Tuesday, February 13, 2007

துயர சாகரம்.

துயர சாகரம்.

தேன்கூட்டை நடத்துவது சாகரன் என்பவர் என்று சில மாதங்கள் முன்புதான் தெரியும். சென்ற மாத வலைப்பதிவர் சந்திப்பில் இனிப்புகளுடன் எல்லோருடனும் அறிமுகப் படுத்திக் கொண்ட சிரித்த முகம் கொண்ட அந்த இளைஞர் இன்று இல்லை என்பதை என்னால் இன்னும் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கிறது.

இரு வாரங்களுக்கு முன் எனக்கு அவர் அனுப்பிய ஒரு மின்னஞ்சலுக்கு நான் இன்னும் பதிலிடாமலே இருக்கிறேன். சென்ற ஞாயிறு அன்று காலை என்னுடன் அங்கிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏன் பதில் போடவில்லை என வினவினார். இப்போது குற்ற உணர்வில் மனம் கொதிக்கிறது.

எல்லோருக்கும் இனியராய் இருந்திருக்கிறார். என்னுடன் தொலைபேசியில் மணிக்கணக்கில் சென்ற மாதத்தில் பேசினார். தேன்கூட்டுக்காக பல திட்டங்கள் வைத்திருந்தார்.

ஒரே முறை நேர்சந்திப்பும் சில மணிநேர தொலைபேசி பேச்சுகளுமே அவருடன் உறவுகளாகக் கொண்ட எனக்குள் ஊற்றெடுக்கிறதே இத்தனை சோகம், அவர் குடும்பத்தினரின் சோகத்தை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.

யார் ஆற்றுவார் இதை? நாளே ஆற்றவேண்டும்.

0 Comments:

Post a Comment

<< Home