கண்களொடும்,&lt;br /&gt;பாசாங்காய் குவிந்து மூடிய புறக்கண்களொடும்&lt;br /&gt;முகம் பூரித்த பெண்மகளாய்&lt;br /&gt;ஐக்கியத்தின் முடிவில் இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் முகம் தன்னுடையாதா என்று பார்த்தான் பார்த்திபன். அந்த ஆடவனின் இடக்கரம் செல்லுமிடத்தை ஊகித்து முறுவலித்தான். கிறங்கியபடி சொன்னான்,&lt;br /&gt;&lt;br /&gt;"வாணி என் திசுக்களை உருமாற்றும் சக்தி இந்த கற்சிலைக்கு எப்படி வந்தது? என் அகமும் சிவந்து தவிக்கிறதே."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் உன் கதிர்களை உணர்கிறேன் பார்த்திபா. இந்த சிற்பத்திற்குப் பின் ஒரு கதை இருக்கிறது. இவன் ஒரு பல்லவ ராஜன். 7ம் நூற்றாண்டில் சோழ நாடு பலவர் வசமிருந்தபோது இங்குவந்து இந்தப் பெண்ணைப் பார்த்தான். அனைத்தையும் மறந்து அவளைச் சேர்ந்தான். பலநாள் தன் நாடுமறந்து இங்கேயே இருந்தவன் பின் இவளுக்கு பெரும் சிறப்பு செய்தான். பின்னாளில் சோழர்கள் அவர்கள் நினைவாகச் செய்த சிற்பமிதுவென ஒரு கல்வெட்டு சொல்கிறது".&lt;br /&gt;&lt;br /&gt
