Friday, February 02, 2007

நல்ல காலம் வருகுது

நண்பர்களே,

இந்த பாடலைக் கேளுங்கள். மஹாகவி பாரதியின் பாடலை அவர் பேரன் ராஜ்குமார் பாரதி பாடியிருக்கிறார்.

சுட்டி: http://www.youtube.com/watch?v=TLB4LOpWxlo

பாடல் வரிகள்:

புதிய கோணங்கி:

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்லகாலம் வருகுது நல்லகாலம் வருகுது
சாதிகள் சேருது சண்டைகள் குறையுது
சொல்லடி சொல்லடி சக்தி மாகாளீ
வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு

தரித்திரம் போகுது செல்வம் வருகுது
படிப்பு வளருது பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான் ஐயோவென்று போவான்

வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்
சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது
யந்திரம் பெருகுது தந்திரம் வளருது
மந்திரமெல்லாம் வளருது வளருது

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சொல்லடி சொல்லடி மலையாள பகவதீ
அந்தரி வீரி சண்டிகை சூலி
குடுகுடு குடுகுடு

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது
தொப்பை சுருங்குது சுருசுருப்பு விளையுது
எட்டு லச்சுமியும் ஏறி வளருது
பயம் தொலையுது பாவம் தொலையுது
சாத்திரம் வளருது சாதி குறையுது
நேத்திரம் திறக்குது நியாயம் தெரியுது
பழைய பைத்தியம் படீலென தெளியுது
வீரம் வளருது மேன்மை கிடைக்குது
சொல்லடி சக்தி மளையாள பகவதி
தர்மம் பெருகுது தர்மம் பெருகுது.

2 Comments:

At February 02, 2007 5:48 PM, Blogger ஓகை said...

சோதனைக்காக.

 
At February 02, 2007 8:32 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

என்னால் பாடலைக் கேட்க முடியவில்லையே. மீண்டும் நாளை முயன்று பார்க்கிறேன்.

 

Post a Comment

<< Home