'பூங்கா' வைப் பற்றிய ஐயங்கள்.
தமிழ்மணத்தின் பூங்காவைப் பற்றி எனக்கு பல ஐயங்கள் எழுகின்றன.
16ம் தேதிய வெளியீட்டில் மரணதண்டனை பற்றிய ஒருதலையான பதிவுகளை அதிகம் கண்டதற்கு நான் கற்பித்துக் கொண்ட காரணம் தமிழ்மணத்தில் அதிகமான பதிவுகள் ஒரு சார்பாக வந்ததால்தான் இப்படி என்பதுதான்.
பூங்கா சொல்கிறது,
//புதிய பார்வைகளையும் பரந்துபட்ட சிந்தனைகளையும் உயிர்ப்பான மொழியிலே வெளிப்படுத்தும் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து//
மேலும்,
// ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெறும் பதிவுகளுக்கு எண்ணிக்கை வரையறை எதுவும் இல்லை. பதிவரினாலே அனுமதி தரப்பட்ட தரம்வாய்ந்ததெனத் தோன்றும் படைப்புகள் அனைத்தும் தொகுக்கப்பெறும். //
ஆகவே தமிழ்மணம் எப்படியோ பூங்காவும் அப்படியே என்று எடுத்துக் கொண்டேன்.
ரவி ஸ்ரீனிவாஸ் இதை சுட்டிய போது ரவியின் கருத்துக்களை பதிப்பது பூங்காவின் தனி உரிமை என்ற அளவிலேயே நான் எடுத்துக் கொண்டேன். ஆனால் பூங்காவின் விளக்கம் எனக்கு பல ஐயங்களை உண்டாக்குகிறது.
பூங்காவின் தொகுப்பாளர் மேசையிலிருந்து:
// இறையாண்மை என்பது இந்த நூற்றாண்டின் பயங்கரவார்த்தை. ஒவ்வொரு மனிதனுக்கும் நாகரீகத்தின் வழி வந்ததாகக் கற்பிக்கப்படும் இறையாண்மை கடைசியில் சில அரசியல்வாதிகளின் நலன்களுக்காக நாடுகளுக்கு இருப்பதாகவும், மாற்றமுடியாததாகவும் கற்பிக்கப்படுகிறது//
இந்தக் கருத்துக்கள் ஒரு பதிவிலிருந்து அறியப் படலாம். ஒரு தொகுப்பாளர் மேசையிலிருந்து அறியப்படும்போது, இது ஒரு அப்பழுக்கற்ற சார்பு நிலையாக எனக்குப் படுகிறது.
லக்கிலுக்கின் பதிவு பற்றி:
// கட்டுரையளவிலே நன்றாகவிருந்தும், இவ்வாரமுங்கூட, இதே மரணதண்டனை தொடர்பான லக்கி லுக்கின் “முகமது அப்ஸல் யார்? உண்மை நிலவரம் என்ன?” என்ற பதிவும் இன்னமும் சான்றுகளோடு விரிக்கப்பட்டால்மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படும் என்ற ஆசிரியர்குழு உள்ளேயான விவாதத்தின்பின்னாலே தீர்மானிக்கப்பட்டது. //
இன்னமும் சான்றுகள் விரிக்கப்படவேண்டிய நிலையில் இருக்கும் கட்டுரை என்று பூங்காவே கருதும் ஒரு அரசியல் கட்டுரை எப்படி கட்டுரையளவில் நன்றாக இருக்கிறது என்று குறிப்பிடப்படுகிறது என்று தெரியவில்லை.
அந்தப் பதிவை நானும் படித்திருக்கிறேன்.
அதே விளக்கத்தில்:
// பூங்கா ஆசிரியர் குழுவுக்கும் ஒரு பொதுநோக்கும் ஓரளவுக்குக் கருத்தளவிலே ஒன்றிச் செயற்படும் அரசியல், சமூகச்சித்தாந்தச்சாய்வும் உண்டு. //
இது பொதுவான ஒரு கருத்தாக இருந்தாலும், இந்த விளக்கத்தை முழுமையாகப் படித்தபின், தொகுப்பாளர் மேசையை படிக்கும் போது பூங்காவைப் பற்றிய அறிவிப்பிலும் விவரிப்பிலும் சொல்லாமல் விடப்பட்ட பலவற்றை எண்ண வேண்டி வருகிறது. தமிழ்மணத்தில் ஒரு சார்புடைய பதிவுகள் மிக அதிகமாக வருகின்றன என்பதற்குக் காரணம் அந்த வகைப் பதிவாளர்கள் அதிகமாக இருப்பதும் அவர்கள் அதிகமாக எழுதுவதும். ஆனால் அந்த எழுத்துகளின் தொகுப்பே பூங்காவோ அல்லது பூங்காவே அதற்குத் தானோ என்பதான ஐயம் எனக்கு வந்திருக்கிறது.



8 Comments:
This post has been removed by a blog administrator.
This post has been removed by a blog administrator.
This post has been removed by a blog administrator.
This post has been removed by a blog administrator.
This post has been removed by a blog administrator.
This post has been removed by a blog administrator.
This post has been removed by a blog administrator.
This post has been removed by a blog administrator.
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home